हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. இயேசுவின் கிரியைகளிலும் பெரிய கிரியைகளையும் செய்வது என்றால் என்ன?
Daily Manna

இயேசுவின் கிரியைகளிலும் பெரிய கிரியைகளையும் செய்வது என்றால் என்ன?

Wednesday, 20th of November 2024
0 0 274
Categories : கீரியைகள் (Work)
“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.”
‭‭யோவான்‬ ‭14‬:‭12‬ ‭

1. கர்த்தருடைய வாக்குத்தத்தம் அப்போஸ்தலர்களுக்கு மட்டுமல்ல, விசுவாசிக்கிற எல்லாருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

2. கர்த்தர் செய்த கிரியைகளை நாமும் செய்வோம் என்று வாக்களிக்கிறார்

3. முடிவில், கர்த்தர் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வோம், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வோம்.

இயேசு செய்த கிரியைகளை நாமும் செய்வோம் என்று இயேசு வாக்குக்கொடுத்தார். அவர் செய்த அனைத்து அற்புதங்களையும் நாம் செய்வோம் என்று அர்த்தமா?

‭‭1 கொரிந்தியர்‬ ‭12‬ ல், அப்போஸ்தலனாகிய பவுல், “ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம்பண்ணுகிறார்களா?”
‭‭1 கொரிந்தியர்‬ ‭12‬:‭7‬-‭10‬, ‭29‬-‭30‬ ‭l

எல்லா விசுவாசிகளும் தம்மைப் போல அற்புதங்களைச் செய்வார்கள் என்று இயேசு சொல்லவில்லையென்றால், "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்யும் கிரியைகளையும் செய்வான்" என்று அவர் சொன்னதன் அர்த்தம் என்ன?

யோவான் 17ல்,  ஆண்டவாராகிய இயேசு ஜெபித்தார், “பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.” யோவான்‬ ‭17‬:‭4‬ ‭

அவருடைய கிரியையை அவர் தனது பிதாவின் மகிமையைக் கவனத்தில் கொள்ளச் செய்தார். ஆகவே, நாமும் நமது வார்த்தைகளாலும் செயலாலும் உலகத்தின் கவனத்தை இயேசு கிறிஸ்து மற்றும் பிதாவிடம் திருப்புவோம் என்பதே இதன் பொருள்.

"பெரிய கிரியைகள்" என்றால் "அதிக அற்புதங்கள்" என்று நீங்கள் நினைத்தால், 5000 க்கும் மேற்பட்ட ஜெனங்களுக்கு ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்களை உணவளித்த ஒருவரை நான் இன்னும் பார்க்கவில்லை, தனியாக தண்ணீரில் நடந்து, கல்லறையில் இருந்து நான்கு நாட்களுக்குப் பிறகு லாசருவை எழுப்பினதை பார்க்கவில்லை.

இயேசுவின் 'பெரிய கிரியைகள்' ஒரு துப்பு 'ஏனெனில் நான் என் பிதாவிடம் செல்கிறேன்' என்ற சொற்றொடரில் உள்ளது.

தாம் பிதாவிடம் திரும்பிய பிறகு, அவர்களிடத்தில் தங்கியிருக்க பரிசுத்த ஆவியை அனுப்புவதாக இயேசு வாக்குக் கொடுத்தார்.

அப்போஸ்தலருடைய சாட்சியின் மூலம் பரவும் பரிசுத்த ஆவியின் மூலம் வாழ்க்கையை மாற்றும் சுவிசேஷத்தின் வல்லமையை பெரிய படைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. பெந்தெகொஸ்தே நாளில் பேதுருவின் பிரசங்கத்தின் மூலம், 3,000 பேர் இரட்சிக்கப்பட்டார்கள், அநேகமாக இயேசு தம்முடைய முழு ஊழியத்தின் போது இரட்சிக்கப்பட்டதை விட அதிகம்!

“இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.”
‭‭எபிரெயர்‬ ‭8‬:‭6‬ ‭
Prayer
பிதாவே, உமது பரிசுத்த ஆவிக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். இயேசு செய்த கிரியைகளையும் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய கூடிய அனைத்தும் என்னிடம் உள்ளன. இயேசுவின் நாமத்தில். ஆமென்.


Join our WhatsApp Channel


Most Read
● புளிப்பில்லாத இதயம்
● நாள் 15: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● மனித தவறுகளுக்கு மத்தியில் தேவனின் மாறாத இயல்பு
● எப்போது அமைதியாக இருக்க வேண்டும், எப்போது பேச வேண்டும்
● வேலை ஸ்தலத்தில் ஒரு நட்சத்திரம் II
● விசுவாசத்தின் குணப்படுத்தும் வல்லமை
● கீழ்ப்படிதல் ஒரு தெய்வீக அறம்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login