हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. மிகவும் பயனுள்ள நபர்களின் 9 பழக்கம்: பழக்கம் எண். 1
Daily Manna

மிகவும் பயனுள்ள நபர்களின் 9 பழக்கம்: பழக்கம் எண். 1

Saturday, 10th of January 2026
1 0 200
பல ஆண்டுகளாக, பல தொழிலதிபர்கள், உயர் பதவிகளை வகிக்கும் கார்ப்பரேட் தலைவர்களுடன் தொடர்பு கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர்கள் வளர்ச்சியடைவதையும், சிறந்து விளங்குவதையும், அவர்களின் செல்வாக்கை குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்துவதையும் நான் பார்த்திருக்கிறேன்.

அவர்களின் வாழ்க்கையை நான் உன்னிப்பாகக் கவனித்தபோது, ​​திறமையோ, கல்வியோ, வாய்ப்புகளோ மட்டுமல்ல, காலப்போக்கில் அவர்கள் வளர்த்து வந்த சில பழக்கவழக்கங்களும்தான் அவர்களை உண்மையாக வேறுபடுத்தியிருப்பதை நான் கவனித்தேன். இந்தப் பழக்கங்கள் அவர்களின் சிந்தனையை வடிவமைத்து, அவர்களின் அன்றாட முடிவுகளை வழிநடத்தி, அவற்றின் செயல்திறனைப் பராமரித்தன.

அடுத்த சில நாட்களில், எனது கண்டுபிடிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் சொந்த வாழ்க்கையில் இந்தப் பழக்கங்களை நீங்கள் வளர்த்துக் கொண்டால், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் மிகவும் பலனளித்து, திறம்பட செயல்படுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இறுதியில், அதுவே உண்மையில் பிதாவிற்கு மகிமையைக் கொண்டுவருகிறது.

“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.”
மத்தேயு‬ ‭6‬:‭33‬ ‭

வேதாகம கண்ணோட்டத்தில் மிகவும் பயனுள்ள ஜனங்கள், உற்பத்தித்திறனுடன் தொடங்குவதில்லை-அவர்கள் முன்னுரிமையுடன் தொடங்குகிறார்கள். உத்திகள் உருவாகும் முன், திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு முன், முடிவுகள் பாதுகாக்கப்படுவதற்கு முன், அவை ஒரு அடிப்படைக் கேள்வியைத் தீர்த்து வைக்கின்றன: யார் முதலில்?

செயல்திறன் தற்செயலானது அல்ல என்பதை வேதம் தொடர்ந்து வெளிப்படுத்துகிறது; இது தேவனுக்கு முன்பாக ஒழுங்காக ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கையின் துணைவிளைவாகும்.

1. முன்னுரிமை வல்லமையை தீர்மானிக்கிறது

ஆதியாகமத்தில், வேதாகமத்தின் முதல் வார்த்தைகள், "ஆதியிலே, தேவன்..." (ஆதியாகமம் 1:1) என்று அறிவிக்கிறது. இது ஒரு தெய்வீகக் கொள்கை. தேவன் எதில் முதன்மையாக இருக்கிறாரோ, அவர் ஆளுகை செய்கிறார். அவர் எதை ஆளுகை செய்தாலும், அவர் ஆசீர்வதிக்கிறார்.

தேவனுக்கு முதளிடம் இல்லாதபோது, ​​​​நல்ல விஷயங்கள் கூட சிதைந்துவிடும். ஆனால் அவருக்கு முதலிடம் இருக்கும்போது, ​​கடினமான காலங்கள் கூட பலனைத் தரும். கர்த்தராகிய இயேசு, மற்றவற்றுடன் தேவனை தேடுங்கள் என்று சொல்லவில்லை - முதலாவது தேவனை தேடுங்கள் என்றார். வாழ்க்கையில் பலன் என்பது நமது திட்டங்களில் தேவனை சேர்ப்பது அல்ல; இது நமது திட்டங்களை தேவனிடம் சமர்ப்பிப்பதாகும்.

தாவீது ராஜா இதை ஆழமாகப் புரிந்துகொண்டார். அவர் ஒரு போர்வீரன், ராஜா, சங்கீதக்காரன் மற்றும் தலைவர் 

என்றாலும், அவர் அறிவித்தார்:

“கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.”
‭‭சங்கீதம்‬ ‭27‬:‭4‬ ‭

எல்லாவற்றிலும் கடவுளுக்கு முதலிடம் கொடுப்பதிலிருந்து தாவீதின் செயல்திறன் பாய்ந்தது.

2. ஆதி அன்பு நீடித்த வலிமையைத் தருகிறது

“எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.”வெளிப்படுத்தின விசேஷம்‬ ‭2‬:‭1‬-‭4‬ ‭

கவனியுங்கள்-வேறு ஒன்றும் கண்டிக்கப்படவில்லை. அவர்களின் பணிகள் தொடர்ந்தன, அவர்களின் உழைப்பு நீடித்தது, அவர்களின் உபதேசம் தெளிவாக ஒலித்தது - ஆனால் தேவனோடு நெருக்கம் இல்லாத செயல்திறன் வெற்றுத்தனமாகிவிட்டது.

