Daily Manna
1
0
67
அகாப்பே அன்பில் எப்படி வளருவது
Wednesday, 1st of October 2025
Categories :
அன்பு (Love)
ஆவியின் கனி (Fruit of the Spirit)
அகாப்பே அன்பு என்பது மிக உயர்ந்த அன்பு. இது 'தேவனின் ஒரு வகையான அன்பு' என்று குறிப்பிடப்படுகிறது. அன்பின் மற்ற அனைத்து வடிவங்களும் பரஸ்பர கொடுக்கல் வாங்கல் அல்லது நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அமைந்தவை. அகாப்பே அன்பு நிபந்தனையற்ற அன்பு. கிறிஸ்தவர்கள் அனைவரும் பகிர்ந்துகொள்ள விரும்பும் அன்பின் வகை இதுவாகும். உண்மையான அகாப்பே அன்பு எப்போதும் ஒரு பரிசு.
“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”
ரோமர் 5:8
தேவன் நம்மீது தம்முடைய அகாப்பே அன்பைக் காட்டியபோது, நாம் இன்னும் பாவிகளாக இருந்தோம். தேவனின் அன்பிற்கு ஈடாக நாம் எதுவும் கொடுக்க முடியாது.
“ஆவியின் கனியோ, அன்பு (Agape), சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.”
கலாத்தியர் 5:22-23
ஆவியின் கனிகளின் பட்டியலில் அகாப்பே அன்பு முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஏனெனில் அது தான் அனைத்திற்கும் அடித்தளம். அன்பு என்பது ஆவியின் கனி மட்டுமல்ல; மற்ற அனைத்து கனிகளையும் உற்பத்தி செய்யும் வேர் இதுவாகும். சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம் ஆகியவற்றின் முக்கிய ஆதாரம் அன்பு.
ஆவியின் கனிகள் பரிசுத்த ஆவியிலிருந்து வெளிப்படுகிறது. நாம் பரிசுத்த ஆவியானவருடன் நமது அனுதின ஐக்கியத்தை பராமரிப்பதில் கவனமாக இருப்போம். அவர் தேவனின் அன்பை நம் இருதயங்களில் ஊற்றுவார். (ரோமர் 5:5-ஐ வாசியுங்கள்)
Bible Reading: Jonah 2-4; Micah 1-3
Prayer
பிதாவே, என் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் உம்மை நேசிக்க எனக்குக் கற்றுத்தாரும். இயேசுவின் நாமத்தில் ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● கோபத்தின் பிரச்சனை● பின்னடைவு முதல் திரும்ப எழும் வரை
● உச்சக்கட்ட இரகசியம்
● நீங்கள் அவர்களை பாதிக்க வேண்டும்
● தேவன் - எல்ஷடாய்
● நாள் 15: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● இது எவ்வளவு முக்கியம்?
Comments