हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. நீங்கள் உண்மையாய ஆராதிப்பவரா
Daily Manna

நீங்கள் உண்மையாய ஆராதிப்பவரா

Wednesday, 12th of February 2025
0 0 439
Categories : ஆராதனை (Worship) எஸ்தரின் ரகசியங்கள்: தொடர் (Secrets Of Esther: Series)
“உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும்தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது;” யோவான்‬ 4:23
 
அவரது பிரபல அந்தஸ்தின் முழு எடையையும் சுமந்துகொண்டு, சாலொமோன் ராஜா, "சூலமித்தியாள்" என்று அழைக்கப்படும் பெயரற்ற ஆடுகள் மேய்த்தவளை காதலித்தார். ஆயிரம்மனைவிகளைக் கொண்ட ஒருபிரரிசித்திப்பெற்ற அரசன் ஒரு எளிய விவசாயப் பெண்ணிடம் ஏன்இவ்வளவு ஆர்வமாக இருந்தார்? சாலொமோன் பாடலைப் பற்றிய ஒரு விளக்கத்தை நான்கண்டேன், "சாலொமோன் பாடலின் தொடக்கத்தில், சூலமித்தியாள் பெண்ணுக்கும்சாலொமோன் அரசனுக்கும் இடையே காதல் வளர்வதைக் காண்கிறோம்.
 
வசனங்கள் 5-6 இல், சூலமித்தியா பெண் அவள் கருமை நிறமாக இருப்பதாகவும், மற்றவர்களுக்காக திராட்சைத் தோட்டங்களை வைத்திருப்பதாகவும், அவளுடைய தாயின் பிள்ளைகள் அவள் மீது கோபமாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். அவள் நிறத்தில் கருமையாக இருப்பது அவள் கடின உழைப்பில் தன் வாழ்நாளைக் கழித்திருப்பதைக் குறிக்கிறது. அவளுக்கு ஆடம்பரம் தெரியாது, அவளால் தன்னைத் தானே முன்னிறுத்தவோ அல்லது கவனித்துக்கொள்ளவோ ​​முடியவில்லை. அவள் அழகாக இருக்கிறாள். அவள் கடின உழைப்பு வாழ்க்கையின்விளைவுகளை அவள் உடல் காட்டுகிறது. அவள் தன் சொந்த திராட்சைத் தோட்டத்தைவைத்திருக்கவில்லை, அதாவது தனக்கு திராட்சைத் தோட்டம் இல்லை என்றும் சொல்கிறாள். அவளிடம் செல்வம் இல்லை; அவளுக்கு எந்த சொத்தும் இல்லை.
 
அவள் பழைய ஏற்பாட்டு காலத்தில் (அத்துடன் இடைக்காலம் மற்றும் நவீன காலத்திலும் கூட) ஒரு ராஜாவுக்கு ஏற்ற மணமகள் அல்ல; அரசர்கள் தங்கள் ராஜ்யங்களுக்கு சமாதானத்தை அல்லது செழிப்பைக் கொண்டுவரக்கூடியவர்களை மணந்தார். கூட்டணிகள், வர்த்தக ஒப்பந்தங்கள்மற்றும் இணைப்புகள் கூட அரச திருமணங்கள் மூலம் திட்டமிடப்பட்டன. சூலமித்தியா பெண் இவற்றில் எதையும் வழங்க முடியாது. ஆனாலும், அவள் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்த போதிலும், சாலொமோன் ராஜா அவளை நேசித்தார். வசனங்கள் 2:4-ல் “என்னைவிருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.”
 
அகாஸ்வேரு ராஜா எஸ்தரை காதலித்த அதே காரணங்களுக்காக சாலொமோன் இந்த பெண்ணை நேசித்தார் என்று நான் நம்புகிறேன். அறியப்பட்ட உலகின் மிக அழகான பெண்களை இருதலைவர்களும் தேர்ந்தெடுத்தனர். ஒவ்வொரு அரசர்களும் ஒரு பெரிய ராஜாவாக தனது அரசஅதிகாரம் மற்றும் அதிகாரத்தைக் காட்டிலும் ஒரு அழகான இளம் கன்னி அவரைக் காதலிக்கக்கூடும் என்ற உண்மையால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்.
 
