हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. நண்பர் கோரிக்கை: பிரார்த்தனையுடன் தேர்வு செய்யவும்
Daily Manna

நண்பர் கோரிக்கை: பிரார்த்தனையுடன் தேர்வு செய்யவும்

Wednesday, 26th of February 2025
0 0 205
Categories : எஸ்தரின் ரகசியங்கள்: தொடர் (Secrets Of Esther: Series)
ஆண்டவராகிய இயேசு கூறினார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.” யோவான் 16:33 இவ்வுலகில்  ஜெயிப்பது  என்பது எளிதல்ல என்பதை ஆண்டவர் அறிந்dhu அவருடைய  கிருபையால், அவர் நமது  பிரயாணத்தில் நமக்கு உதவி  செய்யவும் ஆறுதல்  அளிக்கவும் ஆதரவு அமைப்புகளை நமக்கு  அளித்தார்.  தேவன் நமக்குக்  கொடுக்கும்   இந்த ஆதரவு அமைப்புகளில் ஒன்று  தெய்வ பயம் உள்ள நண்பர்கள்.

தேவனால்   வல்லமையாய்  பயன்படுத்தப்பட்ட ஒரு பெண்மணி ஒருமுறை கூறினார், "உங்களை ஆதரிக்க சரியான நபர்கள் இருந்தால் எதுவும் சாத்தியமாகும்."

எஸ்தர் புத்தகத்தில் ஆமானைப் பற்றிய பதிவு நமக்கு  அனேக  காரியங்களை  அறிவிக்கிறது நீ ரொம்ப கம்மி. ஆமான் யூதர்களின் எதிரியாக இருந்தான், அவர்களைக் கொன்றுவிடுவதற்கான வழிகளைத் தேடினான். அவன் மற்ற யூதர்களுடன் சிறைபிடிக்கப்பட்ட ஒரு யூதரான மொர்தெகாயை வெறுத்தான். அரசரின் விருந்துக்கு ஆமான் அழைக்கப்பட்டு, அதைப் பற்றி அவனது மனைவி மற்றும் நண்பர்களுக்குத் தெரிவித்தான். மற்றவர்களுடன் உரையாடலின் போது மொர்தெகாயை மோசமான  சித்தரித்தான். ஆமானின் மனைவியும் நண்பர்களும் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா?

“அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப்போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.” எஸ்தர் 5:14

ஆமானுக்கு தெய்வீக நண்பர்கள்  இருந்திருந்தால் என்ன  நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்; அவர்கள் வாயில் இருந்து இவ்வளவு கொடூரமான வார்த்தைகள் வந்திருக்குமா?  வேதம் நம்மை எச்சரிக்கிறது,  “மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.” I கொரிந்தியர் 15:33 

 தேவனுடனான உங்கள்  பயணத்தில், தெய்வீக நண்பர்களை வைத்திருப்பதை மிகைப்படுத்த முடியாது. நீங்கள் மிகவும் சோர்வாகவும்   களைப்பாகவும் உணரும் போதெல்லாம், ஜெபிக்க நீங்கள் யாரையும் அழைக்க முடியுமா? உங்களால் எல்லோரையும் நேசிக்கவும், சிரிக்கவும், கேலி செய்யவும் முடிந்த அளவு, வெளிப்படையாக விவாதிக்கவும், உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் உங்களுக்கு யாரோ, சிலர் தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீதிமொழிகள் 27:9, பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும், என்று கூறுகிறது.

பொறுப்புணர்வுக்காக, உங்களுக்கு தெய்வீக நண்பர்கள் தேவை. யாராவது உங்கள் செயல்களை உண்மையாகவும் இறுதியில்  தேவனுடைய வார்த்தையின்  வெளிச்சத்தில் இருந்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்.  சத்தியம் கசப்பாகத்  தோன்றும்போது, அன்பில்  சத்தியத்தை பேசி அதை உங்கள் காதுகளில்  அறிவிக்க ஒருவரை நீங்கள் விரும்புவீர்கள். உங்கள் வாழ்க்கையை நேர்மறையாக பாதிக்கும் நல்ல ஆலோசனையும் வார்த்தைகளும் உங்களுக்குத் தேவை. அனனியாவின் மனைவி நல்ல ஆலோசனை வழங்கியிருந்தால், அனனியா தனது மனதை மாற்றிக்கொண்டிருக்கவும், நிலத்தை விற்றதில் இருந்து கிடைக்கும் வருமானத்தைப் பற்றி பொய் சொல்லாமல்  இருந்திருக்க  முடியும். ஆனால் இருவரும் சேர்ந்து  தீமையான காரியத்தைச் செய்யத் திட்டமிட்டனர்.

எனவே, வாழ்க்கையின்  பயணத்தின் போது, ​​​​உங்களை மீண்டும் சரியான  பாதையில் கொண்டு வந்து தொடர்ந்து சரியான பாதையில் வைத்திருக்கும் அந்த  பரிசுத்த ஆவி நிறைந்த நட்புகள் உங்களுக்குத் தேவை. 

Bible Reading: Numbers 31-32
Prayer


பிதாவே, நீர் எப்பொழுதும்  எனக்கு  
செவி கொடுப்பதற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். தெய்வீக நண்பர்கள் என் வழியில்
தொடர்ந்து வர வேண்டும் என்று நான்  ஜெபிக்கிறேன்.
உமது வழிகளோடு இணைந்திருக்கும் மக்களை என் பாதை கடக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இயேசுவின் வல்லமையான நாமத்தில். ஆமென்.




Join our WhatsApp Channel


Most Read
● நாள் 12: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● கடந்த காலம் என்கின்ற கல்லறையில் புதைந்து கிடக்காதீர்கள்
● பரிந்துரை செய்பவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசன செய்தி
● உங்கள் விடுதலையை இனி நிறுத்த முடியாது
● நிலவும் ஒழுக்கக்கேடுகளுக்கு மத்தியில் உறுதியுடன் இருப்பது
● இரண்டு முறை மரிக்க வேண்டாம்
● ராஜ்யத்திற்கான பாதையைத் தழுவுதல்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login