english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. மனிதர்களின் பாரம்பரியம்
தினசரி மன்னா

மனிதர்களின் பாரம்பரியம்

Monday, 31st of March 2025
0 0 119
Categories : நம்பிக்கைகள்(Beliefs)
தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து, உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். மத்தேயு 15:6

நம் செயல்கயும் உறவுகளை வழிநடத்தும் கலாச்சாரங்கள் பாரம்பரியங்களும்  நம் அனைவருக்கும் உள்ளன. இந்த பாரம்பரியங்களுக்கு  சில சில இடங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் தனித்துவமானது. சிலர் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் ஒரு குறிப்பிட்ட முறையில் ஆடை அணிவார்கள்; சில
பாரம்பரியங்களில் சில உணவுகளை உங்கள் கையால் சாப்பிட வேண்டும் என்று கோருகின்றன, சிலர் சாப்பிட மரக் குச்சிகளைப் பயன்படுத்துகிறார்கள். சில மரபுகள் சில திருமண சடங்குகளுடன் நன்றாக இருக்கும், மற்ற இடங்களில் இது தடைசெய்யப்பட்டுள்ளது.
 
நம் அன்றாட வாழ்வில் மரபுகள் பின்னப்பட்டிருக்கும் அதே வேளையில், சிலசமயங்களில் அவை தேவனின் வார்த்தைகளுக்கு மேலாக நாம் உயர்த்தும்போது, தேவனின் ஆசீர்வாதங்களை அனுபவிப்பதில் இருந்து தடையாக நிற்கின்றன. மத்தேயு 15:3-6ல், தேவனின் கட்டளைகளை விட மனிதர்களின் பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை கொடுத்திருந்ததற்காக பரிசேயர்களை இயேசு கண்டித்தார். இந்த மரபுகள் பெரும்பாலும் ஒரு பாரம்பரியமாக இருப்பதற்குப் பதிலாக சத்தியமாக மாறுகின்றன, மேலும் அவை தேவனுடைய வார்த்தையை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. இவை தேவனின் சத்தியத்தை புரிந்துகொள்வதைத் தடுக்கின்றன மற்றும் அவருடைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதைத் தடுக்கின்றன. இவ்வுலகமே தேவனின் வார்த்தையால் கட்டமைக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடுகிறோம், எனவே தேவனின் வார்த்தையின் உண்மையைப் பற்றிக் கொள்ளாமல் இந்த மனித பாரம்பரியத்திற்கு அடிபணிந்து நம் வாழ்க்கையை நடத்துகிறோம்.

உபாகமம் 12:29-32ல் தேவன் இஸ்ரவேலர்களை எச்சரித்தார், 29. நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் சங்கரிக்கும்போதும், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்து அதிலே குடியிருக்கும்போதும், 30. அவர்கள் உனக்கு முன்பாக அழிக்கப்பட்டபின்பு, நீ அவர்களைப் பின்பற்றிச் சிக்கிக்கொள்ளாதபடிக்கும், இந்த ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்தபடி நானும் சேவிப்பேன் என்று சொல்லி அவர்களுடைய தேவர்களைக்குறித்துக் கேட்டு விசாரியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. 31. உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே. 32. நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

அவர்கள் தங்கள் தேசத்தை சுதந்தரித்து கொள்வதற்காக முன்னேறி செல்லும்போது நகரும் மக்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் பாரம்பரியம் பற்றி அவ்வளவு ஆர்வமாக இருக்க வேண்டாம் என்று அவர் அவர்களிடம் கூறினார். தேவன் கூறுகிறார், அவர்களின் பாரம்பரியத்தைப் பற்றி விசாரிக்க வேண்டாம்; மாறாக, என் கட்டளையை கடைபிடியுங்கள். உங்கள் வாழ்க்கை என் வார்த்தையால் ஆளப்படட்டும். கொலோசெயர் 2:8ல் அப்போஸ்தலனாகிய பவுலும் எச்சரித்தார், “லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.” அப்படியானால், தேவனின் வல்லமையை அணுகுவதற்குத் தடையாக இருக்கும் எந்த பாரம்பரியத்தை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள்?

பல கிறிஸ்தவர்கள் கர்த்தரை ஆழமாக நேசித்தாலும், 1 கொரிந்தியர் 12:7-10 இல் பட்டியலிடப்பட்டுள்ள பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்கள் இன்றும் செயல்படுகின்றன என்று சிலர் நம்பவில்லை. அவர்களில் சிலர், கடைசி அப்போஸ்தலன் யோவான் காலமான பிறகு, அற்புதங்களும் குணமளிக்கும் வல்லமைகளும் நின்று போனதாக நம்புகிறார்கள். இந்த விசுவாசிகள் வேதத்தை நம்புவதாகக் கூறுகிறார்கள், ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட இறையியல் பாரம்பரியங்களை  அவர்கள் கடைபிடிப்பது ஒரு ஆவிக்குரிய தடையை உருவாக்குகிறது, இது பரிசுத்த ஆவியின் வல்லமையை முழுமையாக அனுபவிப்பதைத் தடுக்கிறது, ஆகவே அவர்கள் "அவிசுவாசிகள்" என்று கருதப்படலாம்.

இந்தத் தடையானது, எபிரேய மக்கள் எதிர்கொண்ட அரணிப்பான பட்டணங்கள் போன்றது, இது அவர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்தை சென்றடைவதற்கு தடையாக இருந்தது. தடையைத் தாண்டிச் செல்வதற்குப் பதிலாக, செயலற்றதாக மாறுவது மற்றும் ஆவியின் வரங்களின் வல்லமையை "தேநீர் கோப்பை" அல்ல என்று நிராகரிப்பது எளிதாக இருக்கும். எனவே, இனி, ஒவ்வொரு பாரம்பரியத்தையும் கலாச்சார மதிப்பையும் தேவனின் வார்த்தையுடன் எடைபோடுங்கள். தேவனை பிரியப்படுத்தி, அவருடைய சித்தத்தைச் செய்யவே உங்கள் இருதயம் வாஞ்சிக்கட்டும். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, உங்கள் வாழ்க்கை இயற்கைக்கு அப்பாற்பட்ட வெளிப்பாட்டிற்கான ஒரு தளமாக இருக்கும்.

Bible Reading: Ruth 2-4
ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், உமது வார்த்தையிலிருந்து நான் பெற்ற வெளிச்சத்திற்கு நன்றி. உமது வார்த்தையின் கீழ் நிலைத்திருக்க எனக்கு உதவி செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன். உமது வார்த்தையின் சத்தியம் என் வாழ்க்கையை நடத்தட்டும். உமது கிருபை என் மீது பொழிய வேண்டும் என்று ஜெபிக்கிறேன். மனிதர்களின் பாரம்பரியத்திலிருந்தும் கலாச்சாரத்திருந்தும் நான் விடுதலை பெறுகிறேன்.  இயேசுவின் நாமத்தில். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● உங்கள் வேலையைப் பற்றிய ஒரு ரகசியம்
● உங்கள் விதியை மாற்றவும்
● கிறிஸ்துவின் மூலம் ஜெயங்கொள்ளுதல்
● நாள் 34 : 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● நிலவும் ஒழுக்கக்கேடுகளுக்கு மத்தியில் உறுதியுடன் இருப்பது
● நாள் 09: 40 நாட்கள் உபவாசம் & பிரார்த்தனை
● நீங்கள் ஒரு யுத்தத்தில் இருக்கும்போது: நுண்ணறிவு
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய