english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. சாத்தான் உங்களை அதிகம் தடுக்கும் ஒரு பகுதி
అనుదిన మన్నా

சாத்தான் உங்களை அதிகம் தடுக்கும் ஒரு பகுதி

Thursday, 4th of September 2025
0 0 508
Categories : ஆராதனை (Worship)
“அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து; நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும்மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.”
‭‭யாத்திராகமம்‬ ‭10‬:‭24‬ ‭l

பார்வோன் மோசேயைக் azhaithu, கர்த்தருக்குப் போய்ச் aaradhikumbadi சொன்னார். மேலோட்டமாகப் பார்த்தால், பார்வோன் இறுதியாக தோல்வியை ஒப்புக்கொண்டது போல் தெரிகிறது. இருப்பினும், நீங்கள் உற்று நோக்கினால், பார்வோன் மந்தைகளையும் மிருக ஜுவன்களையும் பின்னால் வைத்திருந்தான்.

காரணம், பார்வோன் கர்த்தரை ஆராதிக்கும் இஸ்ரவேலின் திறனைக் குறைக்க விரும்பினான். எனவே மோசே மீண்டும் சமரசம் செய்ய மறுத்துவிட்டார்.

நீங்கள் யோபு 1ஐப் படித்தால், எதிரி முதலில் தாக்கியது கால்நடைகளைத் தான். இதற்குக் காரணம், யோபு தினமும் காலையில் தேவனுக்கு பலிகளைச் செலுத்துவார், இது ஆராதனையின் அடையாளமாக இருந்தது. கால்நடைகள் இல்லை என்றால், யோபு எப்படி தேவனை வணங்க முடியும்?

இன்று தேவனை ஆராதிக்க எருதுகளும் ஆடுகளும் தேவையில்லை என்பதற்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். கர்த்தராகிய இயேசு, தம்முடைய ஒரே பரிபூரண தியாகத்தின் மூலம், திரையை கிழித்தெறிந்தார், அதனால் இப்போது நாம் தேவனின் பிரசன்னத்திற்குள் பிரவேசிக்க முடியும்.

“ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.”
‭‭எபிரெயர்‬ ‭10‬:‭14‬ ‭

தேவன் தேடுவது ஒன்று என்றால் அது ஆராதனைதான்.  யோவான் 4:23 (NLT) நமக்குச் சொல்கிறது, ““உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.”

எல்லாவற்றையும் விட தேவன்  விரும்புவது ஒன்றுதான்; அவருடைய முகத்தைத் தேட நாம் எடுக்கும் நேரம் இது. மேலும் எதிரி (பிசாசு) தேவனை ஆராதிப்பதை  தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வாin. எதிரியின் உபாயங்களைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரித்தார் (2 கொரிந்தியர் 2:11 பாருங்கள்).

பெருமை
பெருமையை விட உண்மையான aaradhanaiku வேறு எதுவும் தடையாக இல்லை. ஒருவர் விழிப்புடன் இல்லாவிட்டால், ஒருவன் தன் பணிவைக் கண்டு பெருமைப்படலாம். சில கிறிஸ்தவர்கள் தேவன் அவர்களைப் பயன்படுத்துவதைப் பற்றி பெருமைப்படுகிறார்கள். இயேசுவை உட்கார வைத்துக்கொண்டு எருசலேமுக்குள் நுழைந்த கழுதையை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நமது பொருளால் தேவனை வணங்கத் தவறுவது
நீதிமொழிகள் 3:9-10ல், இந்தக் கட்டளையைக் காண்கிறோம்,

உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து தங்கள் தேவனை ஆராதிப்பதற்காக வெறுங்கையுடன் செல்வதை பார்வோன் பொருட்படுத்தவில்லை, தங்கள் உடைமைகளை எகிப்தில் விட்டுவிட்டு செல்லும்படி கட்டளையிட்டான்.

பழைய உடன்படிக்கையின் கீழ் தேவன் உண்மையில் அவரை ஆராதிப்பதற்காக அவருடைய ஆசீர்வாதங்களில் இருந்து எந்த அன்பளிப்பும் அல்லது காணிக்கையும் இல்லாமல், வெறுங்கையுடன் தம் முன் வருவதைத் தடை செய்தார். “வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது.” என்று தேவன் கட்டளையிட்டார். (யாத்திராகமம் 34:20).

நாம் கொடுப்பதன் மூலம் தேவனை ஆராதிப்பது, நம்மிடம் உள்ள அனைத்திற்கும் தேவனை ஆதாரமாக ஒப்புக்கொள்கிறது, மேலும் அவர் நமக்கு முதலில் கொடுத்தவற்றின் நிர்வாகிகள் மட்டுமே. இங்குதான் பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் போராடுகிறார்கள்.

Bible Reading: Ezekiel 11-13
ప్రార్థన
ஜுவனுள்ள தேவனே உம்மைஆராதிப்பதற்க்கு என்னைத் தடுக்கும் ஒவ்வொரு வல்லமையையும் இயேசுவின் நாமத்தில் துண்டிக்கப்படும். ஆமென்.


Join our WhatsApp Channel


Most Read
● நாள் 09: 40 நாட்கள் உபவாசம் & பிரார்த்தனை
● ஆவியின் கனியை எவ்வாறு வளர்ப்பது -2
● செல்வாக்கின் பெரிய பகுதிகளுக்கான பாதை
● அவருடைய சித்தத்தை செய்வதன் முக்கியத்துவம்
● உங்கள் வாழ்க்கையில் நீடித்த மாற்றங்களை எவ்வாறு கொண்டு வருவது -1
● நீதியின் வஸ்திரம்
● மன்னிக்காத தன்மை
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2026 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్