Daily Manna
0
0
1275
இன்று கண்டுப்பிடிக்கக்கூடிய அரிய விஷயம்
Saturday, 4th of May 2024
Categories :
விசுவாசம் (Loyalty)
வேதம் கூறுகிறது, ”மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?“ நீதிமொழிகள் 20:6
ஒரு மூத்த பெண்மணியிடம் அவள் ஏன் தன் நாயை மிகவும் நேசிக்கிறாள் என்று கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. அவர் பதிலளித்தார், "பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மக்களை விட நாய்கள் மிகவும் விசுவாசமானவை." அவளின் பதில் எப்போதும் என் மனதில் நினைவில் இறுகிறது.
அது அலுவலகமாக இருகட்டும் (பணியிடம்), தேவாலயம், வணிகம் (கார்ப்பரேட் உலகம்), அரசியல் அல்லது குடும்பம் என எதுவாக இருந்தாலும், பாரிய பற்றாக்குறையில் உள்ள ஒன்று உன்மை தன்மை. உன்மை என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரிதான பொருளாகும். பலர் அதற்கு வாய்மொழி ஒப்புதல் அளிக்கிறார்கள், ஆனால் மிகச் சிலரே உண்மையில் அதைக் கொண்டுள்ளனர்.
உன்மை தன்மை என்றால் என்ன?
விசுவாசமாக இருப்பது என்பது உண்மையாக இருப்பதும் வாக்குறுதிகளைக் கடைப்பிடிப்பதும் ஆகும். எல்லா சூழ்நிலைகளிலும் நம்பகத்தன்மையுடன் இருப்பதும் இதில் அடங்கும். உண்மையாக இருப்பது என்றால், நீங்கள் சுயநல நலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு தனிப்பட்ட பொறுப்புகளை மதிக்க வேண்டும்.
ரூத்தின் புத்தகத்தை ஒருவர் படிக்கும்போது, ரூத்தின் மிக முக்கியமான விஷயம் அவள் தேவனிடம் வெளிப்படுத்திய விசுவாசம் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். "...உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.“ (ரூத் 1:16). இங்கே ஒரு இளம் பெண் இருந்தாள், அவளுக்கு எதுவும் சரியாக செயல்படவில்லை. தேவனை நிராகரிப்பதற்கும் தேவனிடமிருந்து பின்வாங்குவதற்கும் அவளுக்கு எல்லா காரணங்களும் இருந்தன, ஆனால் அவள் சொல்கிறாள், "உம்முடைய தேவன் என்னுடைய தேவன்."
மீதமுள்ள கதையை நீங்கள் படிக்கும்போது, தேவன் அவளது விசுவாசத்தை வியத்தகு முறையில் மதித்ததை நீங்கள் காண்பீர்கள். அவள் மீட்டெடுக்கப்பட்டாள், குறிப்பிட தேவையில்லை; அவள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேசியாவின் நேரடி பரம்பரையில் இருந்தாள்.
இயேசு தம்முடைய சீஷர்களை வெளியே அனுப்பியபோது, இரண்டு இரண்டு பேராக அனுப்பினார். (மாற்கு 6:7) தேவனுடைய ராஜ்யத்தைப் பிரகடனப்படுத்தும்போதும், நோய்வாய்ப்பட்டவர்களைக் குணமாக்குவதிலும், பேய்களை துரத்தும்போதும், இந்த இருவர் கொண்ட குழு நிச்சயமாக ஆழ்ந்த விசுவாசத்தையும், ஒற்றுமையையும், நட்பையும் வளர்த்திருக்க வேண்டும்.
மற்றவர்களுடனான உங்கள் உறவுகளில் உண்மையாக இருக்க உங்களுக்கு உதவுமாறு தேவனிடம் கேட்பதை உங்கள் தினசரி பிரார்த்தனையாக ஆக்குங்கள். மிக முக்கியமாக, அவருக்கு விசுவாசமாக, சரியான முன்னுரிமைகளுடன்.
Prayer
பிதாவே, தினமும் சிலுவையை எடுத்துக்கொண்டு உமது வார்த்தையின் மூலம் உம்மைப் பின்பற்ற எனக்கு உதவும். என்னைச் சுற்றியுள்ள விசுவாசமான மற்றும் உண்மையுள்ள மக்களுக்காகவும் நான் உங்களிடம் கேட்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
Join our WhatsApp Channel
Most Read
● உங்கள் விசுவாசத்தை சமரசம் செய்யாதீர்கள்● நாள் 21: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● விதையின் வல்லமை - 3
● ஒரு பந்தயத்தை வெல்ல இந்த இரண்டு அவசியம்
● நாள் 29:40 நாட்கள் உபவாச ஜெபம்
● ஆபாச படங்கள்
● உதாரணத்திற்கு வழிநடத்துங்கள்
Comments
