हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. அன்பைத் தேடி 
Daily Manna

அன்பைத் தேடி 

Sunday, 12th of January 2025
0 0 164
Categories : அன்பு (Love)
“அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.”
(யோவான்‬ ‭4‬:‭17‬-‭18‬‭)

ஒரு நாள் கர்த்தராகிய இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் சமாரியா வழியாகச் செல்வதை தீர்மானிதார். பயணத்தில், அவர் சமாரியாவின் சீகார் என்ற நகரத்திற்கு வந்தார். அங்கே, நண்பகல் நேரத்தில் கிணற்றில் தண்ணீர் எடுக்க ஒரு சமாரியப் பெண் (அவள் பெயர் சொல்லப்படவில்லை) வந்தாள்.

அந்நாட்களில் கிணறு குளிர்ச்சியாக இருக்கும் போது பெண்கள் தண்ணீர் எடுப்பது வழக்கம். இந்தப் பெண், தன் கெட்டுப்போன நற்பெயரைப் பற்றி நன்கு அறிந்திருக்கலாம், வேண்டுமென்றே தண்ணீர் எடுப்பதற்கு மிகவும் பிரபலமான நேரத்தைத் தேர்ந்தெடுக்காமள், கிசுகிசுக்கள், கேலிகள் மற்றும் அண்டை வீட்டாரின் வெளிப்படையான வெறுப்பைத் தவிர்ப்பதில் கவனமாக இருந்திருக்க வேண்டும்-வாழ்க்கையை எப்படி வாழ்வது எவ்வளவு சோகமான வழி.

அவள் வாழ்க்கையில் ஏற்கனவே ஆறு ஆண்கள் வந்தனர், ஆனால் அவர்களால் அவள் விரும்பிய உண்மையான அன்பை அவளுக்கு கொடுக்க முடியவில்லை . அவர்கள் அவளை துஷ்பிரயோகம் செய்து விட்டுவிட்டார்கள். மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஆண்டவர் இயேசு அவள் வாழ்க்கையில் வந்த ஏழாவது நபர்.

இயேசு பூரணமான மனிதர். எந்த ஒரு சுயநல நோக்கத்திற்கும் அவளை பயன்படுத்த விரும்பவில்லை. அவருடைய அன்பு பரிசுத்தமானதாகவும் புனிதமாகவும் இருந்தது. அவள் உண்மையில் தேடிக்கொண்டிருந்த அன்பு இதுதான். மற்ற ஆண்கள் கொடுத்த பொய்யான அன்பால் அவள் சோர்வடைந்தாள். அவள் இயேசுவின் அன்பைப் பெற்ற பிறகு, அவள் சமூகத்தை எதிர்கொண்டு, அவர் தனக்குச் செய்ததைப் பற்றி பேச முடியும். அதேபோல், நீங்கள் இயேசுவின் நண்பராகும்போது, ​​மற்றவர்கள் கொடுக்க முடியாத இந்த உண்மையான அன்பை அனுபவிப்பீர்கள்.

ஒரு இளம்பெண் எனக்கு எழுதிய கடிதத்தில், பல வருடங்களாக தன் காதலன் தன்னை விட்டு விலகிவிட்டதாகவும், இப்போது அவள் நினைப்பதெல்லாம் தற்கொலை எண்ணம் தான். திருமணம் செய்து கொண்டால் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று பலர் நினைக்கிறார்கள்.

திருமணம் என்பது ஒரு சிகிச்சை அல்ல. திருமணமான தம்பதிகள் தாங்கள் தனிமையில் இருக்க விரும்புவதையும் நான் அடிக்கடி கேட்கிறேன். துரதிர்ஷ்டவசமாக, அதுவும் ஒரு தீர்வு அல்ல.

நீங்கள் இப்போது நிறைவைக் கண்டால் - உங்கள் தற்போதைய நிலையில், நீங்கள் திருமணமானவராகவோ அல்லது தனி நபராகவோ நிச்சயமாக நிறைவைக் காண்பீர்கள். இந்த நிறைவு இயேசுவில் மட்டுமே காணப்படுகிறது. சமாரிய ஸ்திரீ இயேசுவில் தனது நிறைவைக் கண்டாள், எனவே இந்த அன்பான பெண்ணை இன்றுவரை நாம் நினைவில் கொள்கிறோம். இது உங்களுக்கான தருணம்.
Prayer
பரலோகத் தகப்பனே, நித்திய அன்புடன் என்னை நேசித்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். உமது அன்பு சுயநலமற்றது. உமது அன்பு நிபந்தனையற்றது. நீர் என்னை மிகவும் நேசிக்கிறீர், உமது குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவை எனக்காக அனுப்பினீர். உமது அன்பில் வளர எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● ஆவிக்குரிய பெருமையை மேற்கொள்ள நான்கு வழிகள்
● அந்தப் பொய்களை அம்பலப்படுத்துங்கள்
● சுய வஞ்சித்தல் என்றால் என்ன? – II
● ஆசீர்வாதத்தின் வல்லமை
● நாள் 04: 40 நாட்கள் உபவாசமும் ஜெபமும்
● நாம் இரட்சகரின் நிபந்தனையற்ற அன்பு
● அக்கிரமத்தின் வல்லமையை உடைத்தல் - II
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login