हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. உங்கள் வழிகாட்டி யார் - I
Daily Manna

உங்கள் வழிகாட்டி யார் - I

Tuesday, 3rd of January 2023
2 1 594
Categories : Mentor
கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே. கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.
ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். (1 கொரிந்தியர் 4:15-16)

சில பெரிய வேதாகம கதாபாத்திரங்களின் வெற்றியின் ரகசியங்களில் ஒன்று வழிகாட்டிகளைக் கொண்டிருப்பது. நீங்கள் பின்பற்றக்கூடிய மற்றும் கற்றுக்கொள்ளக்கூடிய வழிகாட்டி உங்களிடம் இருக்கிறார்களா? இல்லையென்றால், கொரிந்தியர்க்கு பவுல் செய்தது போல், உங்களுக்காக இதை நிரப்ப ஒரு நபரை ஜெபத்துடன் தேடுங்கள். நீங்கள் ஆவிக்குரிய விதத்தில் வளர வேண்டுமானால், நீங்கள் புறக்கணிக்க முடியாத ஒரு கொள்கையாக இருக்கிறது.

வேதாகமத்திலிருந்து சில உதாரணங்களைப் பார்ப்போம்.

உதாரணம் #1
யோசுவா எப்போதும் தேவனின் தாசனாகிய மோசேயைச் சுற்றியே இருந்தார்.
ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார். பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான். நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.
(யாத்திராகமம் 33:11)

கர்த்தர் மோசேயிடம் பேசும்போது யோசுவா உடனிருந்தார், ஆனால் அதைவிட முக்கியமாக, மோசே வெளியேறும் போதும் கூட யோசுவா கூடாரத்தை விட்டு நகர மாட்டார் என்பது மிக முக்கியமான குறிப்பு. மோசேயின் ஜெப வாழ்க்கையிலிருந்து தேவனோடு நெருக்கத்தைக் கற்றுக்கொண்டார். மோசே தேவனை சந்திக்க மலைக்குச் சென்றபோது, ​​யோசுவா அவரைப் பின்தொடர்ந்தார். (யாத்திராகமம் 24:13)

இந்த ஜோசுவா தீர்க்கதரிசியாகிய மோசேவினிடம் வாழ்க்கையை குறித்தும், தேவனுடனான உறவையும், மிகவும் கவனமாகப் பின்பற்றினார். பிறகு, ஒரு நாள், இந்த யோசுவா இஸ்ரவேலர்களுக்கே வாக்களிக்கப்பட்ட கானானுக்கு அழைத்துச் சென்றார்.

உதாரணம் #2
எலிசா ஒரு விவசாயி. எலியா முதன்முறையாக எலிசாவைச் சந்தித்தபோது, ​​பன்னிரண்டு நுகத்தடி மாடுகளை வைத்து உழுது கொண்டிருந்தார். (1 இரா 19:19)

அவரது தந்தை ஒரு பணக்காரர். ஒரு நாள் எலியா வந்து எலிசாவின் மேல் தன் மேலங்கியை வீசினான், அன்று முதல் எலிசா உண்மையாக எலியாவைப் பின்தொடர்ந்தான். அந்த நாட்களில் பல தீர்க்கதரிசிகள் இருந்தனர், ஆனால் எலிசா என்ற இந்த மனிதர் தனது வழிகாட்டியைப் பின்தொடர்ந்தார். இன்று வெகு சிலரே இதைச் செய்வதைப் பார்க்கிறேன்.

இன்று, பலர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிடும் தேவனுடைய ஊழியரிடம் நெருங்கி பழக விரும்புகிறார்கள். தேவனுடைய மனிதனிடமிருந்து கற்றுக் கொள்வதில் அவர்களுக்கு முற்றிலும் விருப்பமில்லை. தேவனின் மனிதன் சுமக்கும் அபிஷேகத்தைப் பற்றி அவர்கள் உண்மையில் கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்கள் ஜெப குறிப்புகளுக்கு பதிலளிக்க மட்டுமே அபிஷேகத்தை பயன்படுத்த விரும்புகிறார்கள்.

கர்த்தர் எலியாவைக் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது, எலியா எலிசாவோடுகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான்.

எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு, கர்த்தர் என்னைப் பெத்தேல் மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான், அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.

 அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன், எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு, கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான், அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.

எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு, கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன், நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான், அப்படியே இருவரும் போனார்கள்.
(2 இரா 2:1-6)

குறிப்பிடப்பட்ட நான்கு இடங்களில் ஒவ்வொன்றும் (கில்கால், பெத்தேல், எரிகோ மற்றும் யோர்தான்) இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, மேலும் அவை கிறிஸ்தவ வாழ்க்கைப் பயணத்தின் நிலைகளுக்கு மிகவும் அடையாளமாக இருப்பதாக நான் நம்புகிறேன். கில்கால் மாம்சத்துடன் இடைபடும் இடம். (யோசுவா 4:19-24).

பெத்தேல் நாம் உலகத்தை ஜெயிப்பதை பற்றி பேசுகிறது, ஏனென்றால் வேதத்தில் எகிப்து உலகத்தை குறிக்கிறது. எரிகோ ஆவிக்குரிய யுத்தத்தின் இடம், என்று பல கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய யுத்தத்தை விரும்புவதில்லை, எனவே அவர்கள் எளிதான வழியை எடுத்துக்கொள்கிறார்கள். தங்களுக்காக ஜெபிக்கும்படி தேவ ஊழியர்களிடம் கேட்கிறார்கள்.

எலியா ஒரு சவாலான மனிதராக இருந்தார், ஆனால் அப்போதும் கூட, எலிசா எலியாவுக்கு சேவை செய்தார். எலிsaw எலியாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தாலும், பட்டங்களைத் தேடவில்லை, ஆனால் ஒரு வேலைக்காரன் பாத்திரத்தை ஏற்று, எலியாவின் கைகளில் தண்ணீர் ஊற்றிய மனிதராகவே அறியப்பட்டார்.

நீங்கள் உண்மையாக பதிலளிக்க வேண்டிய சில கேள்விகள்:

1. யாரிடம் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்?

2. நீங்கள் யாரைப் பின்பற்றுகிறீர்கள்?

3. உங்கள் வழிகாட்டி யார்?

Prayer
பிதாவே, என் வாழ்க்கையில் வழிகாட்டியின் முக்கியத்துவத்தைப் பார்க்க என் கண்களைத் திறக்கவும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.


Join our WhatsApp Channel


Most Read
● வெறும் காட்சி அல்ல, ஆழத்தை தேடுகிறது
● ஒரே காரியம்: கிறிஸ்துவில் உண்மையான பொக்கிஷத்தை கண்டறிதல்
● இயேசுவைப் பார்க்க ஆசை
● உங்கள் கடந்த காலத்தை உங்கள் எதிர்காலத்திற்கு பெயரிட அனுமதிக்காதீர்கள்
● நிச்சயமற்ற காலங்களில் ஆராதனையின் வல்லமை
● நாள் 39:40 நாட்கள் உபவாச ஜெபம்
● மறைந்திருக்கும் காரியங்களை புரிந்துகொள்வது
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login