हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. தேவன் பெரிதும் அநுகூலமுமான கதவுகளைத் திறக்கிறார்
Daily Manna

தேவன் பெரிதும் அநுகூலமுமான கதவுகளைத் திறக்கிறார்

Saturday, 29th of March 2025
0 0 152
Categories : ஆசீர்வாதம் (Blessing)
ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். I கொரிந்தியர் 16:9

கதவுகள் ஒரு அறைக்கு செல்வதற்கான அணுகல். நமக்கான கதவுகளைத் திறக்க நாம் அனைவரும் தேவனிடம் ஜெபம் செய்கிறோம்; அனுகூலத்தின் கதவுகள், வாய்ப்பு, திருமணம், சுகம், பணத் தேவைகள், முன்னேற்றம், முதலியன. இது உண்மையில் தேவன்  தனது பிள்ளைகளுக்கு தர விரும்பும்  காரியம். அவர் வெளிப்படுத்துதல் 3:8 இல் கூறினார், உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். திறந்தவாசல் என்பது நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதங்களை அணுகுவதைக் குறிக்கிறது. நாம் ஒரு காரியங்களைச் செய்து முடிக்கப் போராடுவது தேவனின் விருப்பம் அல்ல. ஆகவே, அவருடைய குமாரனாகிய இயேசு சிலுவையில் பலியானதின்  மூலம், வாழ்க்கையின் ஒவ்வொரு நற்காரியத்தையும் நாம் அணுகுகிறோம்.

வேதம் 2 பேதுரு 1:3-4 ல் கூறுகிறது, 3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; 4. அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். ஒரு நல்ல தகப்பனாக, அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு சுதந்திரங்களை வைத்திருக்கிறார், மேலும் அவர் அவற்றை நமக்கு சித்தப்படுத்தியிருக்கிறார்.

அப்போஸ்தலனாகிய  பவுல் தனது மூன்றாவது மிஷனரி பயணத்தில் எபேசஸிலிருந்து கொரிந்தியர்களுக்கு எழுதும்போது, அங்கு அவர் கொரிந்துவில் உள்ள விசுவாசிகளுடன் இருக்கவும் அவர்களுடன் சில குறிப்பிடத்தக்க நேரத்தை செலவிடவும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டிய இடத்தில் தேவன் தனக்கு ஒரு பெரிய வாய்ப்பைத் திறந்திருக்கிறார் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க அவர் ஆர்வமாக இருந்தார். இதன் விளைவாக, எபேசு  நகர ஜனங்கள் பவுல் பிரசங்கித்த நற்செய்தியை படிப்படியாக ஏற்று தழுவினர்.

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை இஸ்ரவேலர் சுதந்தரித்த சம்பவத்தை யோசுவா புத்தகம் விவரிக்கிறது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அவர்கள் சுதந்தரித்த போது, தங்கள் முற்பிதாக்களான ஆபிரகாமுக்குச் சொந்தமான நிலத்தை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டனர். நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தில் வாழ்ந்த எபிரேயர்கள், கானானியர்கள் என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் விக்கிரக வழிபாடு செய்யும் புறஜாதியினரால் கட்டப்பட்டு சொந்தமான வீடுகளுக்குத் திரும்பினர். (ஆதியாகமம் 15:21)

பல நேரங்களில், நாம் தட்டுவதால் கதவுகள் திறக்கப்படுவதில்லை. மாறாக, தேவன் நமக்காக ஆயத்தம் செய்துள்ள ஆசீர்வாதங்களை நாம் அணுகுவதைத் தாங்கிக்கொள்ள சிலர் பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக, இஸ்ரவேல் புத்திரர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் மீண்டும் நுழைந்த பிறகு, எபிரேயர்கள் மூன்று முக்கிய தடைகளை கடக்க வேண்டியதாக இருந்தது, அவை கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு தேவனின் ஆசீர்வாதங்களையும்  வாக்குத்தத்தங்களையும் பெற்றுக்கொள்ள தொடரும்போது சந்திக்கும் மூன்று யுத்தங்களின் பிரதிபலிப்பாகும்.
 
A. அரணான பட்டணம் (Numbers 13:28)
B. ராட்சதர்களின் வம்சாவழி (Numbers 13:33)
C. ஏழு எதிர் நாடுகள் (Deuteronomy 7:1)

இஸ்ரவேலர்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த இந்தத் தடைகளும் சவால்கள் ஒவ்வொன்றும் இன்று ஒரு பயன்பாட்டில் உள்ளது. தேவனின் வாக்குத்தத்தங்களை முழுமையாக அனுபவிக்கும் பாதையில் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் தடைகள் பிரதிபலிக்கிறது. நான் உங்களை பயமுறுத்தவில்லை, ஆனால் இந்த தடைகள் உண்மையானவை என்பதையும், அவை பிசாசின் கையாளுதல்கள் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பது நல்லது.
 
தேவன் அவர்களுக்கு ஏற்கனவே வாக்குத்தத்ததை கொடுத்திருந்தார், ஆனால் பிசாசு ஜனங்களின் மனதைக் கையாள முயன்றான், அதனால் அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியாது என்பதற்காக.  ஆனால் அவன் தோல்வியடைந்துள்ளான். சிலர் இதுபோன்ற இடையூறுகளை சந்திக்கும்போது பிசாசைக் குறை கூறுவதற்குப் பதிலாக தேவனை குறை கூறுகிறார்கள். உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் வாக்குறுதிகள் பொய்யல்ல, அவை நிச்சயம் நிறைவேறும் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன்.

Bible Reading: Judges 19
Prayer
பிதாவே, இயேசுவின் நாமத்தில், இதுவரை நீர் எனக்காகத் திறந்திருக்கும் தயவு மற்றும் உயர்வுகளின் வாசல்களுக்கு நன்றி. இந்த திறந்த வாசலின் நிஜத்தில் நிலைத்திருக்க நீர் எனக்கு உதவுமாறு நான் ஜெபிக்கிறேன். என் திறந்த வாசலுக்கு எதிரான ஒவ்வொரு தடையும் இயேசுவின் நாமத்தில் அழிக்கப்பட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● கிருபையில் வளருத்தல்
● சரியான நேரத்தில் கீழ்ப்படிதல்
● விசுவாசத்துடன் எதிர்ப்பை எதிர்கொள்வது
● உங்கள் மனதை ஒழுங்குபடுத்துங்கள்
● கனமும் மற்றும் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளுங்கள்
● நித்தியத்திற்காக ஏக்கங்கள், தற்காலிகமானது அல்ல
● ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login