हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. பொறுமையை தழுவுதல்
Daily Manna

பொறுமையை தழுவுதல்

Friday, 2nd of May 2025
0 0 129
Categories : சோதனைகள்(Trials) விசுவாசம் ( Faith)
தேவனுடைய ஞானம் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது, மேலும் அவர் செய்யும் எல்லாவற்றிலும் அவருக்கு எப்போதும் ஒரு நோக்கம் இருக்கிறது. நீதிமொழிகள் 16:4 (ESV) நமக்கு நினைவூட்டுகிறது, " கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்." வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் புயல்கள், உணர்ச்சி, சரீரப்பிரகாரமாக அல்லது ஆவிக்குரிய காரியம் எதுவாக இருந்தாலும், நீங்கள் அறிந்திருக்கிறதை விட ஒரு பெரிய நோக்கத்திற்கு சேவை செய்கின்றன. இந்தப் புயல்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. சில வாழ்க்கை பாடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னை அனுமதியுங்கள்.

a) புயல்கள் வளர்ச்சியையும் செம்மையையும் தருகின்றன:
நான் ஒரு விவசாயின் மகன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். என் தந்தை கலப்பையின் பின்னால் நின்று காளை இழுப்பதை நான் பார்த்திருக்கிறேன். சிறுவயதில் நானும் என் சிறிய சகோதரனும் கலப்பையில் காளை இழுக்கும் போது நிற்போம். ஒரு விவசாயின் மகனாக வளர்ந்த நான், வாழ்க்கையின் மிகவும் வளமான தருணங்கள் பெரும்பாலும் பள்ளத்தாக்குகளில் நிகழ்கின்றன என்பதை அறிந்தேன், மலை உச்சிகளில் அல்ல. பள்ளத்தாக்குகள் மண் வளம், அரிக்கப்பட்ட மலைப்பாறைகள் மற்றும் கரிமப் பொருட்களிலிருந்து உருவாகின்றன. இங்குதான் சிறந்த வளர்ச்சி நிகழ்கிறது, மேலும் இது நம் சொந்த வாழ்க்கைக்கு ஒரு உருவகமாக செயல்படுகிறது.
 
மண் அரிப்பு மற்றும் சிதைவு போன்ற சவாலான செயல்முறைகளால் பள்ளத்தாக்கில் வளமான மண் உருவாக்கப்படுவது போல், தனிப்பட்ட வளர்ச்சி பெரும்பாலும் துன்பங்களை சமாளிப்பதன் மூலம் உருவாகிறது. நம் வாழ்வில் அதிகபட்ச வளர்ச்சி மலை உச்சியில் அல்ல, ஆனால் நாம் வாழ்க்கையின் பள்ளத்தாக்குகளில் இருக்கும்போது. பள்ளத்தாக்கில் உங்கள் வளர்ச்சி மற்றும் நேர்த்தியின் காரணமாக நீங்கள் மலையுச்சிக்குச் செல்கிறீர்கள் என்பது நகைப்புக்குரியது.
நம் வாழ்வில் ஏற்படும் புயல்கள் நம் குணத்தை வடிவமைத்து செம்மைப்படுத்தலாம். அவை நமக்கு நெகிழ்ச்சி, பொறுமை மற்றும் நம்பிக்கையை வளர்க்க உதவுகின்றன. இருப்பினும், புயலில் செல்பவரும், புயலில் இருந்து வெளியே வருபவர்களும் இருவேறு நபர்கள்.
 
