Daily Manna
0
0
42
பரிந்து பேசுதல் பற்றிய தீர்க்கதரிசன பாடம்-1
Tuesday, 12th of August 2025
Categories :
மன்றாட்டு (Intercession)
“தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது. எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான். அதற்கு யூதா: உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னான்.” ஆதியாகமம் 43:1-3
பஞ்சம் கடுமையாக இருந்தது. யாக்கோபின் குமாரர்கள் எகிப்துக்கு முதல் பயணத்திலிருந்து கொண்டு வந்த உணவு தானியங்கள் தீர்ந்துவிட்டன. அவர்கள் இப்போது பட்டினியால் மரணத்தின் பேரழிவில் நடக்கிறார்கள். யாக்கோபு, அவர்களின் தந்தை, அவர்கள் உணவைப் பெறுவதற்கு எகிப்துக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எல்லோரும் அமைதியாக இருப்பதைக் கவனியுங்கள், ஆனால் யூதா தனது தந்தை யாக்கோபிடம் தனது இருதயத்தை வெளிப்படுத்துகிறார்.
இது நமக்குச் சொல்கிறது:
•தகப்பனிடம் தன் உள்ளத்தை வெளிப்படுத்துபவரே பரிந்துரை செய்பவர்.
•ஒரு பரிந்துரையாளர் என்பது தந்தைக்கு சூழ்நிலையை தெளிவாக முன்வைப்பவர்.
“பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டுப்போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும். அவனுக்காக நான் உத்தரவாதம்பண்ணுவேன்; அவனை என்னிடத்திலே கேளும், நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக. நாங்கள் தாமதியாதிருந்தோமானால், இதற்குள்ளே இரண்டாந்தரம் போய்த் திரும்பி வந்திருப்போமே என்றான்.”
ஆதியாகமம் 43:8-10
யூதாவின் வார்த்தைகளைக் கவனியுங்கள். "அவனுக்கு நானே உத்தரவாதம்பண்ணுவேன். அவனை திரும்ப அழைத்து வரவில்லையென்றால் நானே பழியை சுமக்கிறேன்". சகோதரர்கள் யாரும் பேசவில்லை. அவர்களுக்கு தொல்லை இல்லை போலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாதவர்கள்ப்போல் இருந்தார்கள். ஆனால் இங்கே யூதா அவர்கள் அனைவரின் சார்பாகவும் திறப்பிலே நிற்கிறார்.
இது மீண்டும் நம்மிடம் சொல்கிறது:
மன்றாடுபவர் என்பது திறப்பிலே நிற்கத் தயாராக இருப்பவர்.
யூதாவின் பரிந்துரை அவரது குடும்பத்தைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், முழு கோத்திரத்தையும் பஞ்சம் மற்றும் மரணத்திலிருந்து காப்பாற்றியது. அதேபோல், உங்கள் பரிந்துரை உங்கள் குடும்பத்தை மட்டுமல்ல, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை உயிர்ப்பிக்கும்.
தேவன் தேடும் இரண்டு வகையான ஜனங்கள் உள்ளனர்
1. ஆராதிப்பவர்
யோவான் 4:23-24, அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ligiravargalai தேடுகிறார் என்று நமக்குச் சொல்கிறது.
2. மன்றாடுபவர்
திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேdugiraar,
எசேக்கியேல் 22:30
திறப்பிலே நிற்கக்கூடிய ஒருவரை தேவன் இன்னும் தேடுகிறார். தேவன் ஒரு பரிந்துரை செய்பவரைக் கண்டுபிடிக்க முடிந்தால், அவருடன் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு நபராக தேவன் இருப்பார்.
உண்மை என்னவென்றால், நீங்கள் இருவராகவும் இருக்க முடியும் - ஆராதிப்பவர் மற்றும் மன்றாட்டு செய்பவர். ஆபிரகாம் ஆராதிப்பவராகவும் இருந்தார், மன்றாடுபவராகவும் இருந்தார். அதேப்போல் ஆராதிப்பவராகவும் இருந்தார், மன்றாடுபவராகவும் இருந்தார்.
Bible Reading: Jeremiah 5-6
Prayer
(ஒவ்வொரு குறிப்பையும் குறைந்தது ஒரு நிமிடமாவதுஜெபம் செய்யவும்)
பிதாவே, இயேசுவின் நாமத்தில், கருணா சதனுடன் இணைந்துள்ள ஒவ்வொரு நபருக்கும் இந்த ஆண்டு அவர்களின் இயற்கைக்கு அப்பாற்பட்ட திருப்பத்திற்கு சிறந்த ஆவியுடன் அதிகாரம் அளியும்.
பிதாவே, இயேசுவின் நாமத்தில், கருணா சதன் அமைப்புகளில் நோயுற்றவர்களும், வியாதியுள்ள அனைவரையும் குணமாக்கி, பூரண நலமடையச் செய்வீராக.
பிதாவே, இயேசுவின் நாமத்தில், கருணா சதன் அமைப்புகளுடன் இணைந்திருக்கும் ஒவ்வொரு நபரையும் பிசாசின் அனைத்து கட்டுகளிலிருந்தும் விடுவித்து, அவர்களின் சுதந்திரத்தை இப்போதே நிலைநாட்டும். ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● நாள் 02:40 நாட்கள் உபவாச ஜெபம்● துதி தேவன் வசிக்கும் இடம்
● உங்கள் பலவீனத்தை தேவனிடம் கொடுங்கள்
● விசுவாசத்தால் பெறுதல்
● நீதியின் வஸ்திரம்
● சிறையில் துதி
● தேவன் பலன் அளிப்பவர்
Comments