english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. தேவனுடைய வார்த்தைகளை ஆழமாக உங்கள் இருதயத்தில் பதியுங்கள்
தினசரி மன்னா

தேவனுடைய வார்த்தைகளை ஆழமாக உங்கள் இருதயத்தில் பதியுங்கள்

Thursday, 26th of September 2024
0 0 371
Categories : தேவனின் வார்த்தை ( Word of God )
“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.” சங்கீதம்‬ ‭119‬:‭11‬-‭12‬ ‭

இன்றைய வசனம் தேவனுடைய வார்த்தையைப் பற்றிய முக்கியமான பாடத்தை கற்பிக்கிறது. வேதத்தில் நீங்கள் வாசிப்பது வார்த்தைகளை தாண்டி அதிகம் உள்ளது. இது வாழ்க்கையை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது. கர்த்தராகிய இயேசுவே, “நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.”

‭‭(யோவான் 6:63) என்று அறிவித்தார்.

இந்த ஜீவன் தரும் ஆற்றல் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையும் இது காட்டுகிறது. தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் விதைக்கும்போது அது செயல்படுத்தப்படுகிறது.

நீங்கள் தேவ வார்த்தையைப் படிக்கவோ அல்லது கேட்கவோ தொடங்கும் போது, ​​​​அதை உங்கள் காதுகள் மற்றும் கண்கள் மூலம் உங்கள் மனதில் கொண்டு வருகிறீர்கள், ஆனால் நீங்கள் அதை உங்கள் இருதயத்தில் பெறும்போது அதன் உண்மையான வல்லமை வெளியிடப்படுகிறது. அப்போதுதான் அது ஜீவன் பெறுகிறது.

உதாரணமாக: குணமாக்கும் வேத வசனங்கள் மற்றும் போதனைகளை நீங்கள் தொடர்ந்து கேட்டு, படித்து, தியானித்துக் கொண்டிருந்தால், இறுதியில் உங்கள் இருதயத்தில் ஒரு வலுவான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுவீர்கள், மேலும் இந்த நம்பிக்கை உங்கள் சரீரத்தை குணமாக்கும். உங்கள் இருதயம் அந்த வாக்குதத்தங்களை பற்றிக்கொள்ளும் போது, ​​​​அது உங்கள் இருதயத்திலிருந்து வெளியேறி உங்கள் வாழ்க்கையில் நிறைவேற தொடங்குகிறது.

நீங்கள் அசுத்தமான எண்ணங்கள் மற்றும் கனவுகளுடன் போராடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்; அப்படியானால், இந்தத் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ள வேதவசனங்களைப் படித்து தியானிக்க வேண்டும். இப்படிச் செய்தால் பாவம் நீங்கி உங்கள் அழைப்பு நிறைவேறும்.

தேவனுடைய வார்த்தை பெரும்பாலும் ஒரு விதை என்று குறிப்பிடப்படுகிறது. புதிய ஏற்பாட்டில், கிரேக்க வார்த்தையான "ஸ்பெர்மா" பெரும்பாலும் "விதை" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதே வார்த்தையில் இருந்து தான் நமது ஆங்கில வார்த்தையான "Sperm" விந்து அல்லது விதை ஆனது.

இயற்கையில் இருப்பதைப் போலவே, ஆவி மண்டலத்திலும், உங்களுக்குத் தேவையான அற்புதங்களைப் பெற்றெடுக்க, நீங்கள் முதலில் தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் ஒரு விதை போல விதைக்க வேண்டும்.

குறிப்பு: நமதுசெயலியில் பாஸ்டர் மைக்கேலின் போதனைகளை தவறாமல் கேட்பது தேவனுடைய வார்த்தையை தியானிக்க ஒரு சிறந்த வழியாகும்.
ஜெபம்
தகப்பனே, உமது வார்த்தைகள் என்னில் நிலைத்திருக்கும்படி, தினமும் உமது வார்த்தையை தியானிக்க எனக்கு கிருபை தாரும், அப்பொழுது நான் கேட்டு கொள்ளுவது எதுவோ, அது எனக்காகச் அருளப்படும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● கவலையை மேற்கொள்ள, இந்த காரியங்களை பற்றி சிந்தியுங்கள்
● மக்கள் சாக்குப்போக்கு கூறும் காரணங்கள் - பகுதி 1
● நாள் 01:40 நாட்கள் உபவாச ஜெபம்
● நிராகரிப்பை சமாளித்தல்
● நற்செய்தியைப் பரப்புங்கள்
● மறுரூபத்தின் விலை
● ஒரு நேர்முகசந்திப்பின் சாத்தியம்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய