हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. நாள் 03 : 40 நாட்கள் உபவாசமும் ஜெபமும்
Daily Manna

நாள் 03 : 40 நாட்கள் உபவாசமும் ஜெபமும்

Sunday, 24th of November 2024
0 0 288
Categories : உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனை ( Fasting & Prayer)

நான் சாவாமல் பிழைத்திருப்பேன் 

“நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.”
‭‭சங்கீதம்‬ ‭118‬:‭17‬ ‭

நாம் நமது இளக்குகளை நிறைவேற்றி நல்ல முதுமையில் இறப்பது தேவனுடைய விருப்பம். உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் சித்தத்தில் அகால மரணம் அல்லது வியாதி, வலி, தீமை மற்றும் நோய் நிறைந்த வாழ்க்கை அவர் விரும்புவது இல்லை.

மரணம் என்றால் "பிரித்தல் அல்லது முடித்தல்" என்று பொருள். பிசாசு நம்மை தேவனிடமிருந்து பிரிக்க விரும்புகிறது மற்றும் பூமியில் நம்முடைய தெய்வீக பணிகளை நிறுத்த விரும்புகிறது; நாம் இதை வலுக்கட்டாயமாக எதிர்க்க வேண்டும் மற்றும் பிசாசின் ஆயுதங்களை அழிக்க வேண்டும்.

மரணங்களில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன:

1. ஆவிக்குரிய மரணம்
மனிதனின் ஆவியிலிருந்து தேவனின் ஆவி பிரிக்கப்படும் போது ஆவிக்குரிய மரணம் ஏற்படுகின்றது. ஆதாமும் ஏவாளும் அனுபவித்த முதல் மரணம் ஆவிக்குரிய மரணம்; அவர்கள் தேவனுடைய ஆவியிலிருந்து பிரிக்கப்பட்டனர். “ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.” (ஆதியாகமம் 2:17)

2. சரிர மரணம்
சரிர மரணம் என்பது உடலிலிருந்து ஆவியைப் பிரிப்பதாகும். 

ஆதாம் ஆவிக்குரிய மரணத்தை அனுபவித்த பிறகு, அவர் சரிரம் மரணத்தை அனுபவிப்பதற்கு 930 ஆண்டுகள் ஆனது, ஆனால் சரிர மரணம் தேவனுக்கு கீழ்ப்படியாத பிறகு அவர் அனுபவித்த ஆவிக்குரிய மரணத்தின் விளைவாகும். “ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.” (ஆதியாகமம் 5:5)

3. நித்திய மரணம்
நித்திய மரணம் என்பது மனிதனின் ஆவி நிரந்தரமாக தேவனின்  ஆவியிலிருந்து, திர்வு இன்றி பிரிக்கப்பட்டதாகும்.

“தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாக்கி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.”
(‭‭2 தெசலோனிக்கேயர்‬ ‭1‬:‭7‬-‭10)

நித்திய அழிவாகிய என்ற வார்த்தையை கவனியுங்கள்.

“பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.”
‭(வெளிப்படுத்துதல் 21:8) இரண்டாவது மரணம் நித்திய மரணம்.

காலத்திற்கு முன்பு மரணத்திற்கான காரணங்கள்

அகால மரணம் என்பது ஒருவர் தங்கள் திறனை அடைவதற்கு முன்பே இறந்துவிடுவது; சிலர் தாங்கள் உழைத்த அனைத்தையும் அனுபவிக்கும் கட்டத்தில் இறந்துவிடுகிறார்கள். இவை அனைத்தும் பிசாசின் செயல்பாடுகளை வெளிப்படுத்துகின்றன (கொல்லவும் , திருடவும் அழிக்கவும், யோவான் 10:10 ஐ பார்க்கவும்).
  • பாவமான வாழ்க்கைமுறை 
“அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன். கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என்கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான். அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி; அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.”
‭‭யோசுவா‬ ‭7‬:‭20‬-‭21‬, ‭25‬-‭26‬ ‭

ஆகான் தனது கடுமையான பாவத்தின் காரணமாக அகால மரணம் அடைந்தான்.

