english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. நீங்கள் ஒரு யுத்தத்தில் இருக்கும்போது: நுண்ணறிவு
தினசரி மன்னா

நீங்கள் ஒரு யுத்தத்தில் இருக்கும்போது: நுண்ணறிவு

Thursday, 16th of January 2025
0 0 246
Categories : கவனச்சிதறல் (Distraction)
தாவிது யுத்தக்களத்திற்கு வந்திருந்தார், அவருடைய சொந்த விருப்பத்தின் பேரில் அல்ல, ஆனால் அவரது தந்தை அவரை ஒரு வேலை செய்யச் சொன்னதால் வந்திருந்தார். யுத்தத்தின் முன் வரிசையில் இருந்த தனது சகோதரர்களுக்கு சில பொருட்களை எடுத்துச் செல்ல அவரது தந்தை கொடுத்து அனுப்பினார். (1 சாமுவேல் 17:17-18 வாசியுங்கள்)

பெலிஸ்தியனாகிய கோலியாத் எப்படி இஸ்ரவேலை கேலி செய்கிறான் என்பதை தாவீது நேரில் கண்டார். அவருக்குள் உள்ள அவரது ஆவி தூண்டப்பட்டது, மேலும் கோலியாத்துடன் சண்டையிடும் வெகுமதி என்ன என்று அவரைச் சுற்றியுள்ளவர்களிடம் கேட்டார். உடனே அந்த மனிதர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள்: “அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள்.”(1 சாமுவேல் 17:25)

“அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள். அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.”1 சாமுவேல்‬ ‭17‬:‭27‬-‭28‬ ‭

தாவீதின் மூத்த சகோதரனான எலியாப், தாவீது அந்த மனிதர்களிடம் பேசுவதைக் கேட்டபோது, ​​எல்லா மனிதர்களுக்கும் முன்பாக அவனைக் கடுமையாகக் கடிந்துகொண்டான். நடந்தவற்றால் தாவிது எளிதில் புண்பட்டு காயப்படுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் அதற்கு தாவிது இடம் கொடுக்கவில்லை.

இங்கே ஒரு முக்கியமான திறவுகோல் உள்ளது:
தாவிது கவனம் சிதற மறுத்தார்
நீங்கள் ஒரு யுத்தத்தில் இருக்கும்போது, ​​​​உண்மையான யுத்தத்தில் உங்களை எதிர்த்துப் போராடுவதற்கு எதிரி எப்போதும் உங்கள் மீது கவனச்சிதறல்களை வீசுவான்.

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார், “இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.”(1 கொரிந்தியர் 7:35)

கவனச்சிதறல் என்பது தேவனின் நோக்கங்களுக்கும் திட்டங்களுக்கும் முதல் எதிரி. ஜனங்கள் உங்களை புண்படுத்தும் போது, ​​உங்களை காயப்படுத்தினால், உண்மையில்லாத விஷயங்களைச் சொன்னால், நம்மை நாமே தற்காத்துக் கொள்வதற்காக சமூக ஊடகங்களில் அல்லது வேறு சில தளங்களில் அவர்களை எதிர்த்துப் போராட முனைகிறோம். நீங்கள் தேவனால் அழைக்கப்பட்ட உண்மையான விஷயத்திலிருந்து உங்களைத் தடுக்க இது ஒரு கவனச்சிதறல் அன்றி வேறில்லை.

கடந்த காலத்தில், தாவிது ஒரு சிங்கம் மற்றும் ஒரு கரடியைக் கொன்றார், மேலும் அவர் எலியாப்பை எளிதில் சமாளிக்க முடியும், ஆனால் அவர் தனது சொந்த சகோதரனுடன் சண்டையிடுவதைத் தவிர்த்தார். அவர் எலியாபுடன் சண்டையிட்டிருந்தால், கோலியாத்துடனான சந்திப்பை அவர் தவறவிட்டிருக்கலாம். தாவீது கோலியாத்துடனான தனது போரைத் தவறவிட்டிருந்தால், அவர் இஸ்ரேலில் ஒருபோதும் அறியப்பட்டிருக்க மாட்டார்.

Bible Reading : Genesis 45 - 46
ஜெபம்
தந்தையே, இயேசுவின் நாமத்தில், நீர் என்னை என்ன செய்ய அழைத்தீர் என்பதில் என் கண்களை ஒருமுகப்படுத்த எனக்கு உதவும். எனக்கு எதிரான கவனத்தை சிதறடிக்கும் ஒவ்வொரு வல்லமையையும் இயேசுவின் நாமத்தில் துண்டிக்கப்படும். ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● தேவனின் வார்த்தையை மாற்ற வேண்டாம்
● உங்கள் இலக்கை நாசமாக்காதீர்கள்!
● மத ஆவியை அடையாளம் காணுதல்
● ஒவ்வொரு நாளும் புத்திமானாய் வளர்வது எப்படி
● தீர்க்கதரிசன பாடல்
● பொருளாதார சிக்கலில் இருந்து வெளிவருவது எப்படி?
● பகுத்தறிவு v/s நியாயதீர்ப்பு
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய