हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. அக்கினி விழ வேண்டும்
Daily Manna

அக்கினி விழ வேண்டும்

Tuesday, 20th of August 2024
0 0 952
Categories : கடவுளுடன் நெருக்கம் (Intimacy with God) பிரார்த்தனை (Prayer)
லேவியராகமம் 6:12-13 நமக்குச் சொல்கிறது,
“பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதானபலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன். பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.”

பலிபீடம் என்றால் என்ன?
பலிபீடம் என்பது பரிமாற்ற இடம். இது ஆவிக்குரிய காரியமும் இயற்கைக்கும் இடையிலான சந்திப்பின் இடம், தெய்வீகத்திற்கும் மனுகுளத்திற்கும் இடையிலான சந்திப்பு. பலிபீடம் என்பது தேவன் மனிதனை சந்திக்கும் இடம்.

பலிபீடம் என்பது விதிகள் மாற்றப்படும் இடம்.
பழைய ஏற்பாட்டில், பலிபீடம் ஒரு குறிப்பிட்ட இடமாக இருந்தது. நீங்கள் தேவனை சந்திக்க வேண்டும் என்றால், வேறு எங்கும் அவரைசந்திக்க முடியாது; நீங்கள் இந்த பலிபீடத்திற்கு செல்ல வேண்டும். நீங்கள் பலி செலுத்த வேண்டும் என்றால், நீங்கள் பலிசெலுத்த பலிபீடம் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

இருப்பினும், புதிய ஏற்பாட்டில், பலிபீடம் ஒரு ஆவிக்குரிய இடம். அங்குதான் மனித ஆவி தேவனின் ஆவியை சந்திக்கிறது. கர்த்தராகிய இயேசு மத்தேயு 18:20 இல் இந்த வகையான பலிபீடத்தை தெளிவாக வரையறுத்தார், "இரண்டு அல்லது மூன்று பேர் என் நாமத்தினாலே எங்கே கூடிவருகிறார்களோ, அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன்." வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் எந்த இடத்தில் தேவனின் நாமத்தை கூப்பிடுகிறீர்களோ, அந்த இடம் பலிபீடமாகிறது.

ஒரு பலிபீடத்திற்கு மற்றொரு அவசியம் இருக்கிறது. தேவன் சொன்னார், "பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்" அக்கினி இல்லாத பலிபீடம் தேவனுக்கு அருவருப்பானது.

இஸ்ரவேலர் கர்த்தரை விட்டு விலகியபோது, ​​கர்த்தருடைய பலிபீடம் புறக்கணிக்கப்பட்டு உடைக்கப்பட்டது. தேவனின் பலிபீடங்களில் புதிய அக்கினி இல்லை. இதன் விளைவாக ஒட்டுமொத்த தேசமும் பாவத்தில் முழுகியது.

தேவன் அக்கினியால் பதிலளித்து, இஸ்ரவேல் தேசத்தை தம்மிடம் திருப்புவதற்கு முன்பு, பலிபீடம் செப்பன்னிட வேண்டியதாயிற்று. "எலியா உடைந்த கர்த்தருடைய பலிபீடத்தைப் செப்பணிட்டார்." (1 இராஜாக்கள் 18:30) உடைந்த பலிபீடத்தின் மீது தேவனுடைய அக்கினி ஒருபோதும் இரங்காது.

பலிபீடத்தைப் பழுதுபார்ப்பது என்பது தேவவனுடனான நமது உறவைப் பற்றியது. தேவவனுடனான நமது உறவு தேவ வார்த்தையை வாசிப்பத்திலும் ஜெபத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பலிபீடத்தைப் செப்பனிடுவது என்பது, நம் வாழ்விலும், குடும்பங்களிலும், சபைகளிலும் எல்லா வகையான சமரசங்களையும் சுத்தப்படுத்தி, கர்த்தராகிய இயேசுவிடம் நம்மை மீண்டும் ஒப்புக்கொடுப்பதன் மூலம் உண்மையான ஆராதனையை மீட்டெடுப்பதை உள்ளடக்குகிறது. ஓசியா 6:1 நமக்கு அறிவுரை கூறுகிறது: “கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.”
Prayer
பிதாவே, இயேசுவின் நாமத்தில், உமது அக்கினி என் மீது விழுந்து, என் வாழ்க்கையிலிருந்து விரும்பத்தகாத அனைத்தையும் அழிக்கட்டும். தேவனின் மகிமை இப்போது இயேசுவின் நாமத்தில் வெளிப்படட்டும்.

பிதாவே, இயேசுவின் நாமத்தில், உமது அக்கினியால் என் ஜெப பலிபீடத்திற்கு அதிகாரம் தாரும். பரிசுத்த ஆவியின் அக்கினி, இயேசுவின் நாமத்தில் நிந்தையின் ஒவ்வொரு ஆடையையும் இருளின் சங்கிலிகளையும் அழிக்கட்டும் .

பரிசுத்த ஆவியின் அக்கினி இயேசுவின் நாமத்தில் எனக்கு எதிரான ஒவ்வொரு சாத்தானின் எதிர்ப்பையும் அழிக்கிறது.

பிதாவே, இயேசுவின் நாமத்தில், கருணா சதன் அமைச்சகத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு நபர் மீதும் உங்கள் பரிசுத்த அக்கினி விழட்டும்.

Join our WhatsApp Channel


Most Read
● தேடி கண்டுபிடித்து ஒரு கதை
● நன்றி செலுத்தும் ஸ்தோத்திரபலி
● விசுவாசத்தின் குணப்படுத்தும் வல்லமை
● அண்ணாளின் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
● நீங்கள் செலுத்த வேண்டிய விலைக்கிரயம் 
● மிகவும் பொதுவான பயங்கள்
● அந்நிய பாஷை - மகிமை மற்றும் வல்லமையின் மொழி
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login