தினசரி மன்னா
0
0
90
கர்த்தருக்குள் உங்களை எப்படி திடப்படுத்திக்கொள்வது ?
Saturday, 12th of July 2025
Categories :
உணர்ச்சிகள் (Emotions)
1 சாமுவேல் 30-ல் பாளையத்திற்கு திரும்பியபோது, தாவீதும் அவனது ஆட்களும் அமலேக்கியர்கள் மீது தாக்குதலை நடத்தி, யாரையும் கொல்லாமல் தங்கள் மனைவிகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்துச் சென்றதைக் கண்டறிந்தார்.
தாவீதும் அவனது ஆட்களும் அழிவைக் கண்டு, தங்கள் குடும்பங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை உணர்ந்து, இனி முடியாது என்று அழுதார்கள்.
தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். (1 சாமுவேல் 30:6)
சோர்வு அவரை வீழ்த்த தாவீது அனுமதிக்கவில்லை என்பதை கவனியுங்கள். மாறாக, கர்த்தருக்குள் தன்னை உற்சாகப்படுத்தவும் பலப்படுத்தவும் தேர்வு செய்தார். உங்களை ஆதரிக்க, உங்கள் கையைப் பிடிக்க யாரும் இல்லாத நேரங்கள் இருக்கும்; அது போன்ற சமயங்களில் தான் பலர் வீழ்ந்துள்ளனர், மீண்டும் எழுந்திருக்க முடியாது. எப்படிப்பட்ட நிலைமை உங்களுடையதாக இருக்கக்கூடாது என்று நான் தீர்க்கதரிசனம் உரைக்கிறேன். எழுந்திருங்கள்! கர்த்தருக்குள் உங்களை திடப்படுத்திக்கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தாவீது கர்த்தருக்குள் தன்னைப் திடப்படுத்த்தியபோது, அவனுடைய ஆட்களும் அவனிடம் திரும்பி வந்தார்கள். எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் கர்த்தரில் உங்களை திடப்படுத்தும்போது, அந்த ஊக்கம் மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும். இது உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
தாவீது கர்த்தருக்குள் தன்னை எப்படி திடப்படுத்திக்கொண்டார் என்பது வேதத்தில் தெளிவாக இல்லை. ஒருவேளை, அவர் தனது வீணையை எடுத்துக் கொண்டு, ஒரு தனி இடத்திற்கு சென்று, தேவனை புகழ்ந்து ஆராதனை பாடல்களைப் பாடத் தொடங்கியிருப்பார். தாவீதுக்கு ஒருவேளை ஆராதிக்கும் உணர்வில்லாமல் இருந்திருக்கலாம், ஆனாலும் அவர் அதை செய்தார்.
உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறையான சூழ்நிலைகளை பெரிதாக்காதீர்கள். மாறாக, தேவனை மகிமைப்படுத்துங்கள். உங்கள் ஹெட்ஃபோன்களை வைத்து, சில ஆராதனை பாடல்களை கேட்டு, அவருடைய நாமத்தை உயர்த்துங்கள். இல்லையெனில் நீங்கள் உங்கள் வேதத்தை திறந்து, உங்களை பெலப்படுத்தும் வசனத்தின் ஒரு பகுதியை உரக்க வாசியுங்கள். உங்கள் ஆவி மனிதன் வேத வார்த்தையைப் பேசும் உங்கள் குரலை கேட்ப்பார், மேலும் உங்கள் ஆவி மனிதனில் விசுவாசம் எழும். (ரோமர் 10:17)
தேவனுடைய ஊழியர் ஒருவர் ஒருமுறை கூறினார், "நீங்கள் தேவனை பெரிதாக்கும்போது, உங்கள் பிரச்சனைகளை சிறியதாக்குகிறீர்கள்." இது வல்லமை வாய்ந்தது இல்லையா? இப்படித்தான் நீங்கள் கர்த்தருக்குள் உங்களை உற்சாகப்படுத்திக்கொள்ளலாம். வெற்றி விரைவில் உங்கள் வசமாகும்! உங்கள் சாட்சியைக் கேட்க காத்திருக்கிறேன்.
Bible Reading: Palms 134-142
ஜெபம்
கிருபையுள்ள பிதாவே, நீர் மட்டுமே என் நம்பிக்கையும் பலனுமாய் இருப்பதற்கு நன்றி செலுத்துகிறேன். நீர் ஒருபோதும் என்னைத் தோற் ற்றுப்போக விட மாட்டீர் என்பதை அறிந்து, நான் உம்மைச் சார்ந்திருக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● ஆவிக்குரிய கதவை முடுதல்● ஆபாசத்திலிருந்து விடுதலைக்கான பயணம்
● பாவ கோபத்தின் அடுக்குகளை அவிழ்ப்பது
● ஆபாச படங்கள்
● ராஜ்யத்திற்கான பாதையைத் தழுவுதல்
● பண்டைய இஸ்ரேலின் வீடுகளில் இருந்து கற்க வேண்டிய பாடங்கள்
● மறுரூபத்திற்கான சாத்தியம்
கருத்துகள்