தேவனின் வார்த்தைக்கு தொடர்ந்து கீழ்ப்படியாமை மற்றும் பாவமான வாழ்க்கை முறை மரணத்தை ஈர்க்கும், மரணம் வெளிப்படுவதற்கு சிறிது நேரம் ஆகலாம், ஆனால் அது நிகழும்.
  • மனிதர்களின் துன்மார்க்கம்
“அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி, மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள்.”
(‭‭சங்கீதம்‬ ‭64‬:‭3‬-‭4‬ )

“காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.”
(‭‭ஆதியாகமம்‬ ‭4‬:‭8‬)‭

மனிதனின் இருதயம் தீய எண்ணங்களாலும் சுயநல நோக்கங்களாலும் நிறைந்திருக்கிறது. மனிதர்களின் இருதயத்தில் உள்ள அக்கிரமம் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களையும் அவர்களைச் சுற்றியுள்ள மக்களையும் கொல்ல காரணமாகிறது.
  • ஆவிக்குரிய தாக்குதால் 
“அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனைப் பெற்றாள். அந்தப் பிள்ளை வளர்ந்தான், ஒரு நாள் அவன்

அறுப்பறுக்கிறவர்களிடத்திலிருந்த தன் தகப்பனண்டைக்குப் போயிருக்கும்போது, தன் தகப்பனைப் பார்த்து: என் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய் விடு என்றான். அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்.” (‭‭2 இராஜாக்கள்‬ ‭4‬:‭17‬-‭20‬) ‭

இந்த வசனங்களில் உள்ள சிறுவன் எந்த சரிர காரணமும் இல்லாமல் இறந்துவிட்டான். இது அவரது தலை மற்றும் உடல்நிலை மீதான ஆவிக்குரிய தாக்குதல். பழைய ஏற்பாட்டில், அசுத்த வல்லமைகளின் செயல்பாடுகள் காணப்பட்டன, ஆனால் புரிந்து கொள்ளப்படவில்லை. புதிய ஏற்பாட்டில், கிறிஸ்து அந்தகாரத்தின் மறைவான செயல்களை அம்பலப்படுத்தினார் மற்றும் இந்த பொல்லாத அசுத்த ஆவிகளின் மீது நமக்கு அதிகாரம் அளித்தார் (லூக்கா 10:19).

ஆவிக்குரிய அம்புகள் தினமும் எய்யப்படுகின்றன, தேவனின் உதவி இல்லாமல், ஜனங்கள் எப்போது வேண்டுமானாலும் பலியாகலாம். “இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.”
‭‭(சங்கீதம் 91:5)

ஆவிக்குரிய மண்டலம் உலக பிரகாரமான மண்டலத்தை கட்டுப்படுத்துகிறது, மேலும் உலகில் எதுவும் நிகழும் முன், அது ஆவிக்குரிய உலகில் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். மரணத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க வல்லமை தேவை. சவுல் ராஜாவிடமிருந்து தாவிது பல மரண பொறிகளில் இருந்து தப்பினார், ஆனால் ஆபேல் நிரபராதி மற்றும் காயீனால் கொல்லப்பட்டார். (1 சாமுவேல் 18:11-12; ஆதியாகமம் 4:8). அப்பாவி ஜனங்கள் அதிகாரமற்றவர்களாகவும் அறியாமையுடனும் இருக்கும்போது மரிக்கலாம்.

