हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. தேவதூதர்கள் சுற்றிலும் பாளையமிறங்கியிருக்றார்கள்.
Daily Manna

தேவதூதர்கள் சுற்றிலும் பாளையமிறங்கியிருக்றார்கள்.

Thursday, 31st of July 2025
0 0 86
Categories : தேவதூதர்கள் (Angles)
இந்த கடைசி காலத்தில், பலர் கடினமான காலங்களை கடந்து செல்கின்றனர். ஒரு கடினமான சூழ்நிலை அல்லது உங்கள் தொழில், வேலை அல்லது வியாபாரம் தொடர்பான சில நிச்சயமற்ற சூழ்நிலைகளைப் பற்றி நீங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கலாம். இன்றைய தின தியானம் உங்கள் சூழ்நிலையில் ஒரு திருப்புமுனையைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.

ஆதியாகமம் 32-ல் பார்க்கும்போது, யாக்கோபு ஒரு பயணத்தில் இருக்கிறார். அவரது குடும்பத்திற்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. தெரியாததை எதிர்கொள்ளும்போது, ​​அவர் பயப்படுகிறார்.

“யாக்கோபு பிரயாணம் பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள். யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான்.”
‭‭ஆதியாகமம்‬ ‭32‬:‭1‬-‭2‬

"மக்னாயீம்" என்ற வார்த்தையின் அர்த்தம் "இரண்டு பரிவாரம்". யாக்கோபு, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உடைமைகள் அங்கு முகாமிட்டுள்ளனர், மேலும் தேவதூதர்களின் கூட்டமும் அங்கு முகாமிட்டுள்ளது.

ஒருவேளை, யாக்கோபைப் போலவே, நீங்கள் ஏதோ ஒரு பிரயாணத்தில் இருக்கலாம். அல்லது, உங்கள் தற்போதைய சூழ்நிலையைப் பற்றி தேவன் உங்களிடம் பேச விரும்பலாம்.

கர்த்தர் உங்களிடம் கூறுகிறார், “இரண்டு பரிவாரம்”. நான் உங்களுக்கு தேவதூதர்களை நியமித்திருக்கிறேன். அவர்கள் உங்களைச் சுற்றிலும் உங்கள் சார்பாகவும் வேலை செய்கிறார்கள். தயவு செய்து இந்த வெளிப்பாட்டை உங்கள் உள்ளான மனதினில்  பிடித்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாள் எதிரியின் படைகள் எலிசாவையும் அவனுடைய வேலைக்காரனையும் சூழ்ந்தன. எலிசா தீர்க்கதரிசனமாக, "அவர்களுடன் இருப்பவர்களை விட நம்முடன் இருப்பவர்கள் அதிகம்" என்று கூறினார். (2 இராஜாக்கள் 6:16). அப்போதுதான் எலிசாவின் வேலைக்காரன் ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் தங்களைச் சுற்றி முகாமிட்டிருப்பதைக் கண்டான்.

விட்டுக்கொடுக்கும் தருவாயில் இருந்தால், அலை மாறப்போகிறது என்று சொல்வே வந்திருக்கிறேன்.

Bible Reading: lsaiah 28-30
Confession
என்னோடே இருப்பவர்கள் அவர்களுடன் இருப்பவர்களை விட அதிகம். (இதை நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருங்கள்)



Join our WhatsApp Channel


Most Read
● அவர் உங்கள் காயங்களை குணப்படுத்த முடியும்
● கர்த்தராகிய இயேசு: சமாதானத்தின் ஊற்று
● விசுவாசம்: கர்த்தரைப் பிரியப்படுத்த ஒரு உறுதியான பாதை
● பணம் குணத்தை பெருக்கும்
● சாந்தம் பலவீனத்திற்கு சமமானதல்ல
● மூன்று மண்டலங்கள்
● சில தலைவர்கள் வீழ்ந்ததால் நாம் வெளியேற வேண்டுமா?
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login