அதேபோல், மகிமையின் ராஜா, எஸ்தரைப் போலவே, ராஜாவின் ஆசீர்வாங்களையல்ல ஆசீர்வாதங்களை தருகிற ராஜாவை அதிகம் நேசிக்கும் சீஷர்களுக்காக ஏங்குகிறார். அன்பளிப்பை விட கொடுப்பவரை நேசிப்பவர்களை தேவனின் இருதயம் விரும்புகிறது. நுகர்வோர் ராஜா பந்தியில் சாப்பிடுகிறார்கள், ஆனால் அவர்கள் அன்பைக் காட்டுவது அரிது. ராஜாவை ஆராதிப்பவர்கள் ராஜா மீது முழு கவனம்செலுத்துகிறார், இன்னும் அவருடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. நீங்கள் நுகர்வோராஅல்லது ஆராதிப்பவரா? தேவன் என்ன தருவார் என்பதற்காகவா அல்லது அவர் யார் என்பதை அறிந்து அவரை பின்பற்றுகிறீர்களா? உங்கள் ஜெபங்கள் எப்பொழுதும் அவர் உங்களுக்காக என்னசெய்ய வேண்டும் என்று இருக்கிறதா அல்லது தேவனுடைய ராஜ்யத்தை மையமாகக் கொண்டதா? நீங்கள் எப்பொழுதும் தேவனை அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா அல்லது ஏற்கனவே ஜெபப்பட்டியள்களால் நிரம்பியுள்ளதா?
 
தேவன் உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்களை தேடுகிறார். யோவான் 4-ஆம் அதிகாரத்தில், ஒரு கிணற்று அருகே இயேசுவை ஒரு பெண் சந்திக்கிறாள், அங்கு அவர் அவளுக்கு ஒருக்காலும் தாகம் எடுக்காத தண்ணீர் தருவதாகக் கூறினார், அதனால் அவள் மீண்டும் கிணற்றுக்கு வர வேண்டியதில்லை. அந்தப் பெண் ஈர்க்கப்பட்டு, இயேசு தனக்குத் தருவார் என்று விரைந்தாள். இது நம்மில் பெரும்பாலோரைப் போன்றது. தேவன் என்ன நமக்கு தரப்போகிறார் என்பதை நாம் விரும்புகிறோம், ஆனால் அவளுடைய இருதயத்தின் நிலையை குறித்து இயேசு அதிக அக்கறைகாட்டினார். அவள் உண்மையாய் தொழுதுகொள்ளுகிறவளா?
 
பின்னர் இயேசு யோவான் 4:21-24ல் அவளிடம் கூறினார். “அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான்சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத்தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள்அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய்வருகிறது. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும்தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத்தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன்ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத்தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.”
 
மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. இன்று, அநேகர் தேவனை தேடுவதும், தேவாலயத்திற்குத் செல்வதும் தேவைப்படும்போது மட்டுமே. "தேவனே, நீர் என்னுடையவர், நான் எப்பொழுதும் உன்னுடையவன்" என்று சொல்வீர்களா?

Bible Reading: Leviticus 26-27
Prayer
பிதாவே, இயேசுவின் நாமத்தில், இன்று எனக்கு உமது வார்த்தையின் புரிதலுக்காக நன்றி. நீர் என் இருதயத்தை புதுப்பித்துதர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நீர் என் வாழ்க்கையின் சூழ்நிலைகளையும் என் நாட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்; உம்முடையவைகளை அல்ல உம்மையே தேட எனக்கு உதவி செய்யும். உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்களாக மாற்றுவீராக. இயேசுவின் நாமத்தில். ஆமென்.

Join our WhatsApp Channel


Most Read
● காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 6
● உங்கள் ஆவிக்குரிய பலத்தை எவ்வாறு புதுப்பிப்பது -3
● ஒரு புதிய இனம்
● பயனுள்ள 40 நாட்கள் உபவாச ஜெபத்திற்கான வழிகாட்டுதல்கள்
● ஐக்கியதால் அபிஷேகம்
● உங்கள் இலக்குகளை அடைவதற்கான வல்லமையை பெறுங்கள்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login