Daily Manna
0
0
512
ஆவிக்குரிய எற்றம்
Friday, 12th of July 2024
Categories :
சீஷர் (Discipleship)
விலை (Price)
இயேசுவைப் பின்பற்றும் எவரும் சீஷர்களாக இருப்பதே முன்னுரிமை என்பதை உறுதி செய்ய வேண்டும். இயேசுவைப் பின்பற்றுவதில் ஒரு செலவு இருக்கிறது என்று வேதம் நமக்குத் தெளிவாகக் கற்பிக்கிறது (மிகுந்த விலையுள்ள முத்து).
“உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்: இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ? அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ? கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாதிபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே. அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.”
லூக்கா 14:28-33
இப்போது விலை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று சிலர் பொய்யாகப் போதிக்கிறார்கள். ஆம்! இரட்சிப்பு இலவசம், நம் இரட்சிப்பைப் பெற நாம் எதுவும் செய்ய முடியாது. இருப்பினும், அப்போஸ்தலநாகிய பவுல் தெளிவாகக் கூறினார், "உங்கள் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள்" (பிலிப்பியர் 2:12)
“சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.”
பிலிப்பியர் 3:13-14
சிறுவனாக இருந்தபோது, நான் சில சமயங்களில் தொலைக்காட்சியில் ஒரு அறிவியல் புனைகதை தொடர் பார்ப்பது வழக்கம். அது 'ஸ்டார் ட்ரெக்' என்று அழைக்கப்பட்டது, இந்த மக்கள் எப்படி இவ்வளவு தூரம் மற்றும் ஆழமாக விண்வெளியில் பயணம் செய்தார்கள் என்று நான் அடிக்கடி ஆச்சரியப்படுவேன். சமீபத்தில், நான் அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன், எனக்குள் நினைத்தேன்; நாம் ஆவிக்குரிய மண்டலத்திற்கு வெகுதூரம் பயணிக்க வேண்டும், அதை ஆராய்வோம்; ஏனென்றால் பார்க்க, கேட்க, அனுபவிக்க நிறைய இருக்கிறது.
ஆவியின் சாம்ராஜ்யத்தில் இதுபோன்ற அற்புதமான வெளிப்பாடுகள் உள்ளன, ஆனால் அவற்றை அணுகுவதற்கு நாம் விலை கொடுக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் போதுமான ஞானமுள்ளவராக இருந்தார், மேலும் தேவவனுடனான தனது ஆரம்ப சந்திப்பிற்குப் பிறகு அரேபியாவின் பாலைவனங்களில் உள்ள ஆவியின் ஆழமான பகுதிகளை அணுகுவதற்கு நேரத்தை செலவிட்டார். (கலாத்தியர் 1:7)
மேலும் தீர்க்கதரிசன வார்த்தைகள், அதிக ஆவிக்குரிய பாடல்கள், அதிக அபிஷேகம் மற்றும் ஆவியின் ஈவுகள் மற்றும் இன்னும் துல்லியமான திட்டங்கள் மற்றும் உத்திகள் கிருபையின் சிம்மாசனத்தில் பெற காத்திருக்கின்றன.
லூக்கா 1:37 கூறுகிறது, “தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை.”
கவனிக்கவும், "தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை" என்று அது கூறவில்லை, "தேவனால் எல்லாம் கூடும்" என்று அது கூறுகிறது. ஆகவே, தேவனோடு நடப்பவர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதே இதன் பொருள். (லூக்கா 1:37) நமக்குத் தேவை ஆவிக்குரிய உலகில் ஒரு ஏற்றம். நாம் தைரியமாக பரிசுத்த ஆவியின் மண்டலங்களுக்குள் நுழைந்து, தேவனின் மகிமையின் ஆழமான பகுதிகளை வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் அழைப்பைக் கவனிப்பீர்களா?
Prayer
தகப்பனே, நானும் என் வீட்டாரும் விளைக்கிறயத்தை அறிவோம். உனது ஆவியின் ஆழமான பகுதிகளுக்குள் நுழைய எங்களுக்கு உதவும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● பழி மாறுதல்● முரட்டு மனப்பான்மையை வெல்லும் வகைகள்
● ஒரு வித்தியாசமான இயேசு, வித்தியாசமான ஆவி மற்றும் மற்றொரு நற்செய்தி - II
● உங்கள் பலவீனத்தை தேவனிடம் கொடுங்கள்
● புதிய உடன்படிக்கை நடமாடும் ஆலயம்
● அற்புதத்தில் இயங்குவது: திறவுகோல் # 2
● இயேசு ஏன் பாலகனாக வந்தார்?
Comments