Daily Manna
0
0
372
யுத்தத்தை நடத்துங்கள்
Wednesday, 19th of March 2025
Categories :
விடுதலை (Deliverance)
“அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழி காட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.” (மத்தேயு 15:13)
சிலருக்கு இது விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் சபிக்கப்பட்ட சூழ்நிலையை உருவாக்கும் சில பொருட்களை உங்கள் வீட்டில் வைத்திருப்பது சாத்தியமாகும். உதாரணமாக, சில சமயங்களில், சாத்தானிய சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருளை தனிநபர்கள் வீட்டிற்கு கொண்டு வரலாம். ஆபாசம் போன்ற பிற விஷயங்களும் சில வகையான ஆவிகளுக்கு கதவைத் திறக்கலாம். சில நேரங்களில் ஒரு பொருள் அதன் மீது வைக்கப்பட்ட சாபத்தை சுமக்கக்கூடும்.
எகிப்தில் இருந்து கத்தி
புனித பூமியான இஸ்ரேலுக்கான எங்கள் சுற்றுப்பயணங்களில் ஒன்றில், நாங்கள் எகிப்துக்கும் சுற்றுப்பயணம் செய்ய நேர்ந்தது. சுற்றுப்பயணத்தின் போது, எங்கள் உறுப்பினர்களில் ஒருவர், எங்களுக்குத் தெரியாமல், ஒரு கத்தியை வாங்கினார். இது மிகவும் பழமையானது மற்றும் மிகவும் அழகாக இருந்ததால், அதை வாங்க முடிவு செய்ததாக அவர் பின்னர் எங்களிடம் கூறினார். இரவு வீடு திரும்பியபோது, தன் மார்பில் ஒரு உருவம் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவரது மனைவி, பயந்துபோய், இரவில் எனக்கு போன் செய்து நடந்ததை பற்றி கூறினார்.
அடுத்த நாள் ஆராதனையின் போது, இந்த நபர் பரிசுத்த ஆவியின் வல்லமையால் விடுவிக்கப்பட்டார். அந்த உருவம் தன்னை நோக்கி கத்துவதாகவும், "என்னை ஏன் கொன்றாய்?" என்று கேட்பதாகவும் அவர் பின்னர் என்னிடம் கூறினார். அவர் கத்தியைத் தூக்கி எறிந்தார், அந்தத் தோற்றங்கள் நின்றுவிட்டன.
இதைப் படிக்கும் பலருக்கு இந்தக் கதைகள் விசித்திரமாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன். இருப்பினும், ஆவிக்குரிய யுத்தம் மனத்திலோ அல்லது கற்பனையிலோ நடத்தப்படவில்லை; அது மிகவும் உண்மையானது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” (எபேசியர் 6:12 )
இருளின் சக்திகளின் ஊடுருவும் சக்திக்கு நீங்கள் ஆவிக்குரிய உணர்வற்றவராக இருக்க முடியாது. நாம் யுத்தத்தில் இருக்கிறோம், எதிரி குடும்பங்களை குறிவைக்கிறான். 2001 இல் உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலின் போது, தீவிரவாதிகளை கட்டிடத்தை தரையில் இருந்து ஒரு சுத்தியலால் தகர்த்து வீழ்த்தவில்லை; ஒருவேளை பாதுகாப்புப் படையினர் அவர்களைக் கைது செய்யவில்லை என்றால் அதற்குப் பல ஆண்டுகள் ஆகியிருக்கும். எனவே, பூமியில் உள்ள மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றை ஒரே நொடியில் வீழ்த்தும் ஒரு உத்தியை அவர்கள் யோசித்தனர். அதேபோல, எதிரி குடும்பங்களுக்கு பின்னால் இருக்கிறான். குடும்பம் தாக்கப்படும்போது, சமூகமும் தாக்கப்படுகின்றதை அறிந்திருக்கிறான்.
எனவே, வீட்டைப் பாதுகாக்க நாம் உழைக்க வேண்டும். நம் வீடுகளுக்கு எதிராக எதிரிகளின் குறுக்கீட்டிற்கு எதிராக நாம் போராட வேண்டும். நாம் வீடுகளில் சத்துருவின் நடத்தைகளை விட்டுச் செல்ல முடியாது. நாம் அவைகளை வேரோடு பிடுங்க வேண்டும். நாம் அறியாமலேயே நெடுங்காலமாக நீர் பாய்ச்சினோம்; அவைகளை வீழ்த்த வேண்டிய நேரம் இது. அவைகளை நம் குடும்பங்களிலிருந்து வேரோடு அகற்றி, சமாதானத்தோடு ஆளுகை செய்ய வேண்டிய நேரம் இது.
ஆபாச படங்கள்
நமது ஆவிக்குரிய ஸ்தானத்தை தகர்த்துவதற்கு எதிரி பயன்படுத்தும் மற்றொரு சாபத்தீடான விஷயம் இது. நீங்கள் வெளியே சென்று ஆபாச படத்தை வாங்க வேண்டிய நாட்கள் போய்விட்டன, ஆனால் இப்போது அவை அனைத்தும் இணையத்தளங்களில் கிடைக்கின்றன. நீங்கள் இணையத்தளங்களில் தேட வேண்டும், மேலும் நீங்கள் ஆபாச தளத்தில் நேரலையில் இருக்கிறீர்கள். திருமணங்களைப் பிரிக்கவும், இளைஞர்களின் தலைவிதியை அழிக்கவும் சாத்தான் பயன்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று. எதற்கு இல்லை என்று சொல்ல வேண்டிய நேரம் இது. இந்த போதைக்கு எதிராக ஜெபிக்கவும், அதற்கு எதிராக போராடவும் வேண்டிய நேரம் இது. அந்த தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, அந்த தளத்தை விட்டு வெளியேறி, பிசாசுக்கு நீ அவனுடைய ஒரு பொம்மை இல்லை என்று தெரியப்படுத்துங்கள். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் நீங்கள் மீட்கப்பட்டீர்கள், எனவே நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள்.
உங்கள் வீட்டில் தேவனுடைய பிரசன்னத்தை எதிர்த்து நிற்கும் இருளின் அனைத்து சக்திகளுக்கும் எதிராக தேவன் உங்கள் வீட்டைச் சுற்றி அக்கினி மதிலாய் இருக்கும்படி ஜெபியுங்கள். நீங்கள் ஜெயம் கொடுப்பவர்கள், பாதிக்கப்பட்டவர் அல்ல.
Bible Reading: Joshua 17-19
Prayer
பிதாவே, இயேசுவின் நாமத்தில், சாபத்தீடான விஷயத்தைப் பற்றிய உமது வார்த்தையின் சத்தியத்திற்கு எங்கள் கண்களைத் திறந்ததற்கு நன்றி. எங்கள் வீட்டிற்குள் பிசாசின் அணுகு புள்ளியைப் பார்க்க மீண்டும் ஒருமுறை எங்கள் கண்களைத் திறக்கும்படி நான் ஜெபிக்கிறேன். உமது கிருபை எங்களை இருளின் பிடியிலிருந்தும் நரகத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கும் என்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம் என்று கட்டளையிடுகிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● மகத்துவத்தின் விதை● கடனில் இருந்து விடுபடுங்கள் : திறவுக்கோள் # 1
● இயேசு பகிர்ந்த திராட்சரசம்
● நமது ஆவிக்குரிய வாளை காத்தல்
● முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 6
● நாள் 13: 40 நாட்கள் உபவாசம் & ஜெபம்
Comments