“ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.”
1 பேதுரு 2:5
உடன்படிக்கைப் பெட்டியை மீண்டும் எருசலேமுக்குக் கொண்டுவரும் தாவீது அரசரின் மகிழ்ச்சியான காட்சி தெய்வீக நெருக்கம் மற்றும் பணிவு ஆகியவற்றின் தெளிவான உருவப்படத்தை வரைகிறது. தாவீது, ராஜரீக உடையில் அல்ல, ஆனால் ஒரு பொதுவான ஆசாரியன் உடையில், கர்த்தருடையப் பெட்டியின் முன் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடனமாடினார், அவர் கர்த்தர் மீது கொண்டிருந்த அன்பையும் பக்தியையும் விளக்கினார் (2 சாமுவேல் 6:14).
“கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.”
2 சாமுவேல் 6:16 ஆயினும்கூட, இந்த மனத்தாழ்மை மற்றும் ஊக்கமான ஆராதனையை தேவன் நம்மிடமிருந்து விரும்புகிறார் - அவருடைய ராஜரீக ஆசாரியத்துவம் (1 பேதுரு 2:9).
தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஆராதிப்பதற்கு ஒன்றுகூடும்போது, உலகப் பிராகாரமானப் பட்டங்களும் பதவிகளும் ஒன்றும் இல்லாத ஒரு தெய்வீக சபைக்குள் நுழைகிறோம். அவர் முன்னிலையில், நாம் வங்கியாளர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்கள் அல்ல; நாம் நமது ஆசாரியப் பாத்திரத்தில் ஒன்றுபட்டுள்ளோம், நமது ராஜாவிற்கு துதியை செலுத்துகிறோம். ஒவ்வொரு விசுவாசியும், அவிக்குரிய சமத்துவத்தின் ஆடையை அணிந்து, ராஜாதி ராஜாவை தேவாதி தேவனை மகிமைப்படுத்தி ஒருமித்த குரலை உயர்த்தும் இடம்.
பூமிக்குரிய தேவாலயம் பரலோக சிம்மாசன அறையின் பிரதிபலிப்பாகும். இது பலதரப்பட்ட பின்னணிகளும் நிலைகளும் இணக்கமான ஆராதனையில் ஒன்றிணைந்து, பரலோக ராஜ்யத்தின் சாரத்தை உள்ளடக்கி, ஒவ்வொரு பழங்குடியினரும், மொழியினரும், தேசமும் ஆட்டுக்குட்டியானவரிடம் முன் நின்று, நித்திய துதிகளை வழங்குவார்கள் (வெளிப்படுத்துதல் 7:9).
வெளிப்படுத்தல் 4:10 ல் வேதம் கூறுகிறது, “இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:”
அவ்வாறே, உலகப் பாகுபாடுகளைக் களைந்து, ஆவிக்குரிய ஒற்றுமை என்ற ஆடைகளை அணிந்துகொண்டு, பிரதான ஆசாரியனாகிய இயேசுவின் பிரசன்னத்தில் நிரம்பி இருக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்று, ஆராதனைக்கான உங்கள் அணுகுமுறையை ஆராயுங்கள். நீங்கள் உங்களின் ‘ராஜரீக அங்கிகளை’ பற்றிக்கொண்டிருக்கிறீர்களா அல்லது கலப்படமற்ற ஆராதனையில் ராஜரீக ஆசாரியத்துவத்தில் சேருவதற்கு ‘சணல்நூல் ஏபோத்தைத்’ உடுத்திக்கொள்ள விரும்புகிறீர்களா?
Bible Reading: Matthew 23-24
ஜெபம்
ஆண்டவரே, எங்கள் உலக அங்கிகளைக் களைந்து, உமது ஆசாரியராக எங்கள் பங்கைத் தழுவ கிருபை செய்வீராக. உமது ராஜ்யத்தில் ஒவ்வொரு விசுவாசியையும் ஒரு சக ஆசாரியக்கூட்டமாய் பார்த்து, எங்கள் இருதயங்கள் ஆராதனையில் ஒன்றுபடட்டும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● தேவனின் அன்பை அனுபவிப்பது● விசுவாசம்: தேவனை பிரியப்படுத்த ஒரு உறுதியான பாதை
● கத்தரிக்கும் பருவங்கள்- 3
● மரியாதையும் மதிப்பும்
● வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் அரணான இடங்களைக் கையாளுதல்
● அவர் மூலம் வரம்புகள் இல்லை
● தேவனுடைய ஏழு ஆவிகள்
கருத்துகள்