தினசரி மன்னா
0
0
1420
உங்கள் இணைப்பை இழக்காதீர்கள்
Thursday, 27th of June 2024
Categories :
இணைக்கப்பட்டுள்ளது (Connected)
இன்றைய காலகட்டத்தில், நம்மிடம் அற்புதமான செல்போன்கள் உள்ளன. சில செல்போன்கள் விலை உயர்ந்தவை, சில மிகவும் புத்திசாலித்தனமான விலை மற்றும் மலிவானவை. இப்போது நீங்கள் மிகவும் விலையுயர்ந்த தொலைபேசியை வைத்திருக்கலாம், ஆனால் அது கோபுரத்துடன் இணைக்கப்படவில்லை என்றால், அது பயணற்றது. சில விளையாட்டுகளை விளையாடுவதைத் தவிர எந்த லாபகரமான வேலையையும் நீங்கள் செய்ய முடியாது. தொடர்ந்து இணைந்திருப்பது முக்கியமானது.
”என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.“
யோவான் 15:4
கொடியுடனான தொடர்பு மட்டுமே உயிர் கொடுக்கிறது
கொடியுடன் இணைந்திருப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் கணிகளை கொடுக்க முடியும்.
வாழ்க்கையில் சில விஷயங்கள் போலியாக இருக்க முடியாது. அவற்றில் ஒன்று நாம் இயேசுவோடு இணைந்திருப்பது. சிலர் முயற்சி செய்கிறார்கள், ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு அது தெளிவாகத் தெரிகிறது.
நான் ஒரு மரத்தில் ஒரு கிளையை டேப் செய்தால், கிளை வளர்ந்து இலைகளும் பழங்களும் கிடைக்குமா? இல்லை. அது மறித்து விட்டது. அது ஒரு மரத்தில் ஒட்டப்பட்டிருப்பதால் அது உண்மையில் மரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமல்ல. அந்த கிளை உயிர் பெற மரத்தின் உயிர் கொடுக்கும் சாறுடன் இணைக்கப்பட வேண்டும்.
”ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.“ யோவான் 15:6
நாம் இயேசுவோடு இணைந்திருப்பது போல் காண்பிப்பது எளிது. ஆனால் நாம் உண்மையில் கிறிஸ்துவுடன் அவருடைய வார்த்தையின் மூலமாகவும், ஜெபத்தின் மூலமாகவும், பரிசுத்த பந்தி மூலமாகவும் அவருடன் இணைக்கப்படவில்லை என்றால் - உண்மையில் திராட்சைக் கொடியுடன் இணைக்கப்படாத ஒரு கிளையைப் போல நமது விசுவாசம் வாடிப்போய்விடும்.
நமது ஆராதனைகளில் பலர் கலந்துகொள்கிறார்கள், அதற்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். இருப்பினும், ஆராதனை நடக்கும் போது, அங்கும் இங்கும் பார்ப்பவர்களை நான் அடிக்கடி பார்க்கிறேன். அவர்கள் எளிதில் திசைதிருப்பப்படுகிறார்கள், ஒருவருடன் ஒருவர் பேசிகொண்டிருப்பார்கள்.
தவறாமல் செல்வதென்பது என்பது மதக் கடமைகளை நிறைவேற்றுவது மட்டுமே. இது மாற்றத்தைக் கொண்டுவரும் உறவு. நாம் எப்படி ஒரு உறவை உருவாக்குவது? இது உறவுகளை உருவாக்கி பராமரிக்கும் ஒரு இணைப்பு.
எனவே, நீங்கள் ஒரு ஆராதனையில் கலந்து கொள்ளும்போது, தேவனின் ஆவியுடன் இணைந்திருங்கள். நீங்கள் ஜெபிக்கும்போது அல்லது உங்கள் வேதத்தை படிக்கும்போது, இணைக்கபடுங்கள். அனைத்து கவனச்சிதறல்களையும் அகற்ற முயற்சிசெய்யுங்கள். விரைவில் முடிவுகளைப் பார்ப்பீர்கள்.
ஜெபம்
கர்த்தராகிய இயேசுவே, நீர் உண்மையிலேயே உண்மையான திராட்சைக் கொடி. உம்முடன் எப்போதும் இணைந்திருக்க எனக்கு உதவும். என் வாழ்வு உமக்கு மகிமையையும் பெருமையையும் தரும் பலனைத் தரட்டும். ஆமென்.
Join our WhatsApp Channel
Most Read
● கடவுளை மகிமைப்படுத்தி உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்● ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும்
● துதி தேவன் வசிக்கும் இடம்
● மூன்று மண்டலங்கள்
● நாள் 38: 40 நாட்கள் உபவாச ஜெபம்
● நாள் 07: 40 நாட்கள் உபவாசமும் & ஜெபமும்
● நாள் 40:40 நாட்கள் உபவாச ஜெபம்
கருத்துகள்
