english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. தேவதூதர்கள் சுற்றிலும் பாளையமிறங்கியிருக்றார்கள்.
தினசரி மன்னா

தேவதூதர்கள் சுற்றிலும் பாளையமிறங்கியிருக்றார்கள்.

Thursday, 31st of July 2025
0 0 45
Categories : தேவதூதர்கள் (Angles)
இந்த கடைசி காலத்தில், பலர் கடினமான காலங்களை கடந்து செல்கின்றனர். ஒரு கடினமான சூழ்நிலை அல்லது உங்கள் தொழில், வேலை அல்லது வியாபாரம் தொடர்பான சில நிச்சயமற்ற சூழ்நிலைகளைப் பற்றி நீங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கலாம். இன்றைய தின தியானம் உங்கள் சூழ்நிலையில் ஒரு திருப்புமுனையைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.

ஆதியாகமம் 32-ல் பார்க்கும்போது, யாக்கோபு ஒரு பயணத்தில் இருக்கிறார். அவரது குடும்பத்திற்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. தெரியாததை எதிர்கொள்ளும்போது, ​​அவர் பயப்படுகிறார்.

“யாக்கோபு பிரயாணம் பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள். யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான்.”
‭‭ஆதியாகமம்‬ ‭32‬:‭1‬-‭2‬

"மக்னாயீம்" என்ற வார்த்தையின் அர்த்தம் "இரண்டு பரிவாரம்". யாக்கோபு, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உடைமைகள் அங்கு முகாமிட்டுள்ளனர், மேலும் தேவதூதர்களின் கூட்டமும் அங்கு முகாமிட்டுள்ளது.

ஒருவேளை, யாக்கோபைப் போலவே, நீங்கள் ஏதோ ஒரு பிரயாணத்தில் இருக்கலாம். அல்லது, உங்கள் தற்போதைய சூழ்நிலையைப் பற்றி தேவன் உங்களிடம் பேச விரும்பலாம்.

கர்த்தர் உங்களிடம் கூறுகிறார், “இரண்டு பரிவாரம்”. நான் உங்களுக்கு தேவதூதர்களை நியமித்திருக்கிறேன். அவர்கள் உங்களைச் சுற்றிலும் உங்கள் சார்பாகவும் வேலை செய்கிறார்கள். தயவு செய்து இந்த வெளிப்பாட்டை உங்கள் உள்ளான மனதினில்  பிடித்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாள் எதிரியின் படைகள் எலிசாவையும் அவனுடைய வேலைக்காரனையும் சூழ்ந்தன. எலிசா தீர்க்கதரிசனமாக, "அவர்களுடன் இருப்பவர்களை விட நம்முடன் இருப்பவர்கள் அதிகம்" என்று கூறினார். (2 இராஜாக்கள் 6:16). அப்போதுதான் எலிசாவின் வேலைக்காரன் ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் தங்களைச் சுற்றி முகாமிட்டிருப்பதைக் கண்டான்.

விட்டுக்கொடுக்கும் தருவாயில் இருந்தால், அலை மாறப்போகிறது என்று சொல்வே வந்திருக்கிறேன்.

Bible Reading: lsaiah 28-30
வாக்குமூலம்
என்னோடே இருப்பவர்கள் அவர்களுடன் இருப்பவர்களை விட அதிகம். (இதை நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருங்கள்)



Join our WhatsApp Channel


Most Read
● விசுவாசம், நம்பிக்கை, அன்பு
● சுய வஞ்சித்தல் என்றால் என்ன? – II
● அவருடைய சித்தத்தை செய்வதன் முக்கியத்துவம்
● கர்த்தருக்குள் உங்களை எப்படி திடப்படுத்திக்கொள்வது ?
● நாள் 21:40 நாட்கள் உபவாசம் மற்றும் பிரார்த்தனை
● போற்றப்படாத கதாநாயகர்கள்
● சிறையில் துதி
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய