தினசரி மன்னா
0
0
530
உங்கள் வேலையைப் பற்றிய ஒரு ரகசியம்
Thursday, 8th of August 2024
Categories :
வேலை (Job)
“அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.”
1 இராஜாக்கள் 19:19
எலிசாவைப் பற்றி நாம் முதலில் பார்ப்பது அவர் ஒரு உழவர்; அவர் ஒரு கடின உழைப்பாளி. நீங்கள் வேதத்தை படித்தால், அவர்கள் தங்கள் வேலையில் இருக்கும்போதே தேவன் மக்களை தம் வேலைக்கு அழைத்ததை நீங்கள் காண்பீர்கள். உதாரணமாக, அப்போஸ்தலர்களான பேதுரு, யாக்கோபு, யோவான் மற்றும் அந்திரேயா ஆகியோர் மீனவர்களாக வேலை செய்யும் போது தேவனால் அழைக்கப்பட்டனர். தேவனுடைய மனுஷனாகிய மோசே, தன் மாமனாரான ஜெத்ரோவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது கர்த்தரால் அழைக்கப்பட்டார். எலிஷா தீர்க்கதரிசி கூட அவர் வேலையில் இருந்தபோது அவருடைய அழைப்பைப் பெற்றார்.
“பாஸ்டர், எனக்கு கிடைத்த வேலை ஒரு சிறிய வேலை” என்று எனக்கு எழுதுபவர்கள் பலர் உள்ளனர். எந்த வேலையும் சிறியதோ பெரியதோ இல்லை; நமது சிந்தனைதான் அதை உருவாக்குகிறது. தேவனுடைய பொருளாட்சியில், சிறிய வேலை எதுவும் இல்லை. “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;” பிரசங்கி 9:10 என்று வேதம் சொல்கிறது.
நான் ஏன் இதைச் சொல்கிறேன்? இதற்குக் காரணம் உங்கள் வேலை உங்களின் உண்மையான ஆதாரம் அல்ல. உங்கள் வேலை உங்கள் உண்மையான பாதுகாப்பு அல்ல. கிறிஸ்து இயேசுவின் மூலம் மகிமையில் தம்முடைய ஐசுவரியத்திற்கேற்ப நம்முடைய தேவைகளையெல்லாம் நிறைவேற்றுகிறவர் கர்த்தர். (பிலிப்பியர் 4:19) உங்கள் வேலை ஒரு கருவி மட்டுமே, அதேசமயம் தேவன் உங்கள் எல்லா தேவைகளையும் சந்திக்கிரவர் அவரே.
ஒரு கதவு மூடப்பட்டால், உங்கள் வாழ்க்கையில் மற்றொரு கதவை தேவனால் திறக்க முடியும். தேவன் வரையறுக்கப்படவில்லை. பயப்படாதேயுங்கள். தங்கள் வேலையே தங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்ற பிசாசின் பொய்யை பலர் நம்பியிருக்கிறார்கள். உண்மைக்கு அப்பால் எதுவும் இருக்க முடியாது.
பொருளாதாரங்கள் உயரலாம் மற்றும் வீழ்ச்சியடையலாம்; பங்குச் சந்தைகள் ஏறி இறங்கலாம்; முதலில், தேவன் உங்கள் ஆதாரம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இரண்டாவதாக, உங்களுக்கு தற்போது இருக்கும் அல்லது கிடைக்கக்கூடிய எந்த வேலையாக இருந்தாலும், அதை உங்கள் முழு பலத்துடன் செய்யுங்கள். தேவன் உங்கள் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் உங்கள் ஆசைகளையும் நிறைவேற்றுவார் என்று நான் தீர்க்கதரிசனம் கூறுகிறேன். “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல,” (அப்போஸ்தலர் 10:34). எலிசாவுக்கு நடந்தது போல் உங்களுக்கும் நடக்கும். அவருடைய அன்பும் கிருபையும் உங்கள் மீது இறங்கும்.
ஜெபம்
தந்தையே, எல்லா ஆசீர்வாதங்களுக்கும் எனது ஆதாரமாக இருப்பதற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். என் வாழ்க்கையில் ஒழுக்கம் பிறக்க என் உழைப்பைப் பயன்படுத்தும். இயேசுவின் நாமத்தில், என்னைச் சுற்றியுள்ள பலருக்கு என் உழைப்பை ஆசீர்வாதமாக மாற்றும்.
Join our WhatsApp Channel

Most Read
● சாந்தம் பலவீனத்திற்கு சமமானதல்ல● கனமும் மற்றும் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளுங்கள்
● நமது ஆவிக்குரிய வாளை காத்தல்
● இறுதி சுற்றில் வெற்றி பெறுவது
● தீர்க்கதரிசன பாடல்
● விதையின் வல்லமை - 3
● போற்றப்படாத கதாநாயகர்கள்
கருத்துகள்