हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. யூதாஸ் வாழ்க்கையிலிருந்து பாடங்கள் - 1
Daily Manna

யூதாஸ் வாழ்க்கையிலிருந்து பாடங்கள் - 1

Wednesday, 23rd of October 2024
0 0 277
Categories : சீஷர் (Discipleship) தீர்க்கதரிசன வார்த்தை (Prophetic word)
அறிவுறுத்தலைப் பெற பல வழிகள் உள்ளன. அறிவுரைகளைப் பெறுவதற்கான வழிகளில் ஒன்று மற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்வது. இன்று, எந்தவொரு பெற்றோரும் தங்கள் மகனுக்கு யூதாஸ் (ஜூட், ஆம், ஆனால் யூதாஸ் அல்ல) என்று பெயரிட விரும்ப மாட்டார்கள், அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

யூதாஸ்காரியோத் கிறிஸ்துவின் நம்பிக்கைக்குரிய அப்போஸ்தலர்களில் ஒருவராக இருந்தான், ஆனாலும் அவன் கர்த்தரைக் காட்டிக்கொடுத்து விசுவாசத்தை கைவிட்டான். அவனது வாழ்க்கையின் கதை நம் இருதயத்தில் ஒரு நிதானமான கயிற்றைத் தாக்க வேண்டும் மற்றும் தனிப்பட்ட பிரதிபலிப்புக்கான காரணங்களை நமக்குத் தர வேண்டும்.

1. யூதாஸ் மாற மறுத்தான் 

யூதாஸ் கர்த்தரால் தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டவன்; அவன் மூன்று வருடங்கள் அவரைப் பின்தொடர்ந்தான், பல ஆண்டுகளாக மில்லியன் கணக்கான மக்களை பாதித்த செய்திகளை அவர் போதித்து கற்பித்தார். இயேசு தண்ணீரில் நடப்பதை அவன் நேரில் பார்த்திருந்தான்; இன்னும், புயகள், ஐந்து அப்பம் மற்றும் இரண்டு மீன் ஆயிரக்கணக்காணோருக்கு உணவு, மரித்தவர்களை உயிரோடு எழுப்பினது. அதுமட்டுமின்றி, அவனும் வியாதியஸ்தர்களை குணப்படுத்தவும், பிசாசுகளை துரத்தவும் தேவனிடமிருந்து வல்லமையை பெற்றான். (மத்தேயு 10:1) ஊழியத்தின் நிதிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் அவன் கையில் கர்த்தர் ஒப்படைத்தார்.

கர்த்தராகிய இயேசு தம்முடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தபோது, ​​அவர் ஒரு தீர்க்கதரிசன குறிப்பைக் கொடுத்தார் என்று வேதம் கூறுகிறது.

“இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்.”
‭‭யோவான்‬ ‭6‬:‭70‬-‭71‬ ‭

சோகமான பகுதி என்னவென்றால், யூதாஸ் பிசாசாக ஆரம்பித்து பிசாசாகவே முடிந்தது. இன்றைய நற்ச்செய்தி என்னவென்றால், நாம் ஒரு மோசமான தொடக்கத்தைப் ஆரம்பித்து இருக்கலாம், ஆனால் நாம் ஒரு மகிமையான எதிர்காலத்தைப் பெற முடியும்.

துரதிர்ஷ்டவசமாக, யூதாஸ் கேட்டது மற்றும் பார்த்தது அவனை மாற்றவில்லை. இன்றும் இப்படி பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஆராதனையில் கலந்து கொள்கிறார்கள், பல காரியங்கள் நடக்கின்றன. அவர்கள் எதிரில் ஆறு ஓடுவதைக் காண்கிறார்கள், ஆனால் அவர்கள் மூழ்குவதில்லை. இயேசு இருக்கும் இடத்தில் மட்டும் இருந்தால் போதாது என்று இது சொல்கிறது. இயேசுவை சுற்றித் இருப்பது மட்டும் போதாது. வார்த்தையைக் கேட்டால் மட்டும் போதாது.

வேதம் நமக்கு இவ்வாறு கட்டளையிடுகிறது: 

“அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான். அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.”
‭‭யாக்கோபு‬ ‭1‬:‭22‬-‭25‬ ‭

நீங்கள் ஒரு ஆராதனையில் கலந்துகொள்ளும் போதெல்லாம், நீங்கள் உங்கள் வேதத்தை எடுத்துச் செல்ல உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் (டிஜிட்டல் அல்லது புத்தக பதிப்பு; எதுவாய் இருந்தாலும் அதை பயன்படுத்தும்). குறிப்புகளை உருவாக்கி அவற்றை வாரம் முழுவதும் தியானியுங்கள். உங்கள் வாழ்க்கைமுறையில் நீங்கள் கேட்கும் பிறசங்கத்தை இணைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இதைச் செய்யும்போது, ​​​​உங்கள் வாழ்க்கையில் தேக்கநிலை மற்றும் வறுமை முறிவதைக் காண்பீர்கள்.
Prayer
1. ஆண்டவரே, வானத்திற்கும் பூமிக்கும் கர்த்தரே, என் எண்ணங்களை உன்னிடம் ஒப்படைக்கிறேன். தேவனுடைய பரிசுத்த ஆவியானவரே, உமது இருதயத்தில் உள்ளதைக் கொண்டு என்னை ஊக்குவிக்கும்.

2. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, எல்லாவிதமான பெருமைகளிலிருந்தும் என்னை அகற்றும். நான் செல்ல வேண்டிய வழியைக் காட்டும். உமது ஞானத்திற்கு என் கண்களையும், உமது நல்ல ஆலோசனைக்கு என் காதுகளையும் திறந்தருளும்.

Join our WhatsApp Channel


Most Read
● கோபத்தின் பிரச்சனை
● தேவன் வித்தியாசமாக பார்க்கிறார்
● தேவனுடைய வார்த்தையை வாசிப்பதன் ஐந்து விதமான நன்மையின்
● உண்மையுள்ள சாட்சி
● கிருபையின் ஈவு
● கவலையுடன் காத்திருப்பு
● நாள் 07: 40 நாட்கள் உபவாசமும் & ஜெபமும்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login