हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. சந்திப்பிற்கும் வெளிப்பாட்டிற்கும் இடையில்
Daily Manna

சந்திப்பிற்கும் வெளிப்பாட்டிற்கும் இடையில்

Sunday, 10th of May 2026
0 0 3
Categories :  தெய்வீக சந்திப்பு (Divine Visitation)
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
(ஆதியாகமம் 21 : 1)

"அவர் (கர்த்தர்) சொல்லியிருந்தபடி", என்ற சொற்றொடர்களை நீங்கள் கவனமாகப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வேதம் தேவனின் குணாதிசயத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது, “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?" (எண்ணாகமம் 23 : 19) தேவன் எதையாவது செய்வதைப் பற்றி பேசும்போது, ​​அவர் அதை நிறைவேற்றுவார் என்று நீங்கள் உறுதியாக விசுவாசியுங்கள்.

இருப்பினும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று நான் விரும்பும் ஒரு சிறந்த அச்சாரம் இது. வருகைக்கும் வெளிப்பாட்டிற்கும் இடையில் எப்போதும் ஒரு காலகட்டம் இருக்கும். சிலருக்கு இந்த காலம் குறைவாகவும், சிலருக்கு சிறிது அதிகமாகவும் இருக்கலாம். நான் இதைப் பற்றி விவரிக்கிறேன்

சாராள் கர்ப்பமாக இருந்தபோது எல்லாவிதமான எண்ணங்களும் அவள் மனதை மறைக்க முயன்றிருக்க வேண்டும். "இவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்தக் குழந்தையைப் பெற்றிருக்கிறேன், குழந்தையை இழந்தால் என்ன செய்வது?" அவளுடைய அதிசயம் இன்னும் வெளிப்படவில்லை, அவள் செயல்பாட்டில் இருந்தாள். இதுவே காத்திருப்பு காலம் எனப்படும். யாரும் காத்திருக்க விரும்புவதில்லை.

இந்தக் காத்திருக்கும் காலங்களில் நாம் என்ன செய்வது?
"கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு". (சங்கீதம் 27 : 14) இதைத்தான் சாராள் செய்திருக்க வேண்டும், நாமும் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நாம் அனைவரும் காத்திருக்கும் பருவங்களை அனுபவிக்கிறோம். அந்த காலகட்டங்களில், நமக்கு ஒரு தேர்வு உள்ளது: நாம் நம்மை நினைத்து வருந்தலாம் மற்றும் பயம் மற்றும் விரக்தி நம்மை கட்டுப்படுத்த அனுமதிக்கலாம் அல்லது தேவனை விசுவாசிக்கலாம் மற்றும் நாம் காத்திருக்கும்போது அவர் நம் வாழ்வில் என்ன செய்கிறார் என்று தேடலாம்.

சாராளைப் போல நாம் காத்திருக்கும் காலத்தில் தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொள்ள வேண்டும். எபிரெயர் 11 : 1 சொல்கிறது, "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது". விசுவாசத்தினாலே குழந்தைப்பேறு வயதை கடந்திருந்த சாராளும் கூட, வாக்குத்தத்தம் செய்தவரை உண்மையுள்ளவராகக் கருதியதால், பிள்ளையைப் பெற்றெடுக்க முடிந்தது.”

வேதம் விசுவாசத்தைப் பற்றி பேசும் போதெல்லாம், அது எப்போதும் தேவனுடைய வார்த்தையுடன் தொடர்புடையது. கர்த்தர் சொன்ன வார்த்தையை சாராள் கைக்கொண்டாள். கர்த்தர் பேசியதை அவள் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். நாமும் செய்ய வேண்டியது இதுதான்.

Bible Reading: 2 kings 17-18
Prayer
பிதாவே, நீர் உண்மையுள்ளவர். எனது தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உமது சிருஷ்டிப்பு மற்றும் செயல்களை நான் ஒருபோதும் சந்தேகப்படாமல் இருக்க எனக்கு கிருபைத் தாரும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.


Join our WhatsApp Channel


Most Read
● விசுவாசத்தின் வல்லமை
● சமாதானம் - தேவனுடைய ரகசிய ஆயுதம்
● ஜீவன் இரத்தத்தில் உள்ளது
● இயேசுவின் கிரியைகளிலும் பெரிய கிரியைகளையும் செய்வது என்றால் என்ன?
● கிறிஸ்துவில் உங்கள் ஆவிக்குரிய வாழ்வில் நுழைதல்
● நாள் 09: 40 நாட்கள் உபவாசம் & பிரார்த்தனை
● யாபேஸின் விண்ணப்பம்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2026 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login