हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. வாழ்க்கையின் புயல்களுக்கு மத்தியில் விசுவாசத்தை கண்டறிதல்
Daily Manna

வாழ்க்கையின் புயல்களுக்கு மத்தியில் விசுவாசத்தை கண்டறிதல்

Thursday, 1st of May 2025
0 0 129
Categories : சோதனைகள்(Trials) விசுவாசம் ( Faith)
வாழ்க்கையின் புயல்களுக்கு மத்தியில், நம் விசுவாசம் சோதிக்கப்படுவது இயற்கையானது. சவால்கள் எழும்போது, சீஷர்களைப் போலவே நாமும் அடிக்கடி கேள்வி எழுப்புகிறோம்: “போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா?” (மாற்கு 4:38). இந்த தருணங்களில் தான் நமது விசுவாசம் சோதிக்கப்படுகின்றது. இந்தப் போராட்டத்தில் நாம் மட்டும் தனியாக இல்லை; இயேசுவின் வல்லமையை நேரில் பார்த்தவர்கள் கூட அவருடைய கவனிப்பை சந்தேகிக்கிறார்கள்.

1. உங்கள் போராட்டத்தில் நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வேதாகமம் முழுவதிலும், கடினமான காலங்களில் தேவன் தங்களுக்குக் காட்டும் அக்கறையைக் கேள்விக்குட்படுத்தும் ஏராளமான நிகழ்வுகள் உள்ளன. புயலில் சிக்கிய சீஷர்களின் சம்பவத்தில், அவர்கள் இயேசுவின் கரிசனையை சந்தேகித்தனர், " போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா?" (மாற்கு 4:38). அதுபோலவே, மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். (லூக்கா 10:40). மிகவும் விசுவாசமுள்ளவர்களும் சோதனையின் போது சந்தேகத்துடன் போராட கூடும் என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் நமக்கு நினைவூட்டுகின்றன.

தேவன் நம்மீது வைத்திருக்கும் கரிசனையை கேள்விக்குள்ளாக்கும் நிலையை அடைவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த சமயங்களில் நாம் நமது ஆவிக்குய நடைமுறைகளில் இருந்து விலகலாம். நம்முடைய ஜெபங்கள் இடைவிடாமல் குறைந்து கொண்டே போகிறது, மேலும் நாம் வேதத்தை  படிப்பதையோ அல்லது ஆராதனைகளில் கலந்து கொள்வதையோ அல்லது கர்த்தருக்குச் சேவை செய்வதையோ கூட நிறுத்தலாம். நாம் தேவனின் அன்பைக் கேள்விக்குள்ளாக்குவதைக் காணலாம் மற்றும் "ஆண்டவரே, நீங்கள் என்மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், இது ஏன் முதலில் நடக்க வேண்டும்?"


2. தேவனுடைய வாக்குத்தத்தங்களைச் சார்ந்திருங்கள்
நம்முடைய விசுவாசம் அலைக்கழிக்கப்படும்போது, வேதத்தில் காணப்படும் தேவனின் வாக்குத்தத்தங்களுக்கு திரும்புவது முக்கியம். வேதாகமம் முழுவதும், தேவன் நம்மீது எவ்வளவு அக்கறையும் கரிசனையும் கொண்டுள்ளார் என்ற  வசனங்களால் நிரம்பியுள்ளது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அப்படிப்பட்ட ஒரு வசனம் ஏசாயா 41:10, " நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். "தேவனுடைய வார்த்தையில் நம்மை மூழ்கடிப்பதின் மூலம், நிச்சயமற்ற காலங்களில் நாம் பலத்தையும் உறுதியையும் காணலாம்.

3. தேவனுடைய உண்மைத்தன்மையைப் பற்றி சிந்தியுங்கள்
சந்தேகத்திற்கிடமான தருணங்களில், தேவன் தம் உண்மைத்தன்மையை நிரூபித்திருக்கும் எண்ணற்ற முறைகளைப் பற்றி சிந்திப்பது உதவியாக இருக்கும். வேதம் முழுவதிலும், தேவன் தம்முடைய மக்களுக்கான உறுதிப்பாட்டின் உதாரணங்களைக் காண்கிறோம். இஸ்ரவேலர்களின் சரித்திரத்தில், தேவன் அவர்களை வனாந்தரத்தின் வழியாக வழிநடத்தினார் மற்றும் அவர்களின் தேவைகளை சந்தித்தார் (யாத்திராகமம் 16). புதிய ஏற்பாட்டில், கர்த்தராகிய இயேசு நோயுற்றவர்களைக் குணப்படுத்தினார், மரித்தர்வர்களை உயிரோடு எழுப்பினார், நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கை அளித்தார் (மத்தேயு 9). இந்தக் கதைகளை நினைவில் கொள்வது, தேவன் நம்மைக் கவனித்துக்கொள்வதில் உள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்.

4. ஜெபியுங்கள் மற்றும் சக விசுவாசிகளிடமிருந்து ஆதரவைப் பெறுங்கள்
நம்முடைய விசுவாசம் அசைக்கப்படும்போது தேவனுடன் மீண்டும் இணைவதற்கு ஜெபம் ஒரு வல்லமை வாய்ந்த வழியாகும். பிலிப்பியர் 4:6-7ல், தேவைகளின் நேரங்களில் ஜெபத்தில் தேவனிடம்  திரும்பும்படி பவுல் நம்மை ஊக்குவிக்கிறார், 6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். 7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். சக விசுவாசிகளிடமிருந்து ஆதரவைத் தேடுவது நம் விசுவாசத்தைப் பலப்படுத்தவும், நம் வாழ்வில் தேவனின் இருப்பை நினைவூட்டவும் உதவும். நீங்கள் கருணா சதன் தேவாலயத்துடன் இணைந்திருந்தால், ஜே-12 தலைவரின் கீழ் வருவதே இதைச் செய்வதற்கான வழிகளில் ஒன்றாகும்.

Bible Reading: 1 Kings 19-20
Prayer
பிதாவே, இக்கட்டின்போதும் சந்தேகத்தின் போதும், என் விசுவாசம் சூழ்நிலைகளின் அடிப்படையில் அல்ல, மாறாக உமது அசைக்க முடியாத அன்பிலும் அக்கறையிலும் உள்ளது என்பதை நினைவில் கொள்ள எனக்கு உதவும். உமது வார்த்தையின் ஞானத்தில் வளர எனக்கு உதவுவும். இயேசுவின் நாமத்தில் ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● நாள் 12: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● வித்தியாசம் தெளிவாக உள்ளது
● அன்பின் உண்மையான பண்பு
● எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள்
● இயேசு இப்போது பரலோகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
● உபத்திரவம் - ஒரு பார்வை
● கிருபையில் வளருத்தல்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login