தினசரி மன்னா
0
0
33
மேற்கொள்ளூம் விசுவாசம்
Tuesday, 29th of July 2025
Categories :
கிறிஸ்துவில் நமது அடையாளம்(our identity in Christ)
“தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?”
1 யோவான் 5:4-5
வெளிப்படுத்துதல் அத்தியாயங்கள் 2 மற்றும் 3 இல், கர்த்தராகிய இயேசு ஏழு தேவாலயங்களில் உரையாற்றுகிறார். ஒவ்வொரு சபையிலும், ஜெயங்கொள்ளும் அனைவருக்கும் ஒரு வாக்குத்தத்தம் இருக்கிறது. உங்களுடன் மிகவும் உண்மையாய் சொல்வதென்றால், பல சமயங்களில், இந்த வாக்குத்தத்தங்களைக் குறித்து பயமுறுத்தப்பட்டிருக்கிறேன். காரணம் அவைகள் நிபந்தனைக்குட்பட்டவைகள்.
பாருங்கள்:
“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்” வெளிப்படுத்தின விசேஷம் 2:7
“ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை”
வெளிப்படுத்தின விசேஷம் 2:11
“ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன்”
வெளிப்படுத்தின விசேஷம் 2:17
“ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.”
வெளிப்படுத்தின விசேஷம் 2:26
“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.”
வெளிப்படுத்தின விசேஷம் 3:5
“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்”
வெளிப்படுத்தின விசேஷம் 3:12
“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.”
வெளிப்படுத்தின விசேஷம் 3:21
இருப்பினும், நான் 1 யோவான் 5:4-5 ஐப் படித்தபோது, அது என் ஆத்துமாவிற்கு விடுதலையைக் கொடுத்தது. ஜெயங்கொள்பவராக பட்டியலிடப்பட வேண்டிய தகுதியானது, இயேசு கிறிஸ்து செய்து முடித்த வேலையில் நம் விசுவாசத்தை வைப்பது என்பதை நான் உணர்ந்தேன். நம் அனைவருக்கும் இயேசு சிலுவையில் செய்ததை நீங்களும் நானும் கூட்டவோ குறைக்கவோ எதுவும் செய்ய முடியாது.
‘ஜெயங்கொள்ளுகிறவன்’ என்பது ஒரு வல்லமை வாய்ந்த வார்த்தை, மேலும் தேவனின் பிள்ளைகளாகிய நாம் ஜெயங்கொள்பவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். இயேசு கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும் இவ்வுலகில் ஜெயங்கொள்பவர்களாக வாழ்வதற்கான ஆற்றலை நமக்கு அளித்துள்ளது.
Bible Reading: Isaiah 19-23
வாக்குமூலம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் இயேசு எனக்காக பெற்ற வெற்றியை அறிவிக்கிறேன். ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● உங்கள் வழிகாட்டி யார் - II● நீங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டதாக உணர்ந்தீர்களா?
● ராஜ்யத்திற்கான பாதையைத் தழுவுதல்
● ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும்
● கடைசி காலம் - தீர்க்கதரிசனக் கவலை
● தேவன் தாய்மார்களை சிறப்புறப் படைத்தார்
● சரியான கவனம்
கருத்துகள்