हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்
Daily Manna

கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்

Sunday, 15th of June 2025
0 0 103
Categories : பிரார்த்தனை (Prayer)
“துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.”
சங்கீதம்‬ ‭18‬:‭3‬ ‭

தாவீது, "நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்" என்றார். தேவனை நோக்கி கூப்பிடுதல் என்பது ஜெபத்தைக் குறிக்கிறது. ஒரு பழைய சீனப் பழமொழி, “ஒரு மனிதனுக்கு ஒரு மீனைக் கொடுத்தால், அவனுக்கு ஒரு நாள் உணவளிக்கின்றாய்; ஒரு மனிதனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுங்கள், நீங்கள் அவருக்கு வாழ்நாள் முழுவதும் உணவளிக்கிறீர்கள். நீங்கள் சரியான முறையில் ஜெபிக்கக் கற்றுக்கொண்டால், அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மட்டுமல்ல, உங்களைப் பின்பற்றும் தலைமுறைகளுக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்.

“என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.”
‭‭எரேமியா‬ ‭33‬:‭3‬

நாம் கர்த்தரைக் கூப்பிடும்போது என்ன நடக்கும்?

எரேமியா 33:3 (ஆ) கூறுகிறது, "நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்."

நம்மில் பெரும்பாலோர் ஜெபிக்கிறோம், ஆனால் பெரும்பாலும், தேவன் நமக்குச் செவிசாய்த்தார் என்பதில் நாம் உறுதியாக இல்லை அல்லது நம்பிக்கை இல்லை. நீங்கள் ஒரு வீட்டிற்காக ஜெபிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் ஜெபித்தவுடன், உங்கள் வீடு மற்றும் பிற விவரங்களை ஒரு கனவில் அல்லது ஒரு தரிசனத்தில் தேவன் உங்களுக்கு காட்டுகிறார். இது தேவன் மீதான விசுவாசம் மற்றும் நம்பிக்கையின் உயர்ந்த மட்டத்தில் உங்களை கொண்டு செல்லும், அது குறிப்பிடத்தக்கதாக இருக்கும். வீடு கட்டுவதில் தாமதம் ஏற்பட்டாலும் உறுதியாக இருப்பீர்கள். இதற்குக் காரணம், கர்த்தர் ஏற்கனவே உங்களுக்கு காண்பித்துள்ளார். இது ஜெபத்தின் தீர்க்கதரிசன பரிமாணம்.

நீங்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது நடக்கும் இரண்டாவது விஷயம்: சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள் (சங்கீதம் 18:3)

எதிரிகள் மாம்ச பிரகாரமாகவோ அல்லது ஆவிக்குரிய எதிரிகளாக இருக்கலாம் (அசுத்த ஆவிகள் போன்றவை). ஜெபம் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் எதிரிகளிடமிருந்து (காணக்கூடியது மற்றும் காணப்படாத) விடுதலையைக் கொண்டுவரும்.

ஒரு குடும்பம் இருந்தது, அந்த குடும்பம் இரவு நேரத்தில் தங்கள் வீட்டில் நிழல்களைப் பார்க்கத் தொடங்கும். அவர்கள் விரக்தியடைந்து பல வழிகளில் முயற்சி செய்தனர். ஒரு நாள் அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, அவர்களின் வீட்டிற்கு (வேறு மாநிலத்தில் இருந்த) பயணம் செய்யச் சொல்லி, என்னுடைய பிஸி ஷெட்யூல் காரணமாக என்னால் வர முடியவில்லை என்று அவர்களிடம் கூறினேன். அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், நான் அவர்களுக்கு வழங்கிய அறிவுரைகளை அவர்கள் கவனித்தால், அவர்கள் விடுதலை பெறுவார்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன்.

தயக்கத்துடன் ஒப்புக்கொண்டனர். முழு குடும்பமும் இரண்டு நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம் செய்ய வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். அன்று முழுவதும் தங்கள் இல்லத்தில் அபிஷேகம் செய்து தேவனை ஆராதிக்க வேண்டும். இரண்டாவது நாள், என் தொலைபேசி ஒலித்தது. அது அந்த வீட்டின் தலைவர். அவர் மகிழ்ச்சியில் கூச்சலிட்டார், “பாஸ்டர் மைக்கேல், என் வீட்டில் எந்த நிழல்களும் இல்லை. கர்த்தராகிய இயேசு எங்களை விடுதலையாக்கினார்."

இதைப் படிக்கும் என் அன்பு நண்பர்களே. தேவன் பட்சபாதமுள்ளவரல்ல. நீங்கள் யாராக இருந்தாலும் - பணக்காரர் அல்லது ஏழையாக இருந்தாலும் நீங்கள் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டால்:

1 - உனக்கு அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை அறிவிப்பார்.

2 - உன் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிப்பார்.

Bible Reading: Esther 9-10 , Job 1-2
Prayer
பிதாவே, உமது வல்லமையினால், இயேசுவின் நாமத்தினாலே, என் முன்னேற்றத்திற்கும் என் குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்கும் இடையூறாக இருக்கும் ஒவ்வொரு வல்லமையையும் சிதறடித்து அழித்துவிடும்.

என் முன்னேற்றத்தைத் தடுக்கும் ஒவ்வொரு சாத்தானின் தடையும், இயேசுவின் நாமத்தில் அக்கினியால் சிதறடிக்கப்படும்.



Join our WhatsApp Channel


Most Read
● தேவனின் வல்லமைமிக்க கரத்தின் பிடியில்
● கத்தரிக்கும் பருவங்கள்- 3
● அன்பைத் தேடி 
● பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்
● நல்ல வெற்றி என்றால் என்ன?
● இயேசு ஏன் அத்தி மரத்தை சபித்தார்?
● நாள் 15: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login