हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. ஆவிக்குரிய பிரமாணம் : ஐக்கியத்தின் பிரமாணம்
Daily Manna

ஆவிக்குரிய பிரமாணம் : ஐக்கியத்தின் பிரமாணம்

Saturday, 28th of September 2024
0 0 582
Categories : ஐக்கியதால் (Association)
உங்கள் வாழ்க்கை எண்ணப்பட்டு மதிப்புமிக்கதாக இருக்க வேண்டுமெனில், நீங்கள் தட்டிக் கேட்க வேண்டிய ஆவிக்குரிய பிரமாணங்களில் ஒன்று ஐக்கியத்தின் பிரமாணம். நீங்கள் யாராக இருந்தாலும் சரி அல்லது எந்த மட்டத்திலும் எரிந்தாலும் சரி, இந்த சட்டம் அனைவருக்கும் வேலை செய்யும். இந்தச் சட்டம் உங்களைச் சிறப்பான மற்றும் பலனளிக்கும் பகுதிகளுக்குள் கொண்டு செல்லும் என்று சொல்லத் தேவையில்லை.

“ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” நீதிமொழிகள்‬ ‭13‬:‭20‬ ‭

மேற்கண்ட வேத வசனம் ஐக்கியத்தின் பிரமாணத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், உங்களை விட ஞானிகளோடே நீங்கள் பழகும்போது, ​​அவர்களின் ஞானம் உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி, உங்கள் வாழ்க்கை கட்டமைக்கப்படும். மறுபுறம், நீங்கள் மூடர்களுடன் சுற்றித் திரிந்தால், உங்கள் வாழ்க்கை துண்டு துண்டாக நொறுங்கும்.

வேதம் நம்மை எச்சரிக்கிறது, “மோசம்போகாதிருங்கள்; ஆகாதசம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.”
‭‭1 கொரிந்தியர்‬ ‭15‬:‭33‬ ‭

தாவீதினுடைய வாழ்க்கையில் வந்தஒரு காலத்தைத் பற்றி வேதம் சொல்லுகிறது, “ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறு பேர் அவனோடிருந்தார்கள்.”
‭‭1 சாமுவேல்‬ ‭22‬:‭2‬ ‭

இந்த மூன்று வார்த்தைகளை கவனியுங்கள்

1. ஒடுக்கப்பட்டவர்கள்

2. கடன்பட்டவர்கள்

3. முறுமுறுக்கிறவர்கள்

உலகபிரேகாரமான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், ஒரு நபர் தனது வாழ்க்கையில் இந்த 3 காரியங்களை கொண்டிருந்தால், வாழ்க்கை முடிந்துவிட்டது. ஒரு நபருக்கு இந்த மூன்று கொலையாளிகள் இருக்கும்போது யாரும் உயர முடியாது. இருப்பினும், தேவனின் அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதனாகிய தாவீதுடன் அவர்கள் ஐக்கியம் கொள்ள ஆரம்பித்தபோது இவை அனைத்தும் மாறியது. தாவீதுடனான அவர்களின் ஐக்கியம் அவர்களை 1 நாளாகமம் 12:8 இல் விவரிக்கப்பட்டுள்ள வகையான மனிதர்களாக மாற்றியது: “காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம் போன்ற வேகமுமுள்ளவர்களாயிருந்து, யுத்தசேவகரான பராக்கிரமசாலிகள் சிலரும் வனாந்தரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது பட்சமாய்ச் சேர்ந்தார்கள்.”

தேவனுடனும் வாழ்க்கையின் வழிகளிளும் நம்மை விட முதிர்ச்சியுள்ள ஜனங்களுடன் தன்னார்வமாய் நம்மை இணைத்துக் கொண்டால் இந்த பிரமாணம் யாருக்கும் வேலை செய்யும் மட்டுமல்லாமல் பெறுக்கத்தையும் ஆசீர்வாதத்தையும் கொண்டுவரும்.

“பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.”
‭‭அப்போஸ்தலர்‬ ‭4‬:‭13‬ ‭

உயிர்த்தெழுந்த இயேசுவையும், மேல் வீட்டு அறையில் பரிசுத்த ஆவியானவரையும் பெற்ற பிறகு, இயேசுவின் சீஷர்கள் தங்களுக்குத் இருந்த உலகத்தைத் தலைகீழாக மாற்றினர். அவர்கள் காலத்தில் அதிகாரம் படைத்தவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர், ஆனால் இவை அனைத்தும் இயேசுவுடன் ஐக்கியம் கொண்டதால் மட்டுமே சாத்தியமானது என்பதை விரைவில் உணர்ந்தனர். அந்தக் காலத்தின் பரிசேயர்களும் சதுசேயர்களும் ஐக்கிய பிரமாணத்தை புரிந்துகொண்டார்கள், நாமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது.

சாதாரண சீஷர்கள் இயேசுவுடனான அவர்களின் உடன்படிக்கை உறவின் காரணமாக உலகத்தை மாற்றுபவர்களாக மாறினார்கள் - உங்களாலும் என்னாலும் கூட முடியும். ஞானமும் வெற்றியும் உள்ளவர்களுடன் ஐக்கியம் கொண்டு நாமும் நமது வெற்றி, அபிஷேக நிலைகள், ஜெப வாழ்க்கை போன்றவற்றை விரைவுபடுத்தலாம்.
Confession
நான் ஞானிகளுடன் நடந்து ஞானம் பெறுவேன். முதிர்ச்சியும் தெய்வீகமும் உள்ள மக்களுடன் கர்த்தர் என்னை இணைக்கிறார். அவருடைய பிரசன்னத்துடன் இணைந்திருப்பதற்கான அபிஷேகம் இயேசுவின் நாமத்தில் எனக்கு இருக்கிறது. ஆமென்


Join our WhatsApp Channel


Most Read
● நாள் 34 : 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● தேவன் எப்படி வழங்குகிறார் #3
● நாள் 06:40 நாட்கள் உபவாச ஜெபம்
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 1
● விசுவாசத்தில் அல்லது பயத்தில்
● வேலை ஸ்தலத்தில் ஒரு நட்சத்திரம் - 1
● அவரது அலைவரிசைக்கு இசைதல்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login