ஒருவேளை நீங்கள் இப்போது ஒன்றின் நடுவில் இருக்கலாம். ஒருவேளை வியாதி அல்லது மனச்சோர்வின் புயலாக இருக்கலாம். பணக்கஷ்டமாக இருக்கலாம் அல்லது உறவில் ஒருவித பிரச்சனையாக இருக்கலாம். துர் செய்தி என்னவென்றால், இதுபோன்ற புயல்களைப் பற்றி எந்த செய்தி சேனல்களும் நம்மை எச்சரிக்கவில்லை. புயலின் மத்தியில் செல்லும் ஒருவர் விசுவாசத்தை பற்றி பேசுகிறார், புயலில் இருந்து வெளியே வந்தவர் தனது விசுவாசத்தில் வாழ்கிறார். ஆபகூக் 2:4 கூறுகிறது, " விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்."

இன்றைய வேகமான உலகில், பொறுமை என்பது உண்மையில் ஒரு நற்பண்பு, அது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. இன்றைய தலைமுறை ஒன்று குறைவாக இருக்கிறது என்றால் அது பொறுமைதான். யாக்கோபு 1:2-3 கூறுகிறது, " 2. என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,  உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்." நாம் எதிர்கொள்ளும் புயல்களை எதிர்கொள்வதில் நமது விசுவாச பயணத்திற்கு விடாமுயற்சியும் பொறுமையும் தேவை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

ஒரு சகோதரி ஒரு ஆராதனைக்குப் பிறகு என்னை அணுகினார், "பாஸ்டர் மைக்கேல், நான் மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் தேவாலயத்திற்குச் வருகிறேன், தேவன் இன்னும் என் ஜெபங்களுக்கு பதிலளிக்கவில்லை." நான் அவளிடம், "அம்மா, நான்காவது ஞாயிற்றுக்கிழமை, ஐந்தாம், இன்னும் நிறைய வர இருக்கிறது" என்று சொன்னேன். நான் உண்மையில் சொன்னது என்னவென்றால்: நீங்கள் தேவனின் வழிகாட்டுதல் மற்றும் ஆசீர்வாதங்களைப் பெற முயற்சிக்கும்போது பொறுமை அவசியம்.


தேவன் ஒரு ஏடிஎம் இயந்திரம் அல்ல, நமது பிரச்சனைகளுக்கு உடனடி பதில்களையும் தீர்வுகளையும் வழங்கவதற்கு. மாறாக, அவர் ஒரு அன்பான தகப்பன், நம் வாழ்வில் உன்னிப்பாக கவனித்து, நம் குணத்தைச் செம்மைப்படுத்தி, நம்மை நாமே சிறந்த பதிப்புகளாக வடிவமைக்கிறார். புயல்களை எதிர்கொள்ளும் போது இந்த செயல்முறை மெதுவாகவும் அடிக்கடி சவாலாகவும் இருக்கலாம், ஆனால் பொறுமையின் மூலம், தேவனின் சரியான நேரத்தில் நம்புவதற்கும், நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய கரத்தை அங்கீகரிக்கவும் கற்றுக்கொள்கிறோம்.

Bible Reading: 1 Kings 21-22
Prayer
பரலோகத் தகப்பனே, உமது வழிகாட்டுதலையும் ஞானத்தையும் நாடி, தாழ்மையான இருதயத்துடன் உம் முன் வருகிறேன். உடனடி மனநிறைவைக் கோரும் உலகில், உமது சரியான நேரத்தில் பொறுமையையும் நம்பிக்கையையும் வளர்க்க எனக்கு உதவும். நான் உம்மை நம்பி, என் வாழ்க்கைக்கான என் திட்டம் நான் கற்பனை செய்வதை விட உமது  திட்டம் மிக பெரியது என்று நம்புவதற்கு எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில்.  ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● தேவ வகையான விசுவாசம்
● உங்கள் மறுருபத்திற்கு எதிரி அஞ்சுகிறான்
● உங்கள் வழிகாட்டி யார் - |
● பிறப்பதற்கான சிறிய விஷயங்கள் பெரிய நோக்கங்கள்
● சரியான நேரத்தில் கீழ்ப்படிதல்
● உங்கள் இணைப்பை இழக்காதீர்கள்
● மாற்றத்திற்கான தடைகள்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login