हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. தடுப்பு சுவர்
Daily Manna

தடுப்பு சுவர்

Sunday, 30th of March 2025
0 0 187
Categories : நம்பிக்கைகள்(Beliefs) மனம் ( Mind) மாற்றம்(transformation)
“எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்து கிறவர்களாயிருக்கிறோம். உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குந்தக்க நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயுமிருக்கிறோம்.”
2 கொரிந்தியர்‬ 10‬:4‬-6‬ 

யோசுவா சில தலைவர்களை அனுப்பி,  தேவன் தங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த தேசத்தைப் பார்க்கச்  சென்றார்கள். நிலத்தை முழுவதுமாக உடைமையாக்குவதற்கு  முன், அந்த நிலம் எதைப் பற்றியது என்பதைப் பற்றிய யோசனை இருக்க வேண்டும் என்று அவர்கள் உணர்ந்தனர். எனவே தலைவர்கள்  எந்த அறிக்கையுடன் திரும்பினர்: “ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம். அமலேக்கியர் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர் கடல் அருகேயும் யோர்தானண்டையிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள்.”
எண்ணாகமம்‬ 13‬:28‬-29‬ 

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றியபோது இஸ்ரவேலர்கள் எதிர்கொண்ட  அரிணிப்பான  பட்டணங்கள், குறிப்பிடத்தக்க சவாலாக கோட்டைகளாக இருந்தன. இஸ்ரவேலர்கள் இந்த  பட்டணங்களை எப்படி கைப்பற்றுவது என்று ஆச்சரியப்பட்டார்கள்,  பதில்களும் வாயில்களும் ஊடுருவ முடியாததாகத் தோன்றியது. இது ஒரு முட்டுச்சந்தாகும் என்று அவர்கள் உணர்ந்தார்கள். உண்மையில்,  அரணிப்பான பட்டணங்களை  பற்றி கேள்விப்பட்ட சிலர் எகிப்துக்குத் திரும்புவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.  தேவன் உங்களுக்கு எத்தனை முறை ஒரு தரிசனத்தைக்  காண்பித்தார், ஆனால் ஒரு தடையின் காரணமாக நீங்கள் திரும்பிச் செல்ல நினைத்தீர்களா? சில நேரங்களில், பிசாசு தடையை  சுதந்தரிக்க முடியாத தோற்றத்தை  ஏற்படுத்துகிறான்; இதற்கிடையில், பலர் அதை  சுதந்தரித்துள்ளனர். கடந்த காலங்களில் பலர் இதே போன்ற தடைகளை கடந்து சென்றுள்ளனர்.

இந்த அரணிப்பான பட்டணங்கள் கிறிஸ்தவர்களாகிய நாம் நமது  ஆவிக்குரிய பயணத்தில் சந்திக்கும்  ஆவிக்குரிய தடைகளை அடையாளப்படுத்துகின்றன. இந்தத் தடைகள் அல்லது  மதில்களை கடக்க முடியாதவையாகத் தோன்றுகின்றன, அவற்றை நாம் எவ்வாறு சமாளிப்பது என்று நாம் ஆச்சரியப்படலாம். இருப்பினும், நீங்கள் மேலும் படித்தால், கடக்க முடியாததாகத் தோன்றும் அந்த மதிலை தேவன்  எப்படி அற்புதமாக வீழ்த்தினார் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அவர்  பதில்களை தகர்த்து,  ஜனங்கள்  தேசத்தை எளிதில் கைப்பற்றினர். தேவன் தடைகளை சமன் செய்தார், அவர்கள் ஆசீர்வாதத்தை அனுபவிக்க  முன்னேறி சென்றார்கள்.

