தினசரி மன்னா
0
0
8
வேலை ஸ்தலத்தில் ஒரு நட்சத்திரம் - 1
Wednesday, 13th of May 2026
Categories :
வேலை ஸ்தலம் (Workplace)
இன்றைய போட்டி நிறைந்த சூழலில், பலர் தங்கள் வேலை செய்கிறயிடத்தில் நட்சத்திரங்களாக மாற முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அங்கீகாரம், பதவி உயர்வு மற்றும் வெற்றியை நாடுகின்றனர். எவ்வாறாயினும், தேவனின் பார்வையில் உண்மையான நட்சத்திரமாக மாறுவதற்கான பாதை எப்போதும் வெற்றிக்கான உலகின் வரையறையைப் போலவே இருக்காது. நம்முடைய வேலையில் சிறந்து விளங்குவது மற்றும் கர்த்தருடைய தயவைப் பெறுவது பற்றி வேதம் என்ன கற்பிக்கிறது என்பதை ஆராய்வோம்.
பாத்திரத்தின் முக்கியத்துவம்
"கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்". (1 சாமுவேல் 16:7)
நமது வெளித்தோற்றம் அல்லது சாதனைகளை விட தேவன் நம் குணத்தின் மீது அதிக மதிப்பை வைக்கிறார். வேலை செய்கிறயிடத்தில் நட்சத்திரமாக மாற முற்படும்போது, தேவனுக்குப் பிரியமான இதயத்தை வளர்த்துக் கொள்வது அவசியம். இது ஒருமைப்பாடு, பணிவு மற்றும் வலுவான பணி நெறிமுறை ஆகியவற்றை வளர்ப்பதாகும்.
மனிதர்களை மகிழ்விப்பவராக இருப்பதன் விளைவு
"வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்." (கொலோசெயர் 3:22)
பூனை விலகிச் சென்றால், எலிகள் விளையாடுகின்றன' இது வேலை செய்கிறயிடத்தில் கூட உண்மை. மேலதிகாரி இல்லாத போது, பணியாளர்கள் வேலை செய்வதுபோல் தங்களை காண்பிப்பார்கள். இருப்பினும், இந்த அணுகுமுறை நேர்மையற்றது மற்றும் ஏமாற்றுவது போலாகும். மற்றவர்களைக் கவருவதற்காக மட்டும் அல்ல, நேர்மையான இதயத்தோடு வேலை செய்ய தேவன் நம்மை அழைக்கிறார். மனிதர்களை விட தேவனைப் பிரியப்படுத்த நாம் வேலை செய்யும்போது, உண்மையான குணத்தையும் நேர்மையையும் பிரதிபலிக்கிறோம்.
யாக்கோபின் உதாரணம்
"கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார்". (ஆதியாகமம் 31:3)
யாக்கோபின் வாழ்க்கை பார்ப்போமானால் கடினமான சூழ்நிலைகளில் கூட விடாமுயற்சியுடன் வேலை செய்வதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது. தனது முதலாளியான லாபனால் தவறாக நடத்தப்பட்ட போதிலும், யாக்கோபு தனது வேலையில் உண்மையாக இருந்தார். அவருடைய பதவி உயர்வு மற்றும் வெற்றி தேவனிடமிருந்து வரும், மனிதனால் அல்ல என்று அவர் நம்பினார். இதன் விளைவாக, தேவன் யாக்கோபை ஆசீர்வதித்து, தனது இனத்தாரிடத்திற்குத் திரும்பும்படி அழைத்தார், அங்கு யாக்கோபை ஒரு பெரிய சந்ததியாக மாற்றினார்.
தேவனுக்காக என்னுடைய வேலை
"நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்." (கொலோசெயர் 3:23-24)
வேலை செய்கிற இடத்தில் ஒரு நட்சத்திரமாக மாறுவதற்கான திறவுகோல் தேவனைப் போல வேலை செய்வதாகும். இது எவ்வளவு சிறியதாகவோ அல்லது முக்கியமற்றதாகவோ தோன்றினாலும், ஒவ்வொரு வேலையிலும் நமது சிறந்த முயற்சியை மேற்கொள்வதைக் குறிக்கிறது. நாம் சிறந்த மற்றும் விடாமுயற்சியுடன் பணிபுரியும் போது, நாம் தேவனை கனபடுத்துகிறோம் மற்றும் அவர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துகிறோம். மற்றவர்களிடமிருந்து அங்கீகாரம் அல்லது வெகுமதிகளைப் பெறுவது மட்டுமல்ல, தேவனைப் பிரியப்படுத்துவதே நமது உந்துதலாக இருக்க வேண்டும்.
பதவி உயர்வுக்காக தேவனை நம்புதல்
"கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்". (சங்கீதம் 75:6-7)
இறுதியில், நமது வெற்றியும் பதவி உயர்வும் தேவனிடமிருந்து வருகிறது. நாம் அவரை நம்பி, நம்முடைய வேலையில் அவரைப் பிரியப்படுத்த முற்படும்போது, அவர் கதவுகளைத் திறந்து நமக்கு தயவைத் தருவார். நமது பூமிக்குரிய எஜமான்கள் நம்முடைய முயற்சிகளை அங்கீகரிக்கத் தவறினாலும், தேவன் நம்முடைய உண்மையைக் கண்டு, ஏற்ற சமயத்தில் நமக்கு பரிசளிப்பார் என்ற நம்பிக்கையை நாம் கொண்டிருக்கலாம்.
எனவே, பணியிடத்தில் ஒரு நட்சத்திரமாக மாறுவது மனிதர்களின் கைதட்டலைத் தேடுவது அல்ல, மாறாக தேவனுக்காக விடாமுயற்சியுடன் வேலை செய்வதாகும். நாம் குணத்திற்கு முன்னுரிமை கொடுத்து, மனிதர்களை மகிழ்விப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற சோதனையை எதிர்த்து, நமது பதவி உயர்வுக்காக தேவனை நம்பினால், நமது வேலையில் உண்மையான வெற்றியையும் நிறைவையும் காணலாம்.
Bible Reading: 2 Kings 24-25
வாக்குமூலம்
எனக்கு உதவி வரும் கன்மலையை நோக்கி என் கண்களை உயர்த்துவேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, என் விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிப்பவருமான கர்த்தரிடமிருந்து எனக்கு உதவி வருகிறது. (சங்கீதம் 121:1-2) (எபிரெயர் 12:2)
Join our WhatsApp Channel
Most Read
● ஆவியானவர் ஊற்றப்படுதல்● ஆராதனையை ஒரு வாழ்க்கைமுறையாக மாற்றுதல்
● நாள் 39:40 நாட்கள் உபவாச ஜெபம்
● உங்கள் திருப்புமுனையை நிறுத்த முடியாது
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 1
● அவரது தெய்வீக சீர்ப்படுத்தும் இடம்
● மேற்கொள்ளூம் விசுவாசம்
கருத்துகள்
