हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. நாள் 21:40 நாட்கள் உபவாசம் மற்றும் பிரார்த்தனை
Daily Manna

நாள் 21:40 நாட்கள் உபவாசம் மற்றும் பிரார்த்தனை

Thursday, 12th of December 2024
0 0 308
Categories : உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனை ( Fasting & Prayer)

கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை எழுப்புங்கள்!

“கர்த்தர் மோசேயை நோக்கி: நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணு.” ‮‮யாத்திராகமம்‬ ‮40‬:‮1‬-‮2‬‬‬‬‬‬

“இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் ஸ்தாபனம்பண்ணப்பட்டது.” ‮‮யாத்திராகமம்‬ ‮40‬:(‮17‬ ‮‬‬‬‬‬) 

மேலே உள்ள வசனங்களில், முதல் மாதத்தின் முதல் நாளில் (புத்தாண்டு தினம்) வனாந்தரத்தில் கூடாரத்தை அமைக்கும்படி கர்த்தர் மோசேக்கு அறிவுறுத்துவதைக் காண்கிறோம். உங்கள் விதியை மாற்றக்கூடிய தெய்வீக பலிபீடத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால் தீமையான பலிபீடங்களும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு

தீமையான
பலிபீடம் என்பது ஜீவனுள்ள தேவனின் பலிபீடத்திலிருந்து வேறுபட்ட எந்த பலிபீடமாகும். கிறிஸ்தவர்களுக்கும் அப்பாவி ஆன்மாக்களுக்கும் எதிராக பொல்லாங்கானவன் செயல்படும் பலிபீடம். கிறிஸ்தவர்களாகிய நாம், இவ்வுலகில் ஏராளமான பலிபீடங்கள் ஜனங்களை அழிக்க முயற்சிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பலிபீடங்கள் பற்றிய சில உண்மைகள்

  • இன்றைய வேதக் குறிப்புகளைப் படிப்பதன் மூலம் பலிபீடங்களைப் பற்றிய பின்வரும் தகவல்களைக் காணலாம். 
  • ஒவ்வொரு பலிபீடத்திற்கும் ஒரு ஆசாரியன் பொறுப்பேற்கிறார். 
  • ஒவ்வொரு பலிபீடத்திற்கும் தொடர்ச்சியான பலிகள் தேவைப்படுகிறது. 
  • பலிபீடங்கள் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் இடம்.
  •  பலிபீடங்கள் உடன்படிக்கைகள் செய்யப்படும் ஸ்தளங்கள். 
  • பலிபீடங்களும் பரிமாற்ற இடமாகும். பரிவர்த்தனைகள் பலிபீடங்களில் நடக்கும். ஒவ்வொரு பலிபீடத்திலும் பேசும் ஒரு குரல் உள்ளது. 
  • பிலேயாம் ஏழு பலிபீடங்களை எழுப்பி, பலிபீடத்தில் இருந்து இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் பேச விரும்பினார், ஆனால் தேவன் பலிபீடத்திலிருந்து தம் ஜனங்களை சபிப்பதிலிருந்து அவரைத் தடுத்தார். பலிபீடங்களில் இருந்து சாபங்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் விடுவிக்கப்படலாம்.
  •  பலிபீடங்கள் சக்திவாய்ந்தவை, மேலும் அவை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு செயல்பட முடியும். தீய பலிபீடம் எவ்வளவு பலமாக இருந்தாலும், அது தேவனுடைய வல்லமையை எதிர்கொள்ளும்போது அழிக்கப்படும். உங்கள் முன்னேற்றத்திற்கு சவாலாக இருக்கும் எந்த தீய பலிபீடத்தையும் அழிக்க நீங்கள் அதிகாரத்தில் வளர வேண்டும்.

தீய பலிபீடங்களின் செயல்பாடுகள் உங்களுக்கு எப்படித் தெரியும்?

தீய பலிபீடங்கள் ஜீவனுள்ள தேவனிடமிருந்து உங்களை பறிக்க வேண்டும் என்று செயல்படுகின்றன.

