हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. சாஸ்திரிகளிடமிருந்து கற்றுக்கொள்ளுதல்
Daily Manna

சாஸ்திரிகளிடமிருந்து கற்றுக்கொள்ளுதல்

Friday, 8th of December 2023
0 0 1167
Categories : Wise men
"ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள்.” மத்தேயு‬ ‭2‬:‭1‬-‭2‬ ‭

சிறு குழந்தையாக இருந்தபோது, ​​சாஸ்திரிகள் பற்றியும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைச் சந்திக்க அவர்கள் வெகுதூரம் பயணித்ததைப் பற்றியும் என் அம்மா பேசுவதை நான் அடிக்கடி கேட்பேன். என் சிறிய மனதுடன், சாஸ்திரிகள் தங்கள் ஒட்டகங்களில் எப்படி பயணித்திருப்பார்கள் என்று நான் அடிக்கடி கற்பனை செய்துகொண்டிருப்பேன்.

இந்த வேதப் பகுதியைப் பற்றி நான் தியானித்துக் கொண்டிருந்தபோது, ​​நம்முடைய கர்த்தராகிய இயேசுவைச் சந்திக்க வந்த சாஸ்திரிகளிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடிய சில வாழ்க்கைப் பாடங்களை பரிசுத்த ஆவியானவர் என் மீது பதித்தார்.

1: புதிய ஆட்சியாளர்களை உயரதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். சாஸ்திரிகள் புறஜாதியார் என்று வேதம்  சொல்கிறது. தேவன்  எதிர்பாராத இடங்களில் இருந்து  தம்மை ப் பின்பற்றுபவர்களை அழைக்கிறார்.

2: உண்மையான ஞானமுள்ள ஆண்களும் பெண்களும் தேவனை தேடுபவர்கள். உலகத்தின் ஞானம் முட்டாள்தனம் என்றும், அழிந்து போவது மட்டுமே என்றும் அவர்கள் அறிவார்கள். தேவனையும் அவருடைய வழிகளையும் தேடுவதில்தான் உண்மையான ஞானம் அடங்கியிருக்கிறது என்பதை அவர்கள் முழுமையாக அறிந்திருக்கிறார்கள்.

3: உண்மையான ஞானிகள் ஆராதிப்பவர்கள். எல்லாவற்றையும் சிருஷ்டித்தவரயே ஆராதிப்பவர்கள். அவர்கள் தங்கள் பொருள் (தங்கள் உடைமைகள்), தங்கள் நேரம் மற்றும் திறன்களால் அவரை ஆராதிப்பவர்கள்.

4: சாஸ்திரிகள் தாங்கள் வழிபடப் பயணித்த ஆண்டவர் இயேசுவைப் பற்றி விசாரித்தபோது,
“அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.” மத்தேயு‬ ‭2‬:‭7‬-‭9‬

ஏரோது புதிய அரசனைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததால் அவனிடம் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று சாஸ்திரிகள் சொப்பணத்தில் எச்சரிக்கப்பட்டனர். ஞானிகளுக்கு யாருடன் பழகுவது என்பது தெரியும். சரியான இணைப்புகள் அவர்களை உருவாக்க முடியும் என்பதையும், தவறானவர்கள் அவற்றை உடைக்க முடியும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

5: தேவனிடமிருந்து யாரும் வெகு தொலைவில் இல்லை என்பதை ஞானிகள் அறிந்திருந்தனர். தம்மிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும் j.ஜனங்களை சென்றடைய தேவன் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார். இந்த காரியத்தில், தேவன் அவர்களை வழிநடத்த கிழக்கில் ஒரு நட்சத்திரத்தைப் பயன்படுத்தினார். பயணம் எளிதானது அல்ல என்றாலும், அவர்கள் தெய்வீகமாக வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை அவர்கள் அறிந்தார்கள்.

தேவன் யாரையும் கைவிடமாட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களும், உங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தும் உங்களை அழைத்தவரிடமே உங்களை ஈர்க்கும், ஏனென்றால் நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள், அவர் உங்களுக்கு தேவை என்பதை தேவன் devan அறிவார்.

சாஸ்திரிகளிடமிருந்து வரும் இந்த துணுக்குகள் நீங்கள் கர்த்தருடன் இன்னும் விடாமுயற்சியுடன் நடக்க உதவும் என்று நான் நம்புகிறேன். சாஸ்திரிகளிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் என்ன என்பதை கருத்துகளில் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
Prayer
ஒவ்வொரு  ஜெப விண்ணப்பமும் குறைந்தது 2 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஜெபிக்க வேண்டும் 

தனிப்பட்ட  ஆவிக்குரிய வளர்ச்சி 
கர்த்தராகிய இயேசுவே, நீரே என் ஞானம். என் வாழ்நாள் முழுவதும் உமது வழிகளில் நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தந்தையே, என்னைச் சுற்றிலும், சரியான நபர்களுடன் என்னை இணைக்க ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!

குடும்ப இரட்சிப்பு 
ஆண்டவரே, இரட்சிப்பைப் பெறாத ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரையும் உமது ஆவியானவர் கண்டித்து, உமது இரட்சிப்பின் பரிசை ஏற்றுக்கொள்ளும் கிருபையை அவர்களுக்கு  வழங்குவீராக.

ஆண்டவரே, உமது நற்குணம் என் குடும்பத்தை மனந்திரும்புவதற்கும், இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும். அவர்களின் மனதைத் திறந்து கிறிஸ்துவைப் பற்றிய உண்மையை அவர்களுக்குக்  காட்டும்.

பொருளாதார முன்னேற்றம் 
என் வாழ்க்கையில் மலட்டுத்தன்மையை ஊக்குவிக்கும் கீழ்ப்படியாமையின் ஒவ்வொரு சரீர மனப்பான்மையும் இன்று இயேசுவின்  நாமத்தில்  நிறுத்தப்படுவதாக.
 
KSM சர்ச் வளர்ச்சி 
பிதாவே, இயேசுவின்  நாமத்தால், KSM இன் ஒவ்வொரு போதகர், குழு மேற்பார்வையாளர் மற்றும் J-12 தலைவர் மீதும் உங்கள்  ஆவியை பொழிவீராக.  ஆவிக்குரிய ரீதியிலும் உங்களுக்கு சேவை செய்வதிலும் அவர்களை வளரச்  செய்யும்.

தேசம் 
இயேசுவின்  நாமத்தால் பிதாவே, நம் தேசத்திற்கு எதிரான துன்மார்க்கரின் ஒவ்வொரு தீய கற்பனையும் தரையில் விழட்டும், இதன் விளைவாக நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

Join our WhatsApp Channel


Most Read
● இயேசு ஏன் கழுதையிiன் மேல் பவனி வந்தார்?
● அந்நிய பாஷையில் பேசுங்கள் மற்றும் ஆவிக்குரிய வாழ்வில் புத்துணர்ச்சி பெறுங்கள்
● திருப்தி நிச்சயம்
● அந்தப் பொய்களை அம்பலப்படுத்துங்கள்
● மலைகளை பெயர்க்கத்தக்க காற்று
● போதுமானதை விட அதிசயம் செய்யும் தேவன்
● பூமிக்கு உப்பா அல்லது உப்புத்தூணா?
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login