हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சி
Daily Manna

கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சி

Sunday, 20th of April 2025
0 0 112
Categories : உண்மை சாட்சி (True Witness)
தயவு செய்து என்னுடன் உள்ள உங்கள் வேதத்தை அப்போஸ்தலர் 4:2 க்கு திருப்புங்கள்: ”அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும்,“

அக்கால மதத் தலைவர்களான பரிசேயர்களும் சதுசேயர்களும் கலக்கமடைந்ததை இங்கு காண்கிறோம். உயிர்த்தெழுந்த இயேசுவைப் பற்றி அப்போஸ்தலர்கள் பிரசங்கித்ததால் அவர்கள் அமைதியை இழந்தார்கள்.

இன்றும், சிலுவையில் மரிக்கும் இயேசுவைப் பற்றி பேசும்போது உலக மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. "ஓ, இயேசு மிகவும் சோகமாக இறந்தார், மிகவும் சோகமாக மாறித்தார், அவர் ஒரு நல்ல மனிதர்" என்று அவர்கள் அனுதாபப்படுகிறார்கள். ஆனால் இப்போது, ​​இங்கே திருப்புமுனை வருகிறது. "இதோ, மரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். "இல்லை, அது சாத்தியமில்லை" என்று நீங்கள் கூறும்போது அவர்கள் குழப்பமடைகிறார்கள்.

இன்றும் கூட, இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை நம்பாத ஒரு கூட்டம் உலகில் உள்ளது. எனவே, அவர்கள் தங்கள் சொந்த கோட்பாட்டை கண்டுபிடித்துள்ளனர். "பாருங்கள், இயேசு சிலுவையில் மாறித்தார், ஆனால் அவர் இறக்கவில்லை, அவர் மயக்கமடைந்தார், பின்னர் உயிர்த்தெழுந்தார்." இது நரகத்தின் குழியிலிருந்து வந்த பொய்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் சுற்றி வருவதற்கு அவர்கள் எவ்வளவு வசதியாக ஒரு கதையை கண்டுபிடித்தார்கள் என்று பாருங்கள். உண்மை என்னவென்றால், "இயேசு மாறித்தார், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், அவர் சீக்கிரம் வருகிறார்."

உயிர்த்தெழுதல் என்றால் என்ன? இன்று நமக்கு இது எவ்வாறு பொருந்தும்? வாழ்த்துக்களை அனுப்புவது மற்றும் சில நல்ல படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவது மட்டும்தானா? கைகுலுக்கி பொழுதைக் கழிப்பது மட்டுமா? இப்போது, ​​​​இதற்கெல்லாம் நான் எதிரானவன் அல்ல, நாம் இதைச் செய்ய வேண்டும், ஆனால் விஷயம் என்னவென்றால், இதற்கு மேலும் ஏதாவது இருக்கிறது.

யூதாஸ் மரித்தபோது, ​​11 அப்போஸ்தலர்கள் மட்டுமே இருந்தனர். எனவே யூதாஸுக்குப் பதிலாக ஒருவரை நியமிப்பதற்கு அப்போஸ்தலர்கள் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அப்போஸ்தலர் 1:22ல், "அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.“

‭‭என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.
அந்த வேதவசனத்தில் இன்றும் நமக்குப் பொருந்தக்கூடிய ஒரு கொள்கை இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் அவருடைய உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக ஆக அழைக்கப்பட்டுள்ளோம். "தேவனை துதித்து, நான் குணமடைந்தேன், நான் ஆசீர்வதிக்கப்பட்டேன்" என்றுசாட்சி சொன்னால் மட்டும் போதாது, இப்போது, ​​​​மீண்டும், இதெல்லாம் நல்லது தான், ஆனால் அதற்கு மேலும் ஒன்று இருக்கிறது. அவருடைய உயிர்த்தெழுதலுக்கு நாம் சாட்சிகளாக மாற வேண்டும்.

சாட்சி என்றால் என்ன?
எனக்கு அவரைத் தெரியும் என்று கூறும் ஒருவர் தான் சாட்சி.

பாருங்கள், நம்மில் பலர் இன்னும் கேட்கும் நிலையில் இருக்கிறோம். (மத்தேயு 7:7 ஐப் பார்க்கவும்) இயேசுவைப் பின்தொடர்ந்த மக்கள் பெரும்பாலும் மீன் மற்றும் ரொட்டிக்காக அவரைப் பின்தொடர்ந்தனர். நீங்கள் சுவிசேஷங்களைப் படித்தால், வேதம் சொல்கிறது, ஒரு இடத்தில், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கொண்டிருந்தார்கள், அவர்கள் ஒருவரையொருவர் மிதித்துக்கொண்டிருந்தார்கள், ஏனென்றால் இயேசு மக்களைக் குணப்படுத்துகிறார். குணமாக்கும் நற்பண்பு இயேசுவிடம் இருந்து புறப்பட்டது; திரளான மக்களால் மக்கள் குணமடைந்தனர். மருத்துவர்கள் அநேகமாக வேலையிலிருந்து வெளியேறியிருக்கலாம். இயேசுவின் காலத்தில் அடக்கம் செய்யும் வியாபாரத்தை விட்டு வெளியேறியிருக்கலாம்.

ஆண்டவர் இயேசுவை சிலுவையில் அறைந்தவர் யார் தெரியுமா? மீனையும் ரொட்டியையும் சாப்பிட்ட அதே கூட்டத்தார் தான். இது அநேகமாக குணமடைந்து விடுவிக்கப்பட்ட பலரில் சிலராக இருக்கலாம். அவரைச் சிலுவையில் அறையுங்கள் என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். (லூக்கா 23:21)

இன்று சிலர் இருக்கிறார்கள்; எல்லாம் நல்லபடியாக நடக்கும் போது, ​​"இயேசு வாழ்க" என்று சொல்வார்கள், ஆனால் கடினமானதாக இருக்கும் போது, ​​சமூக வலைதளங்களில் தங்கள் வெறுப்பு விஷத்தை கக்குவார்கள்." அப்படிப்பட்டவர் இயேசுவின் சீஷர் அல்ல மாறாக ஒரு நல்ல வானிலை ரசிகர். ஒரு சீஷன் என்பவன் தேவனையும் அவரது போதனைகளையும் எந்த காலத்திலும் பின்பற்றுபவன்.

அப்போஸ்தலன் கூறினார், ”ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.“
‭‭(1 யோவான் 1:1)

Bible Reading: 2 Samuel 20-22
Prayer
தந்தையே, இயேசுவின் நாமத்தில், உமது உயிர்த்தெழுதலின் உண்மையான சாட்சியாக என்னை மாற்றும். ஆமென்.


Join our WhatsApp Channel


Most Read
● கெட்ட மனப்பான்மையிலிருந்து விடுதலை
● சுயமாக விதிக்கப்பட்ட சாபங்களிலிருந்து விடுதலை
● வல்லமை வாய்ந்த முப்புரிநூல்
● அதிகாரப் பரிமாற்றத்திற்கான நேரம் இது
● கிறிஸ்துவைப் போல மாறுதல்
● உங்கள் ஆசீர்வாதத்தைப் பெருக்குவதற்கான வழி
● கிருபையில் வளருத்தல்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login