1. “எப்பிராயீம் பாவஞ்செய்வதற்கேதுவாய் பலிபீடங்களைப் பெருகப்பண்ணினார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவஞ்செய்வதற்கு ஏதுவாகும்.” ‮‮ஓசியா‬ ‮8‬:‮11‬‬‬‬‬

2. தீய பலிபீடங்களால் இலட்சியங்கள்
 
3. தாமதமாகின்றன. தீய பலிபீடங்களால் 

4.இலட்சியங்கள் அழிக்கப்படலாம். தீய பலிபீடங்கள் விதிகளை மாசுபடுத்துகின்றன. (எரேமியா 19:13)

5. தீய பலிபீடங்கள் வறுமையையும், நோயையும் மற்றும் சந்ததிகளை தொடரக்கூடியதாக இருக்கிறது.

தீய பலிபீடங்களுக்கு எதிராக என்ன செய்ய

  • வேண்டும்?பலிபீடங்களின் மீது தீர்க்கதரிசன வார்த்தைகளை உச்சரியுங்கள்.

“அந்தப் பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டுபோயிற்று.” ‮‮1 இராஜாக்கள்‬ ‮13‬:‮2‬,5‬‬‬‬

நமது அமைதி தீய பலிபீடங்கள் சீராக இயங்க அனுமதிக்கும். பூமியில் நாம் அதைக் கட்டளையிடாவிட்டால், அது பரலோகத்தில் நமக்குச் கட்டளையிடப்படாது. விசுவாசிகளாகிய நாம்தான் பூமியில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டும். உங்கள் இலக்கை தொந்தரவு செய்யும் எந்த தீய பலிபீடமும் இன்று இயேசுவின் நாமத்தின் அக்கினியால் அழிக்கப்படும் என்று நான் உங்கள் வாழ்க்கையில் ஆணையிடுகிறேன்.

  • தெய்வீக பலிபீடத்தைக் கட்டுங்கள்
எலியா வறட்சிக்குப் பிறகு மழை பொழிய வேண்டும் என்று ஜெபிப்பதற்கு முன்பு, அவர் ஜனங்களை கூட்டி சேர்த்து பலிபீடத்தை செப்பனிட்டார் என்பதை கவனிக்க வேண்டும். (1 இராஜாக்கள் 18:30)

நமது பலிபீடத்தின் நிலையையும் நமது ஆராதனையின் நிலையையும் தேவனுடனான நமது உறவையும் பிரதிபலிக்கிறது. தேவனுக்கு மூன்று வகையான பலிபீடங்கள் உள்ளன; நம் சரீரங்கள் (1 கொரிந்தியர் 6:19), நமது வீடு (மத்தேயு 18:20), மற்றும் தேவாலயம் (கொலோசெயர் 1:24).


Bible Reading Plan : Act 16-20
Prayer
1. இயேசுவின் நாமத்தில் என் இலக்கிற்கு எதிராக செயல்படும் எந்த அசுத்த பலிபீடத்தையும் நான் அழிக்கிறேன். (யாத்திராகமம் 34:13)

2. எந்த விசித்திரமான பலிபீடமும், என் இலக்கிற்கு எதிராக அவமதிப்பு பேசும் காரியஙங்களை, இயேசுவின் நாமத்தில் அமைதியாக இருக்க கட்டளையிடுகிறேன். (ஏசாயா 54:17)

3. தேவனின் தூதர்களே, இயேசுவின் நாமத்தில் என் இலக்கிற்கு எதிராகச் செயல்படும் என் முற்பிதாக்களின் வீட்டின் அசுத்த குடும்ப பலிபீடங்களைச் சென்று அழித்துவிடுங்கள். (நியாயாதிபதிகள் 6:25-26)

4. இயேசுவின் நாமத்தில் என் ellakai கட்டுப்படுத்தும் எந்த அசுத்த பலிபீடத்தையும் இயேசுவின் இரத்தத்தால் அழிக்கிறேன். (எபிரெயர் 9:14)

5. இயேசுவின் நாமத்தில் என் இலக்குக்கு எதிராக செயல்படும் அசுத்த பலிபீடங்களில் எந்தவொரு அசுத்த ஆசாரியர்களின் செயல்பாடுகளையும் நான் பிணைக்கிறேன். (மத்தேயு 16:19)

6. தீய பலிபீடங்களில் எனக்கு எதிராகச் செய்யப்படும் எந்தத் தீமையும் இயேசுவின் நாமத்தில் ஆசீர்வாதமாக மாற்றப்படும். (ஆதியாகமம் 50:20)