மிகவும் பயனுள்ள விசுவாசிகள் தங்கள் ஆதி அன்பைப் பாதுகாக்கிறார்கள். ஜெபத்தில் அவசர தன்மை இல்லை. வேதாகமம் குறையவில்லை. ஆராதனை என்பது இயந்திரத்தனமானது அல்ல. பெத்தானியாவின் மரியாளைப் போலவே, அவர்கள் நல்ல பங்கை தேர்வு செய்கிறார்கள்-இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருக்கிறார்கள்-அந்த நெருக்கம் எப்போதும் செயலை விட அதிகமாக இருக்கும் என்பதை அறிந்திருக்கிறார்கள் (லூக்கா 10:38-42).

இந்த தோரணையின் வெகுமதியை ஏசாயா தீர்க்கதரிசி வெளிப்படுத்துகிறார்:

“கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.”
‭‭ஏசாயா‬ ‭40‬:‭31‬ ‭l

இங்கே காத்திருப்பது என்பது செயலற்ற தன்மையைக் குறிக்கவில்லை - அதாவது தேவனை மையமாகக் கொண்ட சார்பு. வலிமை புதுப்பிக்கப்படுவது முயற்சியால் அல்ல, ஆனால் சரியான நிலைப்பாட்டின் மூலம்.

3. முதல் பழக்கம் மற்ற எல்லா பழக்கங்களையும் வடிவமைக்கிறது

பழைய ஏற்பாட்டில், தேவன் முதற்பலனைக் கோரினார்—எஞ்சியவை அல்ல (நீதிமொழிகள் 3:9). முதல் பங்கு மீதியை மீட்டது. இந்த கொள்கை இன்னும் செயல்பாட்டில் உள்ளது. நாளின் முதல் மணிநேரமும், இருதயத்தின் முதல் பாசமும், விருப்பத்தின் முதல் விசுவாசமும் தேவனுக்கு சொந்தமானால், மற்ற அனைத்தும் தெய்வீக வரிசையில் வருகின்றன.

கர்த்தராகிய இயேசுவே இந்தப் பழக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டார். “அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.”

(மாற்கு 1:35). கூட்டம், அற்புதங்கள் மற்றும் விண்ணபங்கலுக்கு முன் - ஐக்கியம் இருந்தது.

இதனாலேயே வேதத்தில் உள்ள செயல்திறன் பக்தியிலிருந்து ஒருபோதும் பிரிக்கப்படவில்லை. யோசுவாவின் வெற்றி, வார்த்தையின் மீது தியானிப்பதில் இருந்து பாய்ந்தது (யோசுவா 1:8). யோசேப்பின் எழுச்சி தேவனுடைய பிரசன்னத்திலிருந்து பாய்ந்தது (ஆதியாகமம் 39:2). நிலையான ஜெப வாழ்க்கையிலிருந்து தானியேளின் செல்வாக்கு பாய்ந்தது. (தானியேல் 6:10).

4. பலிபீடத்திலிருந்து செயல்திறன் தொடங்குகிறது

“அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.”ரோமர்‬ ‭12‬:‭1‬ ‭

அனைத்து விசுவாசிகளும் தங்களை ஜீவபாலியாக ஒப்புக்கொடுக்க இந்த வேதம் தெளிவாக அழைக்கிறது. தியாகம் எப்பொழுதும் முதலில் பலிபீடத்தில் செல்கிறது. தினமும் தேவனுக்குஒப்புக்கொடுக்கபடும் வாழ்க்கை தேவனால் உயர்த்தப்பட்ட வாழ்க்கையாக மாறும்.

மிகவும் திறமையானவர்கள், "எது வேலை செய்கிறது?" என்று கேட்க மாட்டார்கள். அவர்கள் கேட்பதெல்லாம், "உண்மையில் தேவனுக்கு கனத்த்தை கொண்டுவருவது எது?" வேதம் தெளிவாக பதிலளிக்கிறது:

“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.”
‭‭நீதிமொழிகள்‬ ‭9‬:‭10‬ ‭

தேவன் முதலில் இருக்கும் இடத்தில், ஞானம் நிரம்பி வழிகிறது.
ஞானம் எங்கு ஓடுகிறதோ, அங்கே செயல்திறன் பின்தொடர்கிறது.

இதுவே முதல் பழக்கம் - இது இல்லாமல், வேறு எந்தப் பழக்கமும் உண்மையாக நிலைக்க முடியாது.

Bible Reading: Genesis 30-31
Prayer
தகப்பனே, நான் என் வாழ்க்கையை உமது வரிசையில் கொண்டு வருகிறேன். ஒவ்வொரு தவறான முன்னுரிமையையும் பிடுங்கிப் போடும். மீண்டும் என் வாழ்க்கையில் முதல் இடத்தைப் பிடித்து, என் கீழ்ப்படிதலை பலப்படுத்தி, உமது ராஜ்யத்திற்கும் உமது மகிமைக்கும் என் வாழ்க்கையைப் பயன்படுத்தும். இயேசுவின் நாமத்தில்.ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● மன அழுத்தத்தை வெல்ல மூன்று வல்லமை வாய்ந்த வழிகள்
● விசுவாசம்: கர்த்தரைப் பிரியப்படுத்த ஒரு உறுதியான பாதை
● முரட்டு மனப்பான்மையை வெல்லும் வகைகள்
● இயற்கைக்கு அப்பாற்பட்டதை வளர்ப்பது
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 4
● தேவனுக்காக மற்றும் தேவனுக்கும்
● உங்கள் சவுகரிய மண்டலத்திலிருந்து வெளியேறவும்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2026 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login