हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. ராட்சதர்களின் இனம்
Daily Manna

ராட்சதர்களின் இனம்

Friday, 4th of April 2025
0 0 120
Categories : மாற்றம்(transformation)
“நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.”
 
இரண்டாவது பெரிய தடையாக இருந்தது ராட்சதர்களின் இனம், எட்டு அடி உயரம் முதல் பதின்மூன்று அடி உயரம் வரை இருந்த ராட்சத மனிதர்கள் (1 சாமுவேல் 17:4). இந்த ராட்சதர்கள் உண்மையாகவும், பயமுறுத்துகிறவர்களாகவும் இருந்தவர்கள் என்று யூத வரலாற்றாசிரியர் ஜோசபஸ் ராட்சதர்களைப் பற்றி எழுதினார்.
 
நோவாவின் வெள்ளத்திற்கு முன்னும் பின்னும் ராட்சதர்கள் இருந்தனர். நோவாவின் காலத்தில், ராட்சதர்களின் இனம் மனிதர்களின் கற்பனையை தொடர்ந்து தீயவர்களாக்கியது. (ஆதியாகமம் 6:1-5 ஐப் பார்க்கவும்.) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் உள்ள ராட்சதர்கள் பயத்தை உருவாக்கினர், ஏனெனில் அவை கற்பனையை பாதித்து, பயத்தை உருவாக்குகின்றன. வேவுபார்க்க சென்ற பன்னிரண்டு பேரில் பத்து பேர் மோசேயிடம் ஒரு அறிக்கையை மீண்டும் கொண்டு வந்தபோது, ​​​​அவர்கள் அனைவரும் நிலம் ஆசீர்வதிக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டனர், ஆனால் பத்து பேர் ராட்சதர்கள் மிகவும் பெரியவர்கள், எபிரேயர்களாகிய நாம் வெட்டுக்கிளிகள் போல இருக்கிறோம் என்று சொன்னார்கள். எண்ணாகமம் 13:33ல் வேதம் சொல்கிறது, “அங்கே இராட்சதப் பிறவியான ஏனோக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.”
 
வெட்டுக்கிளி உருவம் அவர்களின் கற்பனையில் இருந்தது - அவர்கள் தங்களை சிறியவர்களாகவும் முக்கியமற்றவர்களாகவும் பார்த்தார்கள். இரண்டு மனிதர்கள், யோசுவா மற்றும் காலேப், மற்றொரு ஆவியைக் கொண்டிருந்தனர் (எண்ணாகமம் 14:24), நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, காலேப், எண்பத்தைந்து வயதில், எப்ரோனிலிருந்து மூன்று ராட்சதர்களை வெளியேற்றினார். யோசுவா 15:13-14ல் வேதம் சொல்கிறது, “எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனோக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே, பங்காகக் கொடுத்தான். அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனோக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,”
 
படிப்பில் முன்னேற முடியவில்லையே என்று நினைக்க வைக்கும் எந்தப் பிம்பத்தை உங்கள் மனதில் உருவாக்கிக் கொண்டீர்கள்? இப்படி ஒரு சாதனையை முறியடிக்கவே முடியாது என்று நினைக்க வைக்கும் வகையில் முன்னே சென்றவர்களைப் பின்தொடர்ந்து என்ன சாதனையைப் படித்தீர்கள்? சாத்தியமற்றதாகத் தோன்றும் எந்தச் சாதனையை நீங்கள் விரும்பினீர்கள்? உங்களுக்கு ஒரு நற்செய்தி உள்ளது, அது சாத்தியம். ராட்சதர்கள் இருக்கின்ற போதிலும், நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். காரணம் உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருப்பவர் பெரியவர் என்பதால் இதை நான் உறுதியாக அறிவேன். நீங்கள் திரித்துவத்தின் அவதாரம்.
 
உங்களுக்கு எதிராக எழும் எந்த எதிர்ப்பையும் அடக்கும் அளவற்ற ஆற்றலும் திறனும் உங்களிடம் உள்ளது. உங்கள் பாதையில் உள்ள ராட்சதர்களை வெல்வதற்கும் மிஞ்சுவதற்கும் உங்களுக்கு ஆவிக்குரிய பெலன் உள்ளது. ஆனால் அதை நீங்கள் தான் பார்க்க வேண்டும்.
 
யாத்திராகமம் 7:1ல் மோசேயைப் பற்றி வேதம் கூறுகிறது, “கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.” இது தேவன் மோசேக்கு அவர் வைத்திருந்த அழைப்பை காண்பிக்கிறது. மோசே தன்னை ஒரு பலவீனமான மேய்ப்பனாகவும், குற்றவாளியாகவும், தப்பியோடியவராகவும் பார்த்திருக்கலாம். ஒரு நாட்டிலிருந்து தப்பி ஓடிய ஒருவர் வாழ்க்கையில் என்ன ஆக முடியும், மேலும் அவர் தேடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அதே தேசத்தில் தான் தேவன் மோசேயினிடத்தில், “பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்” என்று கூறினார்.
 
பார்வோன் என்ற பெயர் மோசேக்கு பயமாக இருந்தது. மரண தண்டனை தலையில் தொங்கிக் கொண்டிருப்பதால் அந்தப் பெயரைச் சொன்னாலே ஓடி ஒளிந்து கொள்வார். பார்வோன் ஒரு ராட்சசனைப் போல இருந்தான், அது மோசே தனது இலக்கின் யதார்த்தத்தில் செயல்பட அனுமதிக்கவில்லை. ஆனால் தேவன், "நீங்கள் இந்த மலையை மேற்கொள்ளலாம்" என்றார். நீங்கள் ராட்சதர்களை எளிதாய் ஜெயிக்க முடியும்.
 
தாவீதும் கோலியாத்தின் முன் நின்றார், அவன் ஒரு மாபெரும் ஆளுமை மற்றும் அவனது இளமை பருவத்திலிருந்தே ஒரு போர்வீரனாக இருந்தவன். ஆனாலும், தாவீதோ பயம் அடையவில்லை; மாறாக, அவர் தேவனின் வார்த்தையை அறிக்கையிட்டார், இறுதியில் அவர் ராட்சதனைக் கொன்றார். நண்பர்களே, உங்கள் பாதையில் வரும் ராட்சதர்களை பொருட்படுத்தா தேயுங்கள்; தேவன் உங்களுடன் இருக்கிறார்; மேலே செல்லுங்கள். ராட்சதர்களை வெல்வதற்கும், அவர்களின் நிலத்தை அப்புறப்படுத்து வதற்கும் காலேபுக்கு உதவிய அதே தேவன், நீங்களும் கைப்பற்ற அவர் அதிகாரம் அளிப்பார்.

Bible Reading: 1 Samuel 10-13
Prayer
பிதாவே, இயேசுவின் நாமத்தில், இன்று எனக்கு உமது வார்த்தையைப் தந்ததற்கு நன்றி. என் மனதில் சரியான எண்ணம் இருக்க நீர் என்னை பலப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நான் இனி வாழ்க்கை ஓட்டத்தில் தோற்றுப் போகமாட்டேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● ஆசீர்வாதத்தின் வல்லமை
● காலேபின் ஆவி
● பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தூஷணம் என்றால் என்ன?
● தேவன் உங்களைப் பயன்படுத்த விரும்புகிறார்
● சரிசெய்
● அக்கிரமத்தின் வல்லமையை உடைத்தல் – (I)
● சாதாரண பாத்திரங்கள் மூலம் பெரிய கிரியைகள்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login