हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. இடறல்களில் மறைக்கப்பட்டுள்ள கன்னி
Daily Manna

இடறல்களில் மறைக்கப்பட்டுள்ள கன்னி

Monday, 5th of January 2026
1 0 196
Categories : Offence (இடறல்)
சத்துரு கிறிஸ்தவர்களுக்கு எதிராக பயன்படுத்தும் மிக நுட்பமானதும் அழிவுகரமான ஆயுதங்களில் ஒன்று இடறல்கள். இடறல்கள் அரிதாகவே சத்தமாக அறிவிக்கிறது. மாறாக, அது காயம், தவறான புரிதல், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதது அல்லது உணரப்பட்ட அநீதி ஆகியவற்றின் மூலம் அமைதியாக இருதயத்தில் நழுவுகிறது. வேதம் நம்மை தெளிவாக எச்சரிக்கிறது:

“உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.”
சங்கீதம்‬ ‭119‬:‭165‬
‭

இங்கு இடறல் என்ற வார்த்தை ஒரு மறைக்கப்பட்ட கன்னியை குறிக்கிறது - முன்னேற்றத்தைத் தடுக்கும் பாதையில் வைக்கப்படும் ஒன்று. இடறல் அப்படிபட்ட ஒன்று: ஒரு கன்னி நம்மை காயப்படுத்துவதற்காக அல்ல, ஆனால் நம்மை தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இடறல் தவிர்க்க முடியாதது, ஆனால் சிறைப்பிடிக்கபடுவது நமது விருப்பம் 

கர்த்தராகிய இயேசு ஒருபோதும் இடறல்லற்ற வாழ்க்கையை வாக்களிக்கவில்லை. உண்மையில், அவர் சொன்னது:

“இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம்,”
‭‭லூக்கா‬ ‭17‬:‭1‬ 

இடறல் வருமா என்பது அல்ல, அது வரும்போது என்ன செய்வோம் என்பதுதான் பிரச்சினை. இடறல் நிகழும்போது அல்ல, அது பாதுகாக்கப்படும்போது ஆபத்தானது. தடையின்றி இருதயத்தில் நுழைவது விரைவில் மனதை வடிவமைக்கிறது, மேலும் மனதை வடிவமைப்பது இறுதியில் தீர்மானங்களைக் கட்டுப்படுத்துகிறது.

நீதிமொழிகள் நம்மை எச்சரிக்கின்றன:

“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்.” நீதிமொழிகள்‬ ‭4‬:‭23‬ ‭

இடறல்லடைந்த இருதயம் மெதுவாக மகிழ்ச்சி, தெளிவு, பகுத்தறிவு மற்றும் அமைதியைக் கசிகிறது.

பல கிறிஸ்தவர்கள் இடறல்லடைய தொடங்குகிறார்கள், ஆனால் கடினப்படுத்துகிறார்கள். இந்த முன்னேற்றத்தைப் பற்றி எபிரேயர் நிதானமாகப் பேசுகிறார்:

“சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.”
‭‭எபிரெயர்‬ ‭3‬:‭12‬-‭13‬ ‭


இடறல் தன்னை நியாயப்படுத்திக் கொண்டு ஏமாற்றுகிறது. பின்வாங்குவது, கடுமையாகப் பேசுவது, தனிமைப்படுத்துவது அல்லது சேவை செய்வதை நிறுத்துவது சரியானது என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. ஆயினும், இடறல் பல மடங்கு விளைவைக் கொண்டிருக்கிறது என்று கர்த்தராகிய இயேசு எச்சரித்தார்:

“அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.”
‭‭மத்தேயு‬ ‭24‬:‭10‬ ‭


தனிப்பட்ட இடறாளாக தொடங்குவது உறவின் முறிவு, ஆவிக்குரிய வாழ்க்கையில் குளிர்ச்சி மற்றும் நோக்கத்திலிருந்து பிரித்துவிடும்.

இடறளடையாத கிறிஸ்து

ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவைப் பற்றி முன்னறிவித்தார்:

“அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.”
ஏசாயா‬ ‭53‬:‭3‬, ‭7‬ ‭

இயேசு கிறிஸ்துவும் துரோகம், தவறான புரிதல், பொய்யான குற்றச்சாட்டு மற்றும் கைவிடப்படுதல் ஆகியவற்றை எதிர்கொண்டார் - ஆனாலும் அவர் இடறல்ல டயவில்லை. ஏன்? ஏனெனில் இடறல் அவரை சிலுவையில் இருந்து திசை திருப்பியிருக்கும்.

அப்போஸ்தலனகிய பேதுரு நமக்கு நினைவூட்டுகிறார்:

“அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.”
‭‭1 பேதுரு‬ ‭2‬:‭23‬ ‭

இடறல்லிருந்து விடுபடுவது பலவீனம் அல்ல - அது ஆவிக்குரிய அதிகாரம்.

ஏன் இடறல் மிகவும் ஆபத்தானது

இடறல் பகுத்தறிவை மறைக்கிறது. இது நோக்கங்களை சிதைக்கிறது. இது அன்பை விட சந்தேகத்தின் மூலம் உரையாடல்களை மறுவிளக்கம் செய்கிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரிக்கிறார்:

“வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.”
‭‭யாக்கோபு‬ ‭3‬:‭16‬ ‭

இடறல்லடைந்த விசுவாசி இன்னும் ஜெபிக்கலாம், ஆராதிக்கலாம் ஊழியம் செய்யலாம் - ஆனால் சமாதானம், மகிழ்ச்சி அல்லது தெளிவு இல்லாமல். வெளிப்புறம் சுறுசுறுப்பாக இருக்கும் போது உள்ளே பாதுகாக்கப்படுகிறது.

ஒரு தீர்க்கதரிசன அழைப்பு 

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் இருதயங்களை ஆராய்ந்து பார்க்க நான் உங்களை அழைக்கிறேன். பழக்கவழக்கங்கள் உருவாகி, பாதைகள் கடினமாவதற்கு முன், இடறலை வேரிலேயே சமாளிக்க தேவன் நம்மை அழைக்கிறார்.

தாவிது ஜெபித்தார்:

“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.”
‭‭சங்கீதம்‬ ‭139‬:‭23‬-‭24‬ ‭

Bible Reading : Genesis 19-21
Prayer
ஆண்டவரே, என் இருதயத்தில் உள்ள இடறளின் ஒவ்வொரு விதையையும் வெளிப்படுத்தும். என்னைக் காயப்படுத்தியதைக் குணமாக்கும், கடினமாக்கப்பட்டதை மென்மையாக்கும், நான் உம்முடன் நடக்கவும் என் இருதயத்தைக் காத்துக்கொள்ளவும் உதவும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● ஆராதனை: சமாதானத்திற்கான திறவுகோல்
● யுத்தத்திற்கான பயிற்சி - II
● விதையின் வல்லமை - 3
● துளிர்விட்ட கோல்
● விசுவாசம்: தேவனை பிரியப்படுத்த ஒரு உறுதியான பாதை
● நல்லது சிறந்ததிற்கு எதிரி
● நடக்க கற்றுக்கொள்வது
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2026 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login