english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. விசுவாசத்தில் உறுதியாய் நிற்பது
అనుదిన మన్నా

விசுவாசத்தில் உறுதியாய் நிற்பது

Thursday, 30th of May 2024
0 0 980
Categories : விசுவாசம் ( Faith)
”அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.“
‭‭ரோமர்‬ ‭4‬:‭19‬-‭21‬ ‭

விசுவாசத்தின் ஒவ்வொரு சோதனையின் சாராம்சம் நம்பிக்கையை அதிகரிப்பதாகும். தேவன் மனிதர்களை சோதிக்கிறார், அதனால் அவர் அவர்களை விசுவாசத்தில் பலப்படுத்த முடியும், அவர்களை உறுதியாக நிற்க வைத்து, சூழ்நிலைகளால் எளிதில் அலைக்கழிக்க முடியாது. வாழ்க்கையின் சவால்கள் மற்றும் புயல்களால் நீங்கள் அடிக்கடி அதிர்ச்சியடைகிறீர்களா? நீங்கள் இன்னல்கள் மற்றும் சவால்களை கடக்கும்போது, ​​அவர் மீதான உங்கள் விசுவாசம் பலப்படுத்தப்படும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.

ஆபிரகாம் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் உலகம் அவர்மீது வீசிய மனச்சோர்வுகள் இருந்தபோதிலும், ஆபிரகாம் தனது வாழ்க்கையில் தேவனின் வாக்குறுதியில் தடுமாறவில்லை என்பதை நமது திறவுகோல் வசனம் பேசுகிறது. மகிமையையும் கணத்தையும் செலுத்தி, தேவன் மீதான விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். யோபுவும் வேறுபட்டவர் அல்ல. தனது பிள்ளைகள், சொத்துக்கள், செல்வங்கள் அனைத்தையும் இழந்த பிறகும், தனது துன்பம் முடியும் வரை விசுவாசத்தில் உறுதியாக நின்று தேவனை வணங்கினார். (யோபு 1:20-22)

தேவனின் வாக்குறுதிகள் உறுதியானவை மற்றும் தரையில் விழ முடியாது, ஆனால் நாம் நம் விசுவாசத்தை இழந்தால் அல்லது சோர்வடைந்தால் அவை நம் வாழ்வில் நிறைவேறாமல் போகலாம். இன்று சோர்வை எதிர்த்து நில்லுங்கள். பிசாசு உங்களை குறித்து சொல்லும் விதத்தில் உங்கள் சுழைனிலை முடிவடையப் போவதில்லை. அவனது பொய்களை நம்ப மறுத்து, வார்த்தையில் கவனம் செலுத்துங்கள். அவனையும் அவனது செயல்களையும் எதிர்த்து நில்லுங்கள். சந்தேகத்திற்கு இடமளிக்க வேண்டாம். (யாகோபு 4:7)

கர்த்தராகிய இயேசு எப்போதும் தம்முடைய சீஷர்களின் விசுவாசமின்மைக்காக அவர்களை மென்மையாகக் கடிந்துகொண்டார். அவவிசுவாசத்தின் பாவத்தைப் போல எதுவும் தேவனை கோபப்படுத்துவதில்லை. தேவன் சந்தேகப்படுவதை வெறுக்கிறார். எல்லா மனிதர்களும் தங்கள் அன்றாட வாழ்க்கை மற்றும் விநியோகத்திற்காக அவரை விசுவாசிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

விசுவாசத்தில் உறுதியாக நிற்க, தேவனுடைய வார்த்தையில் உள்ள வாக்குறுதிகளை நீங்கள் தொடர்ந்து நினைவுபடுத்த வேண்டும். வார்த்தையின் மூலம் உங்கள் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டு சழ்நிலைகளில் ஒரு புதிய திருப்பத்தைப் பார்க்கவும். கடவுளுடைய வார்த்தை உங்கள் இதயத்தில் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்படும்போது உங்கள் நம்பிக்கை பலப்படுத்தப்படுகிறது. கடவுள் மற்றும் அவருடைய வார்த்தைகளுக்கு ஒரு பசியை உருவாக்குங்கள். உங்களைப் பற்றி, உங்கள் குடும்பம், உங்கள் உடல்நலம், உங்கள் நிதி, உங்கள் குழந்தைகள், உங்கள் பொருளாதாரம் மற்றும் உங்கள் சூழ்நிலையைப் பற்றி சொல்லப்பட்டதை வார்த்தையில் தேடி , அதை விசுவாசியுங்கள். தேவனின் வார்த்தையை விட அதிக உறுதியளிக்கும் பாதுகாப்பு சுவிட்ச் அல்லது லைஃப் ஜாக்கெட் எதுவும் இல்லை. அவருடைய வார்த்தை ஆம் என்றும் ஆமென் என்றும் உள்ளது. (2 கொரிந்தியர் 1:20)

தேவனின் பிள்ளைகளே, தேவனின் வாக்குறுதிகளுக்காகக் காத்திருப்பதைத் தேர்ந்தெடுங்கள், அவர் செய்ததற்காக அவரைப் துதித்து போற்றுங்கள். உங்கள் ஆராதனை உங்கள் சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்து, உங்கள் வாழ்க்கையில் தேவன் செயல்படுவதைப் பாருங்கள். நீங்கள் விசுவாசத்தில் உறுதியாக நின்று விசுவாசத்தில்வல்லவர்களாக மாறுவதை நான் காண்கிறேன்.
ప్రార్థన
பிதாவே, எப்போதும் என் விசுவாசத்தை வளர்க்கும் உமது வார்த்தைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். உமது வாக்குறுதிகள் அனைத்திற்கும் சமரசம் செய்து கொள்ளாமல் காத்திருப்பதற்கு கிருபை தருமாறு ஜெபிக்கிறேன். ஆண்டவரே, உறுதியாக நிற்க எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில்.


Join our WhatsApp Channel


Most Read
● இயேசு ஏன் பாலகனாக வந்தார்?
● தேவனை சேவிப்பது என்றால் என்ன -I
● நாள் 30: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● உங்கள் இருதயத்தை பரிசோயுங்கள்
● ஆண்டவரே, கவனச்சிதறல்களிலிருந்து என்னை விடுவியும்
● பரலோகத்தின் வாக்குத்தத்தம்
● திறமைக்கு மேல் குணம்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్