அரணிப்பான பட்டணங்களின்  மீது  தேவன் இஸ்ரவேலர்களுக்கு வெற்றியைக் கொடுத்தது போல, நம் முன்னேற்றத்தைத் தடுக்கும்  ஆவிக்குரிய கோட்டைகளை வெல்ல அவர் நமக்கு உதவ முடியும்.  தேவனுடைய  வல்லமையின் மீது  நம்பிக்கையும்  விசுவாசத்தையும், இந்த தடைகள்  என்ற  மதில்களை உடைத்து,  தேவனின் வாக்குறுதிகளின் முழுமையை அனுபவிக்க முடியும். நமக்கு எதிராக நின்று நமது முன்னேற்றத்தைத் தடுக்க நினைக்கும் பிசாசின் ஒவ்வொரு கோட்டையையும் இடித்து வீழ்த்துவதற்கு நம்மிடம்  ஆவிக்குரிய ஆயுதங்கள் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள்.

நமக்குத் தேவையானது  தேவன் மீது   நம்பிக்கையும் முழுமையான   விசுவாசம் மட்டுமே.  வாக்குதத்தங்களை  கொடுத்து  பின் வாங்குவதற்கு அவர்  மனிதன் அல்ல. நாம் உணர வேண்டியது என்னவென்றால்,  தேவன்  மதில்களை பற்றி மறந்துவிடவில்லை. ஆம், நாம் அதை நெருங்குவதற்கு முன்பே அவருக்கு அது தெரியும்.  மதில்களை பார்த்ததும்  நம்மை போல்  அவர்  திகைப்பதில்லை. அவரை நம்புவதற்கு அதுவே போதுமான காரணம். தடை இருப்பதை அவர் அறிந்திருந்தார், ஆனாலும் அவர் உங்களை அந்த திசையில் வழிநடத்தினார்.  ஆரம்பத்திலிருந்து முடிவை அறிவார்; அதாவது, உங்களுக்கு எதிரான கோட்டையை எப்படி  தகர்ப்பது என்பது அவருக்குத் தெரியும். எனவே  அவருக்கு காத்திருங்கள், அவருக்குப் பின்னால்  நில்லுங்கள், உங்கள் சார்பாக அவர்   வல்லமையை காட்டட்டும். 2 நாளாகமம் 16:9 கூறுகிறது, “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.”
2 நாளாகமம்‬ 16‬:9‬
1.  மனித  பாரம்பரியம்
2. தவறான சிந்தனை
3. மன்னிக்காத தன்மை
4. நம்பிக்கையின்மை

மேலும், நாம் நமது  ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை நோக்கிப் பயணிக்கும்போது, ​​நமது முன்னேற்றத்தைத் தடுக்கும் முக்கியமான நான்கு  ஆவிக்குரிய தடைகள் அல்லது  மதில்களை சந்திப்போம்:
நற்செய்தி என்னவென்றால், உங்கள்  தேவனுக்கு அப்பால் எந்த தடையும் இல்லை, எனவே அமைதியாக இருங்கள், அவர் உங்களுக்கு உதவுவார் என்று நம்புங்கள்.

Bible Reading: Judges 20-21, Ruth 1
Prayer
பிதாவே, இயேசுவின்  நாமத்தில், கடந்த காலத்தில்  நீர் எனக்காக உடைத்த  மதில்களுக்கு நன்றி. இந்தப் பயணத்தில் நான் தனியாக இல்லை என்பதை எனக்கு உணர்த்தியதற்கு நன்றி. நான் தொடர்ந்து செல்லும்போது  உம் மீது நம்பிக்கை வைக்க நீர் எனக்கு உதவ வேண்டும் என்று  ஜெபிக்கிறேன். இனி எதுவும் என்னைத் தடுத்து நிறுத்தக் கூடாது என்று  ஜெபிக்கிறேன். எனக்கு முன்னால் இருந்த  மதில்  தகர்ந்து விட்டது. இயேசுவின்  நாமத்தில். ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● எச்சரிக்கையைக் கவனியுங்கள்
● நீங்கள் ஒரு நோக்கத்திற்காக பிறந்திருக்கிறீர்கள்
● பூமிக்கு உப்பா அல்லது உப்புத்தூணா?
● மாற்றத்திற்கான தடைகள்
● பாவத்துடன் போராட்டம்
● உங்கள் விடுதலையை எப்படி வைத்திருப்பது
● தலைப்பு: அவர் காண்கிறார்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login