हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. ஊக்கமின்மையின் அம்புகளை முறியடித்தல் - II
Daily Manna

ஊக்கமின்மையின் அம்புகளை முறியடித்தல் - II

Wednesday, 12th of June 2024
0 0 863
Categories : விடுதலை (Deliverance)
பலர் தங்கள் வாழ்க்கையில் முன்னேறாததற்கு ஊக்கமளிக்கும் மனப்பான்மை முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மனச்சோர்வு அவர்களை மிகவும் மோசமாகத் தாக்கும்போது, பலர் பள்ளிகள், கல்லூரிகளை விட்டு வெளியேறுகிறார்கள், தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளகிறார்கள், கர்த்தருக்கு ஊழியம் செய்வதிலிருந்து விலகுகிறார்கள், சிலர் தற்கொலைக்கு கூட முயல்கிறார்கள்.

மனச்சோர்வு  எந்த பாலினத்தைப் பொருட்படுத்தாமல் யாரையும் தாக்கலாம். எலியா ஒரு தீர்க்கதரிசி, அவர் வானத்திலிருந்து அக்கினி விழுமாறு கட்டளையிட்டார், அப்படியே நடந்தது, ஆனால் அவரும் மனச்சோர்வை அனுபவித்து அவர் மறித்து போகவேண்டும் என்று தேவனிடம் வேண்டினார்.

”அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்.“ 1 இராஜாக்கள்‬ ‭19‬:‭4‬-‭5‬ ‭

பிசாசானவன் பொய்யணும் பொய்க்கு பிதாவுமாய் இருக்கிறான். ஆனால் அதே நேரத்தில், அவர் முட்டாள் அல்ல. உங்களுக்கு விஷயங்கள் நன்றாக இருக்கும் போது அவன் உங்களை மனச்சோர்வினால் தாக்க மாட்டான். உங்களின் உச்சக்கட்ட தருணங்களில் அவன் உங்களை பெருமையுடன் தாக்கலாம், ஆனால் அவன் உங்களை சோர்வுடன் தாக்க மாட்டான். உங்களைச் சுற்றியுள்ள காரியங்கள் இருண்டதாகத் தோன்றும்போது, ​​நீங்கள் ஊக்கமின்மையின் தாக்குதலை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் ஊக்கமின்மையின் ஆவி தனக்கு தனக்கு எதிராக அலைந்து கொண்டிருப்பதை ஒருவர் எப்படி அறிவார்? நாம் கவனமாக இருக்க வேண்டிய சில அறிகுறிகள் உள்ளன!

1.அதிகமான கவலை
கவலைப்படுவது தேவனின் வார்த்தைக்கு எதிரானது. உங்கள் நம்பிக்கை பற்றிக்கப்படுகின்றது, இப்போது அந்த விஷயங்கள் நடக்குமா என்று உங்களுக்குத் தெரியவில்லை. இப்போது நீங்கள் கவலைப்படத் தொடங்குங்கள். கவலை பற்றி தேவன் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்:

”ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.“
‭‭மத்தேயு‬ ‭6‬:‭25‬, ‭31‬-‭34‬ ‭

கவலை உங்கள் அமைதியையும் மகிழ்ச்சியையும் திருடி உங்களை முழுவதுமாக சோர்வடையச் செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

2.எல்லாவற்றையும் பற்றி புலம்புவது
மக்கள் மனச்சோர்வடைந்தால், அவர்கள் எல்லாவற்றையும் பற்றி குறை கூறுவதை நீங்கள் கேட்பீர்கள். ஏசி போட்டால் குளிர் என்று சொல்வார்கள், போடவில்லை என்றால் சூடு என்று சொல்வார்கள், குறைத்தால் “ஏசி சரியாக வேலை செய்யவில்லையா?” என்று கேட்பார்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரியும்.

ஊக்கமின்மையின் ஆவியால் நீங்கள் தாக்கப்படும்போது, ​​காரியங்கள் ஏன் நடக்கவில்லை என்று தேவனிடம் கூட புகார் செய்வீர்கள். குறை கூறுவதற்கான சிறந்த மாற்று மருந்து நன்றி செலுத்துதல் ஆகும். உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு நன்றி சொல்லுங்கள். (யாக்கோபு 1:17)

”நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,“
‭‭பிலிப்பியர்‬ ‭2‬:‭14‬-‭15‬ ‭

உங்கள் பாதை தற்போது எவ்வளவு கடினமான பாறையாக இருந்தாலும் அல்லது எவ்வளவு கடுமையான புயலாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் அவர் செய்த காரியங்களுக்கு நன்றி செலுத்துங்கள். நன்றியறிதலால் நம் வாயில் நிரம்பியிருந்தால், நாம் குறைகூற முடியாது.
Confession
கர்த்தராகிய இயேசு எனக்காக சிலுவையில் செய்த காரியத்தினால் நான் ஒரு வெற்றியாளர், தோற்று போகிறவன் அல்ல. என்னில் கிறிஸ்துவே மகிமையின் நம்பிக்கை.

பிதாவே, நீர் எனக்காகச் செய்த அனைத்திற்கும் நன்றி. நீர் இல்லையென்றால், நான் எப்பொழுதோ அழிந்திருப்பேன். என் வாழ்க்கையில் உன்னுடைய அற்புதமான இருப்பின் காரணமாக நான் இன்னும் பெரிய காரியங்களை காண்பேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்.

Join our WhatsApp Channel


Most Read
● உங்கள் மனதை ஒழுங்குபடுத்துங்கள்
● நிலவும் ஒழுக்கக்கேடுகளுக்கு மத்தியில் உறுதியுடன் இருப்பது
● கிருபையின் ஈவு
● உங்கள் மனதிற்கு உணவளியுங்கள்
● தள்ளிப்போடும் எண்ணத்தை கொண்டுவரும் ராட்சதனை கொல்வது
● உபவாசம் - வாழ்க்கையை மாற்றும் பலன்கள்
● ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login