हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. நீங்கள் தனிமையுடன் போராடுகிறீர்களா?
Daily Manna

நீங்கள் தனிமையுடன் போராடுகிறீர்களா?

Wednesday, 28th of June 2023
1 1 905
Categories : Loneliness
நீங்கள் ஆதியாகமம் 1- ம்அதிகாரத்தில் படித்தால் தேவன்பூமியையும் அதில் உள்ள சகலவற்றையும் படைத்ததைக் காண்பீர்கள். சிருஷ்டிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும், தேவன்தனது வேலையை இடைநிறுத்தி மதிப்பீடு செய்தார். "அது நல்லது என்று தேவன் கண்டார்" (ஆதியாகமம் 1:4, 10, 12, 18, 21, 25)

இறுதியாக, தேவன் தனது சொந்த சாயலில் மனிதனைப் படைக்க முடிவு செய்தார். பின்னர் அவர் ஆதாமை தனது சொந்த ரூபத்திலும் சாயலிலும் படைத்தார். முதல் மனிதனான ஆதாம், ஏதேன் தோட்டத்தில் வேறு எந்த உயிரினத்தையும் போல் இல்லை. ஆனால் ஆதாமை தோட்டத்தில் வைத்த பிறகு, இன்னும் ஏதோ ஒன்று குறைவுள்ளதாய் தேவன் கவனித்தார்.

ஆதாம் பல அற்புதமான விலங்குகள் மற்றும் பறவைகளால் சூழப்பட்டிருந்தாலும், அவர் மிகவும் நல்ல சூழலில் இருந்தாலும் - அவர் தனிமையில் இருப்பதை தேவன்கண்டார். உண்மை என்னவென்றால், நீங்கள் ஒரு கூட்டத்தில் இருந்தாலும்கூட, இன்னும் தனிமையாக உணரமுடியும். ஆதாமின் தனிமைதான் தேவனின் கவனத்தை ஈர்த்தது, தேவன் நல்லதல்ல என்று அழைத்த முதல் காரியம்– தனிமை. மேலும் கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார், "மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல (ஆதியாகமம் 2:18)

கர்த்தராகிய இயேசு சிலுவையில் தொங்கியபோது, ​​அவர் தம்முடைய தாயையும் அவர் நேசித்த சீஷரையும் நிற்பதைக் கண்டார். பின்னர் அவர் தனது தாயிடம், ஸ்திரீயே, இதோ உன் மகன்!" பின்னர் அவர் சீஷனிடம், "இதோ உன் தாய்!" அந்த மணி நேரத்திலிருந்து அந்தச் சீஷன் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். (யோவான் 19:26-27)

இயேசு ஏன் இப்படி கூறினார்? நம் ஆண்டவர் சிலுவையில் தொங்கிய நேரத்தில், வலியும் வேதனையில் இருந்த போதிலும் கூட அவர் தனது தாயை தனித்தும்தனிமையாகவும் இருக்கிறதை கண்டார் என்று நான் நம்புகிறேன். வயதான காலத்தில் தன்னைக் கவனித்துக் கொள்ள எப்படி அவர்களை விட்டுவிட முடியும்? உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்ற சிமியோனின் தீர்க்கதரிசனத்தை கண்டிருக்கலாம். (லூக்கா 2:35) சிலுவையில் இருந்தபோதும், இயேசு தம் தாயின் தேவையைப் பூர்த்தி செய்தார். அவரின் தனிமையை அவர் போக்கினார்.

சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த போதிலும் மீட்பர் ஒருவரின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றால், இன்று அவர் பரலோகத்தில் மாட்சிமையின் சிம்மாசனத்தின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும் போது எவ்வளவு அதிகமாக இருக்கும். (எபிரெயர் 8:1)

நீங்கள் தனிமையுடன் போராடுகிறீர்களா? நீங்கள் தனியாகவும் நிராகரிக்கப்பட்டதாகவும் உணர்கிறீர்களா? அப்படியானால் இயேசுவை நோக்கிப் பார்க்க வேண்டிய நேரம் இது - அனைத்தையும் அனுபவித்தவர், உங்கள் தனிமையிலிருந்து உங்களை விடுவிக்கும் வல்லமை கொண்டவர்.
Prayer
ஒவ்வொரு  ஜெபக் குறிப்பையும்  குறைந்தது 3 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேல்  ஜெபம் செய்யப்பட வேண்டும்

ஆவிக்குரிய வளர்ச்சி
பிதாவே, இந்த நேரத்தில் நான் எப்படி உணர்ந்தாலும் பொருட்டியில்லை. "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று வாக்களித்திருக்கீறீர். நான் இந்த வார்த்தையைக் பற்றிக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!

குடும்ப இரட்சிப்பு
நான் முழு மனதுடன் நம்புகிறேன்,  நானும் எனது  வீட்டாரும் உம்மையே சேவிப்போம் என்று அறிக்கை செய்கிறேன். வரும் என் தலைமுறையும் கர்த்தருக்கு சேவை செய்யும். இயேசுவின்  நாமத்தில் .

 பொருளாதார திருப்புமுனை 
 பிதாவே, எனக்கு வரும் ஒவ்வொரு வாய்ப்பையும் அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தேவையான தொழில் மற்றும் மனத் திறன்களைக்  தாரும். இயேசுவின்  நாமத்தில். என்னை ஆசீர்வாதமாக  மாற்றும்.

 சபை வளர்ச்சி
 பிதாவே நேரலை ஆராதனைகளை,  பார்க்கும் ஒவ்வொரு நபரும் குறிப்பிடத்தக்க அற்புதங்களைப் பெறட்டும், அதைப் பற்றி கேட்கும் அனைவரையும் திகைக்க வைக்கும். இந்த அற்புதங்களைப் பற்றிக் கேள்விப்படுபவர்களும் உங்களை நோக்கித் திரும்பும் நம்பிக்கையைப் பெற்று, அற்புதங்களைப் பெறட்டும்.

தேசம்
பிதாவே, இயேசுவின்  நாமத்தில், இருளின் பொல்லாத  வல்லமையின் அமைக்கப்பட்ட அழிவின் ஒவ்வொரு பொறியிலிருந்தும்  எங்கள் தேசத்தை (இந்தியா) விடுவித்தருளும்.

Join our WhatsApp Channel


Most Read
● நன்றி செலுத்தும் ஸ்தோத்திரபலி
● தீர்க்கதரிசன வார்த்தையைப் பெற்ற பிறகு என்ன செய்வது?
● தலைப்பு: பாவத்தின் தொழுநோயைக் கையாளுதல்
● உங்கள் மனதிற்கு உணவளியுங்கள்
● எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள்
● தேவனின் 7 ஆவிகள்: ஞானத்தின் ஆவி
● வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் அரணான இடங்களைக் கையாளுதல்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login