हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. தேவனின் ஏழு ஆவிகள்: புரிந்துகொள்ளும் ஆவி
Daily Manna

தேவனின் ஏழு ஆவிகள்: புரிந்துகொள்ளும் ஆவி

Wednesday, 20th of August 2025
0 0 203
Categories : கடவுளின் ஆவி (Spirit of God)
"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும், "
(எபேசியர் 1: 17,18)

எபேசிய கிறிஸ்தவர்களுக்காக பவுலின் ஜெபத்தின் உள்ளடக்கத்தைக் கவனியுங்கள்: “உங்கள் ஞானத்தின் கண்கள் பிரகாசிக்கின்றன.” இது புரிந்துகொள்ளும் ஆவியின் செயல்பாடாகும்.

அவர் உங்களை எந்த நம்பிக்கைக்கு அழைத்தார் என்பதையும், பரிசுத்தவான்களில் (அவருடைய நம்பிக்கைக்கு அப்பாற்ப்பட்டவர்களில்) அவருடைய மகிமை எவ்வளவு ஐசுவரியமானது என்பதையும் அறியவும் புரிந்துகொள்ளவும் உங்களுக்கு உதவுபவர் அவர்.

"சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து,
அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்".
(எபேசியர் 3:18,19)

கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு அகலமானது, எவ்வளவு நீளமானது, எவ்வளவு உயர்ந்தது, எவ்வளவு ஆழமானது என்பதை எபேசிய கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய  பவுலின் இந்த ஜெபம், கிறிஸ்துவின் அன்பின் ஆழத்தையும் வல்லமையையும் அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை அல்லது அறியவில்லை. அவர்கள் நோக்கமும் அறிவும் புரிதலும் கொண்டிருந்தனர் ஆனால் அவர்களின் வாழ்வில் செயல்படும் புரிதலின் ஆவி மற்றும் அறிவின் ஆவி பற்றிய நடைமுறை அவர்களுக்கு இல்லை.

இன்று நான் இந்த புரிதலின் ஆவிக்குறித்து விளக்கவுதற்கு அனுமதியளியுங்கள்: ஆவியின் வரங்கள் அவர்கள் மூலம் செயல்படலாம் ஆனால் வார்த்தையின் புரிதல் இல்லாதவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் மற்ற பரிசுத்தவான்களுடன் சேர்ந்து அவர்கள் மீதும் அவர்களுக்குள்ளும் கிறிஸ்துவின் அன்பின் வல்லமையை புரிந்துகொள்வதற்கு அவர்கள் புரிந்துகொள்ளும் ஆவியால் நிரப்பப்பட வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும்.

ஆவியின் அபிஷேகம் வெவ்வேறு நேரங்களிலும் வெவ்வேறு வழிகளிலும் நம்மீது வருகிறது, ஆனால் நாம் ஆவியின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

"அவர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்,"
(யோவான் 20:22) "சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்."
(யோபு 32:8)

நீங்கள் வேதத்தில் பார்க்கும்போது, கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்கள் மீது ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெறுங்கள்" என்று அவர்களிடம் சொன்னபோது, ​​அவர் உண்மையில் அவர்களுக்கு புரிந்துகொள்ளும் ஆவியைக் கொடுத்தார், மேலும் அவர்களின் மனம் வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்ள அபிஷேகம் செய்யப்பட்டது.

"கேளுங்கள்,விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
அவன் விதைக்கையில்,சில விதை வழியருகே விழுந்தது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது".
(மாற்கு 4: 3,4) பின்னர், இயேசு தம் சீஷர்களுக்கு இந்த உவமையை விளக்கும் போது, ​​வழியில் விழுந்த விதைகள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதைப் புரிந்துகொள்ளாதவர்களைக் குறிக்கிறது என்றும், அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாததால், பிசாசு உடனடியாக வந்தான் என்றும் அவர்களுக்கு வெளிப்படுத்தினார். மற்றும் அவர்களின் இதயங்களில் இருந்து வார்த்தை பறித்துக்கொள்ளப்பட்டது.

"ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான், அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்".
(மத்தேயு 13:18,19)

எனவே புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது நீங்கள் காண்கிறீர்கள். நீங்கள் ராஜ்யத்தின் வார்த்தையைக் கேட்டு, அதைப் புரிந்துகொள்ளத் தவறினால், அதை உங்கள் இதயத்திலிருந்து பறித்துக்கொள்ள பிசாசுக்கு இடமளிக்கிறீர்கள். இதனால்தான் உங்கள் வாழ்க்கையில் புரிந்துகொள்ளும் ஆவியை உங்களுக்கு கொடுப்பவர்  அவர் தான்.

Bible Reading: Jeremiah 28-29
Prayer
பரிசுத்த ஆவியானவர் என்னை புதிதாக நிரப்பவும், ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரே, வேதத்தைப் புரிந்துகொள்ள என் மனதை தெளிவாக்கும். தேவனின் பரிசுத்த ஆவியானவரே, என் வாழ்க்கையின் சூழ்நிலைகளுக்கு வேதவசனங்களைப் பயன்படுத்த எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில் ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● உங்கள் ஆசீர்வாதத்தைப் பெருக்குவதற்கான வழி
● கர்த்தரிடம் திரும்புவோம்
● உங்கள் திருப்புமுனையை நிறுத்த முடியாது
● தேவன் தாய்மார்களை சிறப்புறப் படைத்தார்
● அன்பின் மொழி
● சுய ஏமாற்றுதல் என்றால் என்ன? - I
● சமாதானத்திற்கான தரிசனம்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login