இன்று, நம்மைக் கொல்ல வடிவமைக்கப்பட்ட ஒவ்வொரு தீய நிகழ்ச்சி நிரலையும் நாம் ஜெபித்து அழிக்கப் போகிறோம். உங்கள் வாழ்க்கையைப் பற்றி நான் தீர்க்கதரிசனம் கூறுகிறேன்: நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பீர்கள் என்று இயேசுவின் நாமத்தில் கூறுகிறேன். உங்கள் வாழ்க்கையில் எதுவும் இயேசுவின் நாமத்தில் மரிக்காது.
Prayer
1. என் பிதாவே, என்னைப் படைத்தவரே, நீர் எனக்குக் கொடுத்த இந்த வாழ்க்கைக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். தேவனே உன்னை ஆராதிக்கிறேன். (சங்கீதம் 103:1-5, 1 தெசலோனிக்கேயர் 5:18)

2. பிதாவே, உமது வழிகளில் நடக்கவும், உமது பிரமாணங்களைக் கடைப்பிடிக்கவும் என் குடும்பத்தாருக்கும் எனக்கும் கிருபை தந்தருளும். இயேசுவின் நாமத்தில் நாங்கள் வாழும் இந்த தேசத்தில் எங்கள் நாட்களை பெருக்கும். (உபாகமம் 5:33, சங்கீதம் 91:16)

3. யெகோவா தேவனே, என் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனக்கும் என் வாழ்நாள் முழுவதும் உமக்கு பயப்படும் கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில். (நீதிமொழிகள் 9:10, சங்கீதம் 128:1)

4. என் குடும்ப உறுப்பினர்களையும் என்னையும் கொல்ல திட்டமிடப்பட்ட எல்லா நோய்களும் வியாதிகளும் இயேசுவின் நாமத்தில் அழிக்கப்படும். (ஏசாயா 54:17, யாத்திராகமம் 15:26)

5. என் சரீரதில் விதைக்கப்பட்ட எந்த தீமையும், என்னை முன்கூட்டியே கொல்ல வடிவமைக்கப்பட்டுள்ள எதுவும், பரிசுத்த ஆவியின் அக்கினியால் அழிக்கப்படும்.(மத்தேயு 15:13, ஏசாயா 10:27)

6. ஒவ்வொரு விசித்திரமான உடன்படிக்கை மற்றும் சாபம் என் வாழ்க்கையை குறைக்கலாம்; என் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கை, இயேசுவின் இரத்தத்தால், இயேசுவின் நாமத்தில் அழிக்கப்படும்.
(கலாத்தியர் 3:13, கொலோசெயர் 2:14)

7. இரவில் நடக்கும் மரணம் மற்றும் கொள்ளைநோயின் எந்த அம்பும் என்னையும் என் அன்புக்குரியவர்களையும் இயேசுவின் நாமத்தில் ஒருபோதும் கண்டுபிடிக்காது.
(சங்கீதம் 91:5-6, ஏசாயா 54:17)

8. இயேசுவின் நாமத்தினாலே ஜீவனுள்ள தேசத்தில் தேவனுடைய மகிமையை அறிவிக்க நான் சாகாமல் வாழுவேன்.
(சங்கீதம் 118:17, யோவான் 10:10)

9. தேவனுடைய உயிர்த்தெழுதலின் வல்லமை, இயேசுவின் நாமத்தில் என் வாழ்க்கையில் எந்த மரித்த நற்பண்பையும் உயிர்ப்பிக்கவும். (ரோமர் 8:11, யோவான் 11:25-26)

10. நான் இயேசுவின் நாமத்தில் என் வாழ்க்கையில் மரித்த மற்றும் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில் ஜீவனை பேசுகிறேன் (உங்கள் பணம், பிள்ளைகள், வணிகம் போன்றவற்றைப் பற்றி பேசுங்கள்).
(எசேக்கியேல் 37:4-6, ரோமர் 4:17)

11. உங்கள் ஜெபங்களுக்கு பதிலளித்ததற்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள். (அதிக நேரத்தை இங்கே செலவிடுங்கள்)

Join our WhatsApp Channel


Most Read
● ஜெபயின்மை தேவதூதர்களின் செயல்பாட்டைத் தடுக்கிறது
● பலிபீடத்தில்  அக்கினியை எப்படி பெறுவது
● யாருடைய அறிக்கையை நீங்கள் நம்புவீர்கள்?
● அவர் மூலம் வரம்புகள் இல்லை
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் -2
● ஒரு புதிய இனம்
● தேவனிடம் நெருங்கி வாருங்கள்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login