Daily Manna
0
0
1064
வதந்திகள் உறவுகளை அழிக்கின்றன
Wednesday, 25th of September 2024
Categories :
கிசுகிசு (Gossip)
“மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.”
நீதிமொழிகள் 16:28
வதந்திகள் என்பது நாம் புதிய உறவுகளை நிறுவும் போது கவனிக்க வேண்டிய ஒன்று.
வதந்திகள் ஏன் உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன?
வேதம் சொல்வது போல், வதந்திகள் சிறந்த நண்பர்களைப் பிரிக்கும். வதந்திகள் உறவுகளைப் பிளவுபடுத்துகிறது, நம்பிக்கையை அழிக்கிறது, மேலும் வதந்திகளுடன் தொடர்புடைய வலி பேசப்பட்ட வார்த்தைகள், நீண்ட காலத்திற்குப் பிறகும் உணரப்படுகிறது.
நினைவில் கொள்ளுங்கள், ஒருவரைப் பற்றி உங்களிடம் கிசுகிசுப்பவர் உங்களைப் பற்றியும் மற்றவர்களிடம் கிசுகிசுப்பார், மேலும் வதந்திகள் நட்பைப் பிரிக்கும் (நீதிமொழிகள் 16:28). நம் உறவுகளை மதிப்போம், தொற்று வதந்தி வலையில் சிக்காமல் இருப்போம்.
உண்மையில், சில நேரங்களில் ஜனங்கள் கிசுகிசுக்கிறார்கள் மற்றும் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் குறைகளை கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள், இதனால் அவர்கள் உங்கள் உள் வட்டத்திற்குள் வருவார்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களை கீழே தள்ளினால் நீங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் ஒரு எல்லையை அமைக்கவும்.
மற்ற சக பணியாளர்கள் அல்லது நண்பர்களைப் பற்றி கிசுகிசுப்பது ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்த எளிதான வழியாகத் தோன்றலாம்; இருப்பினும், வலுவான, நம்பகமான உறவுகளை உருவாக்க இது ஒரு நல்ல வழி அல்ல. உண்மையில், யாரோ ஒருவர் சுற்றி வரும் அனைத்து வதந்திகளிலும் ஈடுபட விரும்புகிறார் என்று உங்களுக்குத் தெரிந்தால், அத்தகைய நபரை நம்புவதில் கவனமாக இருங்கள்.
நீங்கள் புதிதாக யாரையாவது சந்தித்தால், கிசுகிசுக்கள் வரும்போது, உரையாடலை வேறு தலைப்புக்குத் திசை திருப்ப முயற்சிச் செய்யுங்கள். அது வேலை செய்யவில்லை மற்றும் அது தொடர்ந்து வந்தாலும், உங்கள் எல்லைகளைத் தெளிவாகத் தெரிவிக்கும் வகையில் நீங்கள் நேரடியாக தலைப்பை அன்பான முறையில் பேச வேண்டியிருக்கும்.
வதந்திகள் உங்களுக்கான தேவனின் திட்டத்தில் இல்லை. எல்லோருடைய குறைபாடுகளையும் மற்றவர்களுக்குச் சுட்டிக்காட்டி ஒருவரையொருவர் நியாயந்தீர்க்க தேவன் நம்மைப் படைக்கவில்லை. ஒருவரையொருவர் நேசிக்கவும், நாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படியே மற்றவர்களை நடத்தவும் வேதம் மீண்டும் மீண்டும் கட்டளையிடுகிறது. பேச்சு சுதந்திரம் என்பது நாக்கு தளர்ந்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.
பிரியமானவர்களே, பரிசுத்த ஆவியில் சுதந்திரமான வாழ்க்கை வாழ தேவன் நம்மை அழைத்திருக்கிறார். ஆனால் இந்த அற்புதமான சுதந்திரத்தை ஒருவரை வீழ்த்துவதற்கான வாய்ப்பாக பார்க்காதீர்கள். சுதந்திரம் என்றால், நாம் சுய இன்பத்திலிருந்து முற்றிலும் விடுபடுகிறோம், நாம் செய்யும் எல்லாவற்றிலும் அன்பை வெளிப்படுத்தி, ஒருவருக்கொருவர் வேலையாட்களாக மாறுகிறோம். (கலாத்தியர் 5:13 TPT மொழிபெறர்பு)
Prayer
ஆண்டவரே, என் வாய்க்குக் காவல் வையுங்கள்; என் உதடுகளின் கதவைக் கவனித்துக்கொள்ளும். தகப்பனே, வதந்திகளில் இருந்து என்னைக் காப்பாற்றும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● தெய்வீகப் பழக்கம்● தேவன் தாய்மார்களை சிறப்புறப் படைத்தார்
● பயத்தின் ஆவி
● தேவன் எப்படி வழங்குகிறார் #4
● நாள் 15: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● அரண்மனைக்கு பின்னால் இருக்கும் மனிதன்
● நாள் 05: 40 நாட்கள் உபவாசமும் & ஜெபமும்
Comments