7. இயேசுவின் நாமத்தில் என் இலக்குக்கு எதிராக விசித்திரமான பலிபீடங்களின் வல்லமைகளை  நான் நடுநிலையாக்குகிறேன். (2 இராஜாக்கள் 23:14)

8. தீமைக்காக என் பெயரை அழைக்கும் எந்த வல்லமையும்  இயேசுவின் நாமத்தில் அழிக்கப்படும். (ஏசாயா 47:12-15)

9. தேவதூதர்களே, இயேசுவின் நாமத்தில் உள்ள அசுத்த பலிபீடங்களிலிருந்து எனது நற்பண்புகள், மகிமை, ஆசீர்வாதம் மற்றும் செல்வம் அனைத்தையும் மீட்டெடுக்க உங்களை அனுப்புகிறேன். (சங்கீதம் 103:20)

10. இயேசுவின் நாமத்தில் தீய பலிபீடங்களில் என் உடைமைகள் அனைத்தையும் நான் வைத்திருக்கிறேன். (ஒபதியா 1:17)

11. பிதாவே, இயேசுவின் நாமத்தில் உங்களுக்காக ஒரு தெய்வீக பலிபீடத்தை எழுப்ப எனக்கு அதிகாரம் தாரும். (ஆதியாகமம் 22:9)

12. என் வாழ்க்கைக்கு எதிராக செயல்படும் அசுத்த பலிபீடங்களுக்கு எதிராக கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தையை நான் வெளியிடுகிறேன். (எரேமியா 23:29)

13. இயேசுவின் நாமத்தில் உள்ள அசுத்த பலிபீடங்களில் உள்ள தீய பதிவுகளிலிருந்து என் பெயரை அழிக்கிறேன். (கொலோசெயர் 2:14)

14. எனக்கு எதிராக திட்டமிடப்பட்ட எந்த மரணமும், நான் இயேசுவின் நாமத்தில் தப்பிக்கிறேன். (சங்கீதம் 91:3)

15. தேவ தூதர்களே, இயேசுவின் நாமத்தில் எனது பொருளாதார முன்னேற்றம், திருமண தீர்வு மற்றும் ஆசீர்வாதத்திற்கு எதிராக செயல்படும் சாத்தானின் பலிபீடங்களைச் சென்று உடைக்கவும். (2 நாளாகமம் 20:15)

16. இயேசுவின் நாமத்தில் என் இலக்குக்கு எதிரான சாத்தானின் குற்றச்சாட்டுகளை நான் அமைதிப்படுத்துகிறேன். (வெளிப்படுத்துதல் 12:10)

17. என் ஆசீர்வாதத்தைப் பூட்டிய எந்த வல்லமையையும், இப்போது இயேசுவின் நாமத்தில் அவற்றை இழக்கவும். (மத்தேயு 18:18)

18. இயேசுவின் நாமத்தில் உள்ள அழிவின் பட்டியலிலிருந்து என் பெயரை நான் திரும்பப் பெறுகிறேன். (சங்கீதம் 69:28)

19. பிதாவே, இயேசுவின் நாமத்தில் என் வாழ்க்கையைத் தொந்தரவு செய்பவர்களின் முகாமுக்குள் குழப்பத்தை அனுப்புங்கள். (2 நாளாகமம் 20:22)

20. இயேசுவின் நாமத்தில் என் வீடு, என் பொருளாதாரம் மற்றும் என் வாழ்க்கையைச் சுற்றியுள்ள அசுத்த  முகவர்களின் செயல்பாடுகளை முடக்குகிறேன். (எபேசியர் 6:12)

Join our WhatsApp Channel


Most Read
● கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சி
● சமாதானம் - தேவனுடைய ரகசிய ஆயுதம்
● தீர்க்கதரிசன வார்த்தையைப் பெற்ற பிறகு என்ன செய்வது?
● நாள் 39:40 நாட்கள் உபவாச ஜெபம்
● சந்திப்பிற்கும் வெளிப்பாட்டிற்கும் இடையில்
● கோபத்தைப் புரிந்துகொள்வது
● தேவன் எப்படி வழங்குகிறார் #4
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login