हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. தைரியமாக இருங்கள்
Daily Manna

தைரியமாக இருங்கள்

Tuesday, 18th of February 2025
0 0 247
Categories : எஸ்தரின் ரகசியங்கள்: தொடர் (Secrets Of Esther: Series)
உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப்பேச்சுகளினாலும் கள்ளமார்க்கத்தாராக்குவான். தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள். (தானியேல் 11:32) 

சில நேரங்களில் வாழ்க்கை பயமுறுத்துவதாக இருக்கலாம். வேதம் சொல்கிறது பிசாசானவன் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடி திரியும் சிங்கத்திற்கு தொடர்புப்படுத்துகிறது. அவன் ஒரு சிங்கம் அல்ல, ஆனால் அவன் ஒருவனாக மக்களை பயமுறுத்த முடியாது என்பது அவனுக்கு தெரியும். எனவே அவர் கர்ஜிக்க வருகிறான், பின்னர் நோக்கமுள்ள மக்கள் தங்கள் புகழ்பெற்ற நோக்கத்திலிருந்து சாதாரணமாக ஓடுகிறார்கள். ஆனால் தேவன் கொடுத்த உங்கள் நோக்கத்தில் நடக்க தைரியம் தேவை. எஸ்தர் 5:1-2 ல் வேதம் கூறுகிறது, "மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜ வஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள். ராஜா அரமனை வாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான். 
ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினாலே, ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை 

எஸ்தரிடத்திற்கு நீட்டினான். அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்". 
எஸ்தர் 5:2 முன்னதாக எஸ்தர் 4:16ல், "ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, இதின் அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், நதிக்கு இப்புறத்திலே உமக்கு ஒன்றும் இராதேபோம் என்பதை ராஜாவுக்கு அறியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள். 

உயிருக்கு ஆபத்து வந்தாலும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை. ஆம், அரசன் முன் அழைக்கப்படாமல் ஆஜராவது நாட்டின் சட்டத்திற்கு எதிரானது. ஆனால் ராஜா அவளை எப்போது அனுப்புவார்? ஆனாலும், மக்களை தூக்கிலிடுவதற்கான ஆணை கையொப்பமிடப்பட்டு, நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கையிலிருந்து நீங்கள் விரும்புவதைப் பெற தைரியம் தேவை. தேவன் சொன்னபோது தைரியமாக தொழில் தொடங்கினால் பலர் இன்று பெரியவர்களாக இருந்திருப்பார்கள். அவர்களின் மனம் வெவ்வேறு எண்ங்களால் நிறைந்தது. "நான் தோல்வியுற்றால் என்ன?" "யாரும் என்னை ஆதரிக்கவில்லை என்றால் என்ன செய்வது?" "நான் எப்படி ஆரம்பிப்பேன்?" "எனக்கு அனுபவம் இல்லை." பிசாசு அவர்களின் மனதில் சந்தேகங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை நிரப்பி, மேலும் அவர்களுடய நோக்கம் கைவிடப்பட்டது. அரண்மனையில் உள்ளவர்கள் அந்த தற்கொலை நடவடிக்கையிலிருந்து எஸ்தரிடம் பேச முயற்சிக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? அவளுடைய கன்னிப்பெண்கள் அவளிடம் பலமுறை கேட்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன், "என் பெண்ணே, நீங்கள் உண்மையிலேயே இதைச் செய்ய விரும்புகிறீர்களா?" "நீங்கள் முதலில் இறந்தால் என்ன செய்வது? உங்கள் மரணத்தால் என்ன பயன்?" "ஏன் இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்கக்கூடாது?" "சரி, போவதற்கு பதிலாக, ஒருவேளை நீங்கள் ராஜாவுக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டும்." ஆனாலும், எஸ்தர் அந்தக் கொம்பைப் பிடித்து, தன் தேவன் மீது நம்பிக்கை வைத்து, நேரில் சென்று ராஜாவுக்கு முன்பாக நின்றாள். அந்த தைரியமான நடவடிக்கையின் விளைவு என்ன? வேதம் சொல்கிறது, " ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்னவேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான். 

எஸ்தர் 5:3. கொல்லப்படுவதற்குப் பதிலாக, அவள் ராஜாவின் கவனத்தை ஈர்த்தாள். அவள் வாய் திறக்காமல், ராஜா தன் உடைமைகளில் பாதியை அவளிடம் சத்தியம் செய்யத் தொடங்கினான். ஏற்கனவே அவளுக்காக காத்திருந்தான். நண்பரே, தைரியமாக இருங்கள். விண்ணப்பத்தை அனுப்பவும். அந்தத் தொழிலைத் தொடங்கி, தேவன் உங்களிடமிருந்து பொறுப்பேற்றுக் கொள்வதைப் பாருங்கள். 'மூன்றாம் நாளில்' எஸ்தர் ராஜாவுக்கு முன்பாகச் சென்றாள் என்பதையும் கவனியுங்கள். எல்லாம் மூன்றாம் நாள்! இயேசு, மரண இடத்திற்குச் சென்ற பிறகு, மூன்றாம் நாளில் வாழ்க்கையும் தயவும் வழங்கப்பட்டது, இது மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வுக்கு வழிவகுத்தது - உயிர்த்தெழுதல்! ராஜாவிடம் தயவு கிடைத்ததால், பொற்செங்கோல் நீட்டிய நிலையில், எஸ்தருக்கு இப்போது ராஜா ஒரு வெற்றுக் காசோலையைக் கொடுத்து அவள் விரும்பியதைக் கேட்கிறாள்! ஆஹா! நீங்கள் என்ன கேட்பீர்கள்? 

Bible Reading: Numbers 11-13
Prayer
பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, நீங்கள் எனக்கு தைரியமான ஆவியைத் தரும்படி ஜெபிக்கிறேன். என் இருதயத்தை தைரியத்தால் நிரப்ப ஜெபிக்கிறேன். என்னிடமிருந்து பயத்தையும் சந்தேகத்தையும் நீக்கி, உம்மில் நம்பிக்கை கொண்டு செல்ல எனக்கு உதவுங்கள். இனி எதுவும் என்னைத் தடுக்காது என்று கட்டளையிடுகிறேன். இயேசுவின் நாமத்தில் ஆமென்.


Join our WhatsApp Channel


Most Read
● ஆவியின் கனியை எவ்வாறு வளர்ப்பது -1
● நான் கைவிட மாட்டேன்
● நாள் 34 : 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● மூன்று மண்டலங்கள்
● நாள் 20:40 நாட்கள் உபவாச ஜெபம்
● ஒப்பீட்டுதல் என்னும் பொறி
● நமது ஆவிக்குரிய வாளை காத்தல்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login