தினசரி மன்னா
0
0
185
உங்கள் போராட்டம் உங்கள் அடையாளமாகி விடாதீர்கள் -2
Monday, 22nd of September 2025
Categories :
Emotions
Our Identity in Christ
பல நேரங்களில், மக்கள் ஒரு பிரச்சனையை தங்கள் அடையாளமாக, தங்கள் வாழ்க்கையாக மாற்ற அனுமதிக்கிறார்கள். அவர்கள் நினைப்பது, சொல்வது மற்றும் செய்வது அனைத்தையும் இது வரையறுக்கிறது. அவர்களை சார்ந்த எல்லாரும் அதை மையமாகக் கொண்டுள்ளன.
நமது போராட்டத்தை நமது அடையாளத்துடன் தொடர்புப்படுத்துவது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
1. இது ஒரு நபரை மிகவும் மனச்சோர்வடையச் செய்யும்
2. ஒரு நபர் திரும்பி வரமுடியாத அளவிற்கு நம்பிக்கையை முற்றிலும் இழக்க நேரிடும்
உங்கள் நிலைமைக்கு பலியாகிவிடாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இன்று, கர்த்தர் உங்கள் போராட்டத்தில் உங்களுக்கு வெற்றியைத் தர விரும்புகிறார். உங்கள் அவமானத்தின் இடத்தில் உங்களுக்கு இரட்டிப்பு ஞானத்தை கொடுக்க விரும்புகிறார். நீங்கள் அவரை நம்பி அவருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். உங்கள் வெற்றி அணிவகுப்புக்கான சில படிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னை அனுமதிக்கவும்.
1. உங்கள் பிரச்சனையை, கவனத்தை அல்லது அனுதாபத்தை அல்லது பரிதாபத்தை பெறுவதற்கான வழிமுறையாக பயன்படுத்த முயற்சிக்காதீர்கள்.
2. உங்கள் பிரச்சனையை அனைவரிடமும் அல்லது யாரிடமும் பேசுவதை நிறுத்துங்கள். நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய சரியான நபர்களுடன் உங்களைச் சூழ்ந்திருக்க தேவனிடம் கேளுங்கள்
3. நீங்கள் என்ன உணர்கிறீர்கள் அல்லது சமூக ஊடகங்களில் செல்வதை வைத்து ஒப்பிடுவதை நிறுத்துங்கள்
4. உங்கள் சூழ்நிலையைப் பற்றி ஜெபிக்கும்படி ஜனங்களைக் கேளுங்கள், ஆம், நீங்களும் ஜெபிக்க வேண்டும். பூமியில் உள்ள அனைவருக்கும் தங்கள் ஜெபக் குறிப்புகளை அனுப்பும் சிலர் உள்ளனர், ஆனால் அவர்களே ஜெபிக்க மாட்டார்கள்.
5. ரோமர் 12:2ன் படி உங்கள் மனதை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
உங்களைச் சுற்றியுள்ள கலாச்சாரத்தின் இலட்சியங்கள் மற்றும் கருத்துக்களைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள், ஆனால் நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பதை முழுவதுமாக சீர்திருத்துவதன் மூலம் பரிசுத்த ஆவியால் உள்நோக்கி மாற்றப்படுங்கள். நீங்கள் ஒரு அழகான வாழ்க்கையை, திருப்திகரமாகவும், அவருடைய பார்வையில் பரிபூரணமாகவும் வாழும்போது, தேவனுடைய சித்தத்தைப் பகுத்துணர இது உங்களுக்கு அதிகாரம் அளிக்கும். (ரோமர் 12:2 TPT)
2 கொரிந்தியர்களில், பவுல் தனது போராட்டங்களில் ஒன்றைப் பற்றி பேசுகிறார். அவர் அதை தனது 'மாம்சத்தில் உள்ள முள்' என்று அழைக்கிறார்.
“அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.”
2 கொரிந்தியர் 12:7-10
பவுலின் 'மாம்சத்தில் உள்ள முள்' என்னவென்று யாருக்கும் தெரியாது. சிலர் உடல் நலக்குறைவு என்று நினைக்கிறார்கள். மற்றவர்கள் இது ஒரு தார்மீக பிரச்சினை என்று நினைக்கிறார்கள். வேதம் அது என்னவென்று சொல்லாததை நான் உண்மையில் விரும்புகிறேன், ஏனென்றால் இப்போது நாம் ஒவ்வொருவரும் அதனுடன் தொடர்பு கொள்ள முடியும். நமது போராட்டங்கள் வேறு, ஆனால் உண்மை என்னவென்றால் நாம் அனைவரும் ஏதோவொன்றில் போராடுகிறோம்.
ஆனால், தனது போராட்டத்தை தனது அடையாளமாக பவுல் அனுமதிக்கவில்லை. அவர் யார் என்பதை அவரது போராட்டம் வரையறுக்க விடவில்லை. தேவன் அழைத்த வேலையைச் செய்வதிலிருந்து தனது போராட்டம் அவரைத் தடுக்கவில்லை. நீங்களும் அனுமதிக்கக் கூடாது!
Bible Reading: Daniel 6-7
வாக்குமூலம்
தேவனின் வல்லமை என் மீது தங்கியுள்ளது. அவருடைய கிருபை எனக்கு போதுமானது. என் போராட்டங்கள், என் வலிகள் என்னை வரையறுக்காது - தேவன் செய்து முடிப்பார். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● தடுப்பு சுவர்● விசுவாசிகளின் ராஜரீக ஆசாரியத்துவம்
● சமாதானம் உங்களை எப்படி மாற்றும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்
● ஒரு மரித்த மனிதன் ஜீவனோடு இருப்பவர்களுக்காக ஜெபம் செய்கிறான்
● பரிந்து பேசுதல் பற்றிய தீர்க்கதரிசன பாடம்-1
● பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்
● கர்த்தரிடம் திரும்புவோம்
கருத்துகள்
