हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. தேவன் கொடுப்பார்
Daily Manna

தேவன் கொடுப்பார்

Thursday, 3rd of July 2025
1 0 54
Categories : ஏற்பாடு (Provision)
"ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான். அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது". - ஆதியாகமம் 22:14

நான் கர்த்தரிடம் திரும்பியபோது, ​​"யேகோவாயீரே, என் தேவைகளை சந்திப்பார்." என்ற பாடலைப் பாடியது நினைவுக்கு வந்தது, பல ஆண்டுகளாக, கர்த்தரின் பெயர் "யேகோவாயீரே'" என் வாழ்க்கையில் சிறப்புப் பொருளைக் கொண்டுள்ளது.

வேதத்தின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில், ஆபிரகாம் தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து மோரியா தேசத்தில் ஒரு மலையில் உண்டாக்கப்பட்ட பலிபீடத்தில் தனது ஒரே மகன் ஈசாக்கைப் பலியிட தயாராக இருந்தார்.

ஈசாக்கு தன் தந்தை ஆபிரகாமிடம் கேட்கிறான். "7. அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். 8. அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான். அப்புறம் இருவரும் கூடிப்போய், "
(ஆதியாகமம் 22:7,8)


ஆபிரகாம் தன் மகனைப் பலியிடப் போகையில், கர்த்தர் அவனைத் தடுத்து, ஒரு முட்புதரில் சிக்கிய ஒரு ஆட்டுக்கடாவைக் காட்டி,  ஈசாக்குக்குப் பதிலாக அதைப் பலியிடும்படி கூறினார். தேவன் ஈசாக்கிற்கு மாற்றாக பலியிட ஆடு தேவைப்படும் என்பதை அறிந்து, முன்கூட்டியே அந்த ஆட்டுக்கடாவை அருகில் வைத்திருந்தார்.


ஆபிரகாம் அந்த இடத்திற்கு "ஆண்டவர்  தேவைகளை சந்திப்பார்" என்று பெயரிட்டார். இது முன்கூட்டியே அல்லது தேவை அறியப்படுவதற்கு முன் பார்க்க வேண்டும். நாம் மிகவும் நிச்சயமற்ற உலகில் வாழ்கிறோம். எல்லாம் மாறி மாறி மணல் மீது கட்டப்பட்டது. இந்த உலகில் நமக்கு இருக்கும் ஒரே நிலையானது கர்த்தரும் அவருடைய வார்த்தையும் மட்டுமே. உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் தேவைப்படுவதற்கு முன்பே கர்த்தர் ஒரு பதில் அளிப்பதை நான் காண்கிறேன். தகப்பனும் தாயும் தங்கள் பிள்ளைகளுக்காக முன்கூட்டியே ஆயத்தம் செய்வது போல, கர்த்தர் உங்களுக்காக அற்புதமான ஒன்றை ஆயத்தப்படுத்துகிறார். இந்த வார்த்தையைப் பெற்று கொள்ளுங்கள்!

இந்த வார்த்தையை உங்கள் வாழ்க்கையிலும் குடும்பத்திலும் எவ்வாறு வெளிப்படுத்தலாம் என்பதை இப்போது நான் உங்களுக்கு சொல்கிறேன். ஏசாயா 58:11 க்கு என்னுடன் திருப்பிக் கொள்ளுங்கள், "கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார், நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்."

உங்கள் அன்றாட வாழ்வில் கர்த்தர் உங்களை வழிநடத்த அனுமதியுங்கள், அப்போது அவருடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்கள் உங்கள் வாழ்க்கையில் தினமும் காணப்படும். அவர் "யேகோவாயீரே" என்பதை நினைவில் வையுங்கள்!

Bible Reading: Psalms 70-76
Confession
கர்த்தர் என் மேய்ப்பர், என்னை நடத்துகிறவர். நான் ஒருபோதும் பற்றாக்குறையில் இருக்க மாட்டேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● காவலாளி
● உணர்ச்சிகள் என்ற ரோலர் கோஸ்டர்ல்
● பரலோகம் என்று அழைக்கப்படும் இடம்
● வதந்திகள் உறவுகளை அழிக்கின்றன
● மறக்கப்பட்டக் கட்டளை
● எஜமானனின் வாஞ்சை
● உங்கள்  உயர்வுக்கு   ஆயத்தமாகுங்கள்.
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login