हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. உங்களுக்கு அது முக்கியம் என்றால், அது கடவுளுக்கும் முக்கியம்.
Daily Manna

உங்களுக்கு அது முக்கியம் என்றால், அது கடவுளுக்கும் முக்கியம்.

Saturday, 3rd of May 2025
0 0 90
Categories : கடவுளின் இருப்பு (Presence of God)
உலக நிகழ்வுகள், இயற்கை பேரழிவுகள், யுத்தங்கள் மற்றும் உலகளாவிய எழுப்புதல் போன்ற "பெரிய விஷயங்களில்" மட்டுமே தேவன் அக்கறை கொண்டுள்ளார் என்று பல விசுவாசிகள் நினைக்கிறார்கள். அவர் உண்மையில் நாடுகள் மற்றும் விண்மீன் திரள்களின் மீது ஆளுமை கொண்டவராக இருந்தாலும், உங்கள் இருதயத்தின் அமைதியான அழுகைகளையும் அவர் அன்புடன் கவனிக்கிறார். நீங்கள் சுமக்கும் அந்த சிறிய சுமையா? ஜெபத்தில் எழுப்ப முடியாத அளவுக்கு சிறியதாகத் தோன்றுகிறதா? அது தேவனுக்கு முக்கியம்.

🔹உங்கள் பரலோகத் தகப்பனுக்கு எதுவும் சிறியதல்ல
“உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.” என்று இயேசு கூறினார். (மத்தேயு 10:29). அதன் பிறகு, அவர் இன்னும் தனிப்பட்ட ஒன்றைச் சேர்க்கிறார்: “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.” (மத்தேயு 10:30). அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள் - இந்த நேரத்தில் உங்கள் தலையில் எத்தனை முடி இழைகள் உள்ளன என்பதை தேவன் அறிவார். உங்கள் இருப்பின் மிகச்சிறிய விவரங்களில் இவ்வளவு ஈடுபாடு கொண்ட ஒரு தேவன் உங்கள் கவலைகளை எப்போதாவது புறக்கணிக்க முடியுமா?

நாம் பிரச்சனைகளை வகைப்படுத்த முனைகிறோம்: "இது பற்றி ஜெபிப்பது முக்கியமானது. இது இல்லை." ஆனால் தேவன் அதை அப்படிப் பார்ப்பதில்லை. அது உங்கள் இருதயத்தைத் தொட்டால், அது அவருடையதைத் தொடுகிறது. அது பள்ளி பாடங்களக் குறித்து பதட்டத்துடன் போராடும் குழந்தையாக இருந்தாலும் சரி, பழுதுபார்க்க முடியாதபோது உடைந்த சாதனமாக இருந்தாலும் சரி, அல்லது திடீரென்று அமைதியாகிவிட்ட ஒரு நண்பராக இருந்தாலும் சரி - அவர் பார்க்கிறார், அவர் அறிவார், அவர் அக்கறை காட்டுகிறார்.

🔹சாக்ஸ் மற்றும் ஒரு அன்பான தந்தையின் கதை
ஒரு மாலை, நாங்கள் தேவாலயத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​என் மகள் அபிகேலுக்கு (அப்போது அவளுக்கு நான்கு வயது) அவளுக்குப் பிடித்த ஜோடி சாக்ஸ் கிடைக்கவில்லை. ஒரு பெரியவருக்கு அது அற்பமானதாகத் தோன்றலாம், ஆனால் அவளுக்கு, அது எல்லாவற்றையும் குறிக்கிறது. அவள் மூலையில், கண்ணீரில் அழுதுக்கொண்டு நின்றாள். அந்த நேரத்தில், நான் நிறுத்திவிட்டு, "ஜெபம் செய்து, சாக்ஸ்களைக் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவுமாறு இயேசுவிடம் கேட்போம்" என்று சொன்னேன். ஒரு நிமிடத்திற்குள், அவை ஒரு மெத்தையின் கீழ் இருப்பதைக் கண்டோம். அவள் கண்கள் பிரகாசித்தன - சாக்ஸ் கிடைத்ததால் மட்டுமல்ல, கர்த்தராகிய இயேசு தன் சாக்ஸ் மீது அக்கறை கொண்டுள்ளார் என்பதை அவள் உணர்ந்ததால்.

அன்று மாலை, அவள் தேவாலயத்தில் இருந்த அனைவரிடமும், “என் சாக்ஸைக் கண்டுபிடிக்க இயேசு எனக்கு உதவினார்!” என்று சொன்னாள். பாருங்கள், உங்கள் பரலோகத் தந்தை அப்படித்தான். அவர் உங்கள் பிரச்சினைகள் ஒரு குறிப்பிட்ட அளவு தீவிரத்தை அடையும் வரை காத்திருக்க மாட்டார், பின்னர் அவர் தலையிடுகிறார். அவர் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்திலும் ஈடுபட்டுள்ள ஒரு நெருங்கிய தந்தை.

🔹நீங்கள் எப்போதும் அவருடைய மனதில் இருக்கிறீர்கள்
சங்கீதம் 139:17 கூறுகிறது, “தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.” உங்களைப் பற்றிய தேவனின் நினைவுகள் நிலையானவை. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, ​​அவர் உங்களுடன் கொண்டாடுகிறார். நீங்கள் கவலைப்படும்போது, ​​அவர் உங்களை ஆறுதல்படுத்த சாய்கிறார். நீங்கள் முக்கியமற்றவராக உணரும்போது, ​​நீங்கள் அதிசயமாகவும் அற்புதமாகவும் படைக்கப்பட்டிருப்பதை அவர் உங்களுக்கு நினைவூட்டுகிறார்.

எரேமியா 29:11 வெறும் ஒரு நல்ல வசனம் அல்ல. அது ஒரு வாக்குறுதி: “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” இந்தத் திட்டங்களில் முக்கிய மைல்கற்கள் மற்றும் உங்கள் நாளின் சிறிய தருணங்கள் இரண்டும் அடங்கும்.

🔹அவரை ஒவ்வொரு பகுதிக்கும் அழைப்பு கொடுங்கள் 
சில நேரங்களில் நாம் தேவனை சிறிய விவரங்களுக்கு வெளியே விட்டுவிட்டதால் தேவையில்லாமல் போராடுகிறோம். அவரை உள்ளே அனுமதியுங்கள். உங்கள் அன்றாட வழக்கங்கள், உங்கள் உணர்ச்சிப் போராட்டங்கள், உங்கள் பொருளாதார முடிவுகள் மற்றும் உங்கள் ஆடைத் தேர்வுகள் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் கூட அவரை அழையுங்கள்! அவருக்கு எதுவும் வரம்பு மீறவில்லை. ஒரு பிள்ளை அன்பான பெற்றோரை நம்பியிருப்பது போல, நீங்கள் அவர் மீது சார்ந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

Bible Reading: 2 Kings 1-3
Prayer
பரலோகத் தந்தையே,

புயல்களில் மட்டுமல்ல, அமைதியிலும் கூட என்னைக் காணும் தேவனாக இருப்பதற்கு நன்றி. நான் உம்மை நேசிக்கிறேன் ஆண்டவரே. என் சுமைகளை நான் தனியாகச் சுமக்க முயற்சித்த நேரங்களுக்காக என்னை மன்னியுங்கள். இன்று, அவை அனைத்தையும் உமக்கு அர்ப்பணிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!!


Join our WhatsApp Channel


Most Read
● கிருபையினால் இரட்சிக்கபட்டோம்
● விசுவாசித்து நடப்பது
● நாள் 28: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● சூழல்கள் பற்றிய முக்கிய நுண்ணறிவு - 1
● மறுரூபத்திற்கான சாத்தியம்
● கிறிஸ்துவின் மூலம் ஜெயங்கொள்ளுதல்
● ஜெபயின்மை தேவதூதர்களின் செயல்பாட்டைத் தடுக்கிறது
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login