हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. கீழ்ப்படிதல் ஒரு தெய்வீக அறம்
Daily Manna

கீழ்ப்படிதல் ஒரு தெய்வீக அறம்

Tuesday, 18th of March 2025
0 0 175
Categories : Deliverance
“அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக் கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.” 1 சாமுவேல் 15:22

தேவனின் கட்டளைக்கும் ஆலோசனைக்கும் கீழ்ப்படிவதே அவருடைய ஆசீர்வாதங்களை நம் வாழ்வில் பெறுவதற்கான நுழைவாயில். இது அப்படியானால், கீழ்ப்படியாமை நிச்சயமாக அவரது சாபங்களை ஈர்க்கும். அநேக குடும்பங்கள் இன்று இத்தகைய சாபங்களுக்கு ஆளாகியுள்ளன, ஏனெனில் அவர்களின் முற்பிதாக்களில் ஒருவர் மீண்டும் மீண்டும் கீழ்ப்படியாமையால்.

வேதம் யோசுவா 6:18-19ல் ஒரு பதிவை பதிவு செய்கிறது, “சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே, நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்கு மாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள். சகல வெள்ளியும், பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்டபாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.”

சாபத்தீடான பொருட்களை உங்கள் வசிப்பிடத்திற்கு கொண்டு வருவது உங்கள் ஆவிக்குரிய வெற்றியை மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வெற்றியையும் பாதிக்கிறது, மேலும் இறுதியில் உங்கள் உயிரையும் இழக்க நேரிடும் என்று ஆதி இஸ்ரேலில் ஒரு மனிதனின் கதையை வேதம் விவரிக்கிறது!

யோசுவாவும் இஸ்ரவேலர்களும் கைப்பற்றிய முப்பத்தொரு கானானிய நகரங்களில் முதலாவது எரிகோ நகரம். எனவே, எரிகோ ஒரு முதல் கனி நகரமாக இருந்தது. இந்த வெற்றியிலிருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து கொள்ளைகளும் முதல் கனி காணிக்கையாக கர்த்தருடைய கூடாரத்தின் கருவூலத்திற்குச் செல்ல வேண்டும்.

முதல் பலன்கள் கர்த்தருடையது, அவை தக்கவைப்போமானால், கீழ்ப்படியாமை ஒரு சாபத்தைக் கொண்டுவருகிறது, அது இஸ்ரவேலின் முழு பாளையத்தின் மீதும் ஒரு சாபத்தைக் கொண்டுvவந்தது.

எரிகோவைக் கைப்பற்றியபோது, ​​யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஆகான், சில தங்கக் கட்டிகளையும் அழகான பாபிலோனிய ஆடையையும் ரகசியமாகப் பிடித்துத் தன் கூடாரத்தில் மறைத்து வைத்தான். இது ஒரு அப்பாவி செயல் போல் தெரிகிறது, இல்லையா? ஒருவேளை அவருக்கு பொருளாதார ஆசீர்வாதம் தேவைப்பட்டிருக்கலாம், மேலும் அவரது குடும்பத்திற்கு தேவையான செழிப்பைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பைக் கண்டார். எல்லாவற்றிற்கும் மேலாக, யுத்தத்தில் கொள்ளையடித்ததை யுத்த வீரர்கள் அனுபவிக்க வேண்டாமா?

தேவன் யோசுவாவை எழுந்து செவிக்கொடுக்கும்படி கட்டளையிட்டார் (யோசுவா 7:10). இஸ்ரவேலின் தோல்விக்கான மறைக்கப்பட்ட காரணத்தை தேவன் பின்னர் வெளிப்படுத்தினார்; யாரோ ஒருவர் தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை மட்டுமல்லாமல் சாபத்தீடான பொருட்களை தங்கள் உடைமைகளுக்கு மத்தியில் மறைத்து வைத்திருந்தார். ஆகானின் பாவம் வெளிப்பட்டு, சாபத்தீடான பொருட்கள் (அவனுடைய கூடாரத்தில் புதைக்கப்பட்ட) வீட்டிலிருந்து அகற்றப்பட்டபோதுதான், இஸ்ரவேல் தன் எஞ்சியிருந்த சத்துருக்களை வென்றது. (யோசுவா 7:24-26; 8:1-2பார்க்கவும்).

பெற்றோராகிய நாம் நம்மை நாமே ஆராய்ந்து அறிந்து கொண்டு, நம் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாம் காரணம் அல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. நம் வீட்டில் சாபத்தின் காரணம் நாங்கள் அல்ல என்பதை சிந்தித்து உறுதியாக இருக்க வேண்டிய நேரம் இது. சாபத்தீடானதை அகற்றுங்கள் என்று தேவன் கூறுகிறார்.

நாம் தேவனின் கட்டளையை மீறும்போது, ​​​​நம்மீது தண்டனையை மட்டும் அனுபவிக்காமல், நம் குடும்பங்கள் மீது கடவுளின் கோபாக்கினையை உறுதிசெய்கிறோம். ஆகான் தேவனுக்கு சொந்தமான சாபத்தீடான பொருளை எடுத்துக் கொண்டான்,  அவனுடைய முழு குடும்பமும் அதற்கு விலைக்கிரயம் செலுத்தியது. எனவே, இது கீழ்ப்படிதலுடன் தேவனிடம் திரும்புவதற்கான அழைப்பு. ஒருவேளை நீங்கள் கடந்த காலத்தில் தேவனுக்கு கீழ்ப்படியாமல் இருக்கலாம்; அவருக்கு ஆம் என்று சொல்ல வேண்டிய நேரம் இது.

மேலும், இஸ்ரவேலர் தங்கள் தோல்விக்கான காரணத்தை கருதினர், மேலும் அவர்கள் தலைவரான யோசுவாவிடம் தேவன் பேசும் வரை அவர்கள் யுத்தத்தில் தோல்வியை  தழுவினார். அவர்களின் தோல்விக்கான காரணத்தில் தேவன் அவரை வழிநடத்த வேண்டியிருந்தது. பின்னர் அது ஆகான் என்பதை கண்டுபிடித்தனர். சரியான நேரத்தில் காரணத்தை கண்டுபிடித்திருந்தால் எத்தனை சேவகர்கள் உயிருடன் இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.

தேவனிடம் இசைய வேண்டிய நேரம் இது. உங்கள் வீட்டில் உள்ள சவால்களுக்கான காரணம் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்க வேண்டாம்; அவரை கேளுங்கள். அவர் உங்களை வழிநடத்தி, உங்கள் குடும்பம் எங்கு தொலைந்தது என்பதைக் அவர் காண்பிக்கட்டும் . நீங்கள் கீழ்ப்படியாத அறிவுறுத்தலை அவர் உங்களுக்குக் காண்பிக்கட்டும். நீங்கள் சிறிது நேரம் அனுமானித்துள்ளீர்கள், எதுவும் மாறவில்லை; தேவனுக்கு முன்பாக உங்களை நிறுத்தி இரக்கத்தை கேட்க வேண்டிய நேரம் இது. சாபங்களிலிருந்தும், போராட்டங்களிலிருந்தும் உங்கள் வழிகளையும் பாதைகளையும் அவர் வழிநடத்தட்டும்.

Bible Reading: Joshua 13-16
Prayer
பிதாவே, இயேசுவின் நாமத்தில், எப்பொழுதும் எங்களுக்கு வழி காட்டியதற்கு நன்றி. நாங்கள் அதை எங்கே தொலைந்தோம் என்பதைப் பார்க்க எங்கள் கண்களைத் திறக்கும்படி நான் ஜெபிக்கிறேன். உமது கிருபை எங்கள் மீது பொழிய வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.  நீர் எங்களை வழிநடத்தி, சரியான பாதையில் அழைத்துச் செல்ல ஜெபிக்கிறேன்.  என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கீழ்ப்படிதLin ஆவிக்காக நான் மன்றாடுகிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● கசப்பின் வாதை
● அன்பு - வெற்றியின் உத்தி - 1
● தெய்வீக ஒழுக்கத்தின் தன்மை-1
● கதவை  அடையுங்கள்
● வீழ்ச்சியிலிருந்து மீட்புக்கு ஒரு பயணம்
● தேவன் பலன் அளிப்பவர்
● பேசும் வார்த்தையின் வல்லமை
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login