हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. தேவனின் எச்சரிக்கைகளை புறக்கணிக்காதீர்கள்
Daily Manna

தேவனின் எச்சரிக்கைகளை புறக்கணிக்காதீர்கள்

Monday, 15th of July 2024
0 0 608
Categories : கீழ்ப்படிதல்(obedience)
தெளிவான எச்சரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதில் மனித இயல்பு ஏன் மிகவும் சிரமமாக இருக்கிறது? உதாரணம்: நீங்கள் ஒரு சிறு குழந்தையிடம், “இரும்பைத் தொடாதே; அது சூடாக இருக்கிறது என்று சொன்னால்," நீங்கள் பார்க்காத போது, அந்த சிறு குழந்தை நீங்கள் வேண்டாம் என்று சொன்ன இரும்பை தொட முயற்சிக்கும். எச்சரிக்கைகளை புறக்கணிப்பதன் இந்த பிரச்சனை குழந்தை பருவத்தில் மட்டும் அல்ல; அதை தாண்டி பயணிக்கிறது.

"ஈரமான பெயிண்ட்டைத் தொடாதே?" என்ற பலகையை இடுகையிடும் நபர்களைப் பார்த்தீருக்கிறீகளா? இன்னும் ஈரமாக தான் இருக்கிறதா என்று பார்க்க பலர் அதைத் தொடுவார்கள். நான் சொல்ல முயற்சிக்கும் விஷயம்: எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்த தவறுவது உங்கள் வாழ்க்கையை குழப்பமடையச் செய்யலாம். நாம் எச்சரிக்கைகளை புறக்கணிக்கிறோம, எச்சரிக்கைகளை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்.

“அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும் அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே. அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம்.”
‭‭உபாகமம்‬ ‭17‬:‭16‬-‭17‬ ‭

தம் மக்களை ஆளும் ராஜாக்களுக்கு தேவன் குறிப்பிட்ட எச்சரிக்கைகளைக் கொடுத்தார். தேவனுடைய எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்திய சாலொமோன் “அநேக அந்நிய ஸ்திரீகளை நேசித்தார்.” அவர்களின் வசீகரம் மற்றும் அழகு ஆகியவற்றால் ஈர்க்கபட்டு தேவனிம் கட்டளைக்கு நேர் மாறாக அவர் தன்னை அனுமதித்தார். அவர்கள், உயரமான இடங்களைக் கட்டுவதற்கும் விக்ரகங்களை வணங்குவதற்கும் சாலொமோனைத் தூண்டினர். சாலொமோனின் மனைவிகள் "தங்கள் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிட்டனர்" (1 இராஜாக்கள் 11:1-8).

“சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக்குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள். மேற்சொல்லிய மணியகாரரில் ஒவ்வொருவரும் தன்தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவுக்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் வேண்டியவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து, குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேண்டிய வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் ஸ்தலத்திற்குக் கொண்டுவருவார்கள். தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.”
‭‭1 இராஜாக்கள்‬ ‭4‬:‭26‬-‭29‬ ‭

சாலொமோன் மட்டும் தேவனின் எச்சரிக்கைகளுக்கு செவிசாய்த்து கீழ்ப்படிந்திருந்தால் வரலாறு வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். தேவனின் எச்சரிக்கைகள் நல்ல அறிவுரை மட்டுமல்ல; அவர்கள் கீழ்ப்படிவதற்கான அவருடைய கட்டளைகள், இதன் மூலம் நம் வாழ்வில் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
Prayer
பிதாவே, உமது வார்த்தையை என் வாழ்க்கையின் அடித்தளமாக மாற்ற எனக்கு உதவும். உங்கள் வார்த்தையின் உணர்வை நான் கேட்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்.


Join our WhatsApp Channel


Most Read
● சமாதானமே நமது சுதந்திரம்
● நாள் 38: 40 நாட்கள் உபவாச ஜெபம்
● புளிப்பில்லாத இதயம்
● திருப்தி நிச்சயம்
● சுத்திகரிப்பின் எண்ணெய்
● விசுவாசத்தின் குணப்படுத்தும் வல்லமை
● உங்கள் உலகத்தை வடிவமைக்க உங்கள் கற்பனையை பயன்படுத்தவும்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login