english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. தேவன் எப்படி வழங்குகிறார் #2
தினசரி மன்னா

தேவன் எப்படி வழங்குகிறார் #2

Saturday, 14th of September 2024
0 0 410
Categories : ஏற்பாடு (Provision) நன்றி செலுத்துதல் (Thanksgiving)
நாம் அவரிடம் கேட்பதற்கு முன்பே கர்த்தர் நம் தேவைகளை அறிந்திருக்கிறார், மேலும் அவர் நம் தேவைகளை வழங்குவதாக வாக்கு அளித்துள்ளார். தேவன் தம்முடைய பிள்ளைகளின் தேவைகளை வெவ்வேறு வழிகளில் வழங்குகிறார்.

அவர் வழங்கும் சில வழிகள் இங்கே

1. மனிதர்கள் வழியாக

“பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.”
‭‭ஆதியாகமம்‬ ‭45‬:‭7‬ ‭

யோசேப்பின் காலத்தில் உலகம் முழுவதும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவரை விற்ற அவரது சொந்த சகோதரர்கள், பஞ்சத்தை சமாளிக்க தானியங்களைத் தேடி எகிப்துக்கு வந்தனர். இப்போது இப்படிப்பட்ட வெட்கக்கேடான செயலைச் செய்துவிட்டோமே என்று வருந்தியபடி சொந்த சகோதரன் முன் நின்று கொண்டிருந்தார்கள்.

இருப்பினும், அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாராமரித்துக்கொள்வதாக யோசேப்பு அவர்களுக்கு உறுதியளித்தார். தேவன் தம் மக்களை ஆசீர்வதிக்க (யோசேப்பின்) கைகளை பயன்படுத்தினார். தேவன் தம் பிள்ளைகளுக்கு வழங்கும் வழிகளில் இதுவும் ஒன்று.

“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.”
‭‭லூக்கா‬ ‭6‬:‭38‬ ‭

கவனியுங்கள், வேதம் சொல்லுகிறது, "உங்கள் மடியிலே போடுவார்கள்."

தேவன் உங்களை ஆசீர்வதிக்க உங்கள் முதலாளி, ஒரு சக, உறவினர் அல்லது யாரையும் பயன்படுத்தலாம். உங்களை ஆசீர்வதிக்க தேவன் மனிதனின் கையைப் பயன்படுத்தினாலும், தேவன்தான் அனைத்திற்கும் ஆதாரம் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2. தேவனின் சொந்தக் கைகளால் 

“யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.” (யாத்திராகமம் 1:8)

இஸ்ரவேலர்களுக்கு உணவளித்த கை இப்போது இல்லை - யோசேப்பு மறித்துப்போனார். இஸ்ரவேல் மக்களுக்குச் சாதகமான அரசியல் சூழல் கூட மாறியது. இப்போது அவர்கள் தங்கள் வழங்குநராக தேவனை மட்டுமே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர், மேலும் தேவன் அவர்களையும் கைவிடவில்லை.

“உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார். இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாகப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை.”
‭‭உபாகமம்‬ ‭8‬:‭2‬-‭4‬ ‭

அப்போஸ்தலனாகிய பவுல் தேவனை இயற்கைக்கு அப்பாற்பட்ட வழங்குநராக அங்கீகரித்து, பிலிப்பியர் 4:19 இல் எழுதினார், “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.”‭‭

ஒரு புனித வெள்ளி ஆராதனையின் போது, ​​"கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்கான விலையை மட்டும் செலுத்தவில்லை, அனைத்திற்கும் விலை கொடுத்தார்" என்று நான் பிரசங்கித்தேன். இந்த பிரசங்கத்தை கேட்டு அனைவரும் ஆர்ப்பரித்தனார். ஆனால் சிறந்தது இன்னும் வரவில்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு, ஒரு பெண் மேடையில் நின்று பின்வருமாறு சாட்சி அளித்தார்:

ஏதோ ஒரு நிறுவனத்தில் சுமார் 30 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக கடன் தொகையை உண்மையாக செலுத்தினேன். அதன் பிறகு, நான் என் வேலையை இழந்தேன், நிலைமை மோசமாகத் தொடங்கியது. அவர்கள் எனது வீட்டை மீட்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்து எனக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், "ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் செலுத்திவிட்டீர் என்று நான் நம்புகிறேன். என் பிள்ளைகளுக்கும் எனக்கும் உதவும்; நான் ஒரு விதவை" என்று தேவனிடம் அழுதேன். நான் வங்கிக்குச் சென்று அவர்களிடம் இன்னும் சிறிது நேரம் கேட்க முடிவு செய்தேன். நான் அங்கு சென்றபோது, ​​ஒரு நபர் கூறினார், "இதோ உங்கள் வீட்டு ஆவணங்கள், நிறுவனத்தில் சில சிக்கல்கள் இருந்தன, அவை மூடப்பட்டுவிட்டன. நீங்கள் போகலாம்" நான் கிட்டத்தட்ட மயக்கமடைந்தேன், ஆனால் "நன்றி இயேசு" என்று கத்தினேன்.

இதைக் கேட்டபோது, ​​தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து என் கண்களில் கண்ணீர் வந்தது.
வாக்குமூலம்
(அடுத்த ஏழு நாட்களுக்கு இந்த ஜெபகுறிப்புகளை தயவு செய்து ஜெபிக்கவும். நீங்கள் அற்புதமான முடிவுகளை காண்பீர்கள்)

1. ஆண்டவரே, இயேசுவின் நாமத்தில் உமது வழியை நான் பெறுகிறேன்.

2. ஆண்டவரே, இயேசுவின் நாமத்தில் என் தேவைகளிலிருந்து என் ஆசைகளுக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்.

3. ஆண்டவரே, இயேசுவின் நாமத்தில் என்னை சரியான திசையில் நடத்திச்செல்லும்.

4. பிதாவே, இயேசுவின் நாமத்தில் எனக்கு தெய்வீக வளங்களைத் தாரும்.

5. ஆண்டவரே, இயேசுவின் நாமத்தில் சரியான நபர்களுடன் என்னை இணையும்.

6. ஆண்டவரே, இயேசுவின் நாமத்தில் தெய்வீக வாய்ப்புகளின் கதவுகளைத் திறந்தருளும்.





Join our WhatsApp Channel


Most Read
● சாஸ்திரிகளிடமிருந்து கற்றுக்கொள்ளுதல்
● நாள் 17: 40 நாட்கள் உபவாச ஜெபம்
● ஒரு நோக்கத்திற்காக பிறப்பு
● சுய ஏமாற்றுதல் என்றால் என்ன? - I
● நீங்கள் செலுத்த வேண்டிய விலைக்கிரயம் 
● உண்மையுள்ள சாட்சி
● மனித இயல